Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, August 18
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»ஒடுக்கப்பட்டோர் தலைநிமிர தொடர்ந்து களத்தில் நிற்போம்: பிறந்தநாள் விழாவில் திருமாவளவன் உறுதி
    மாநிலம்

    ஒடுக்கப்பட்டோர் தலைநிமிர தொடர்ந்து களத்தில் நிற்போம்: பிறந்தநாள் விழாவில் திருமாவளவன் உறுதி

    adminBy adminAugust 18, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஒடுக்கப்பட்டோர் தலைநிமிர தொடர்ந்து களத்தில் நிற்போம்: பிறந்தநாள் விழாவில் திருமாவளவன் உறுதி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: ஒடுக்​கப்​பட்​ட​வர்​களின் தலைநிமிர்​வுக்​காக தொடர்ந்து களத்​தில் நிற்​போம் என்று விசிக தலை​வர் திரு​மாவளவன் தெரி​வித்​தார். விசிக தலை​வர் திரு​மாவளவனின் 63-வது பிறந்​த​நாள் நேற்று கொண்​டாடப்​பட்​டது. இதை முன்​னிட்​டு, சென்னை காம​ராஜர் அரங்​கத்​தில் ‘மதச்​சார்​பின்மை காப்​போம்’ என்ற கருப்​பொருளு​டன் பல்​வேறு நிகழ்ச்​சிகள் நடை​பெற்​றன. மநீம தலை​வர் கமல்​ஹாசன் உள்​ளிட்​டோர் பங்​கேற்று வாழ்த்தி பேசினர்.

    இதில் ஏற்​புரை நிகழ்த்தி திரு​மாவளவன் பேசி​ய​தாவது: விசிக என்​பது தமிழகத்​தின் தவிர்க்க முடி​யாத சக்​தி, தமிழகத்​தின் எதிர்​காலம் என்​ப​தை, இந்த விழா​வில் பங்​கேற்ற ஒவ்​வொரு​வரும் ஆற்​றிய உரை உறு​திப்​படுத்தி உள்​ளது. நாம் மேலும் தீவிர​மாக செயல்பட வேண்​டும் என்ற உணர்வை இது தரு​கிறது. ஒடுக்​கப்​பட்​ட​வர்​களின் தலை நிமிர்​வுக்​காக நாம் களத்​தில் நிற்​கிறோம், தொடர்ந்து நிற்​போம்.

    இந்த நிலை​யில், தூய்​மைப் பணி​யாளர் பிரச்​சினை​யில் திரு​மாவளவன் ஏன் அரசை எதிர்த்து போ​ராட​வில்லை என்று விமர்​சிக்​கின்​றனர். குப்பை அள்​ளுவோரை பணி நிரந்​தரம் செய்​து, நீங்​கள் தொடர்ந்து அந்த தொழிலையே செய்து கொண்​டிருங்​கள் என்று சொல்​வது எந்த வகை​யிலும் ஏற்​புடையது அல்ல. இதை நாம் சொன்​னால் எதி​ராக பேசுவ​தாக கருது​வார்​கள். அதனாலேயே, நாமும் பணி நிரந்​தரம் செய்ய வேண்​டும் என்று சொல்ல நேர்ந்​தது.

    வாக்​குரிமையை பறிக்​கும் முயற்​சி​யில் பாஜக ஈடு​பட்டு வரு​கிறது. ஆனால், அவர்​களை யாரும் விமர்​சிப்​பது இல்​லை. ஆனால், ‘திரு​மாவளவன் இரண்டு சீட்​டுக்​காக போய் நிற்​கிறார்’ என்​கின்​றனர். அது எங்​கள் விருப்​பம். எந்த கூட்​டணி என்​பதை நாங்​கள்​தான் முடிவு செய்​வோம். அரசி​யல் நகர்​வு​களை நாங்​களே தீர்​மானிப்​போம். யாரும் என்னை தடுக்க முடி​யாது. யாராலும் விலை பேச முடி​யாது.

    நாங்​கள் திமுகவோடு இணைந்து பயணிப்​ப​தற்​கு, அம்​பேத்​கர், பெரி​யார் கருத்​தி​யலை பின்​பற்​று​வதே காரணம். திமுக கூட்​ட​ணி, அதி​முக கூட்​டணி என்​ப​தல்ல விஷ​யம். மதச்​சார்​புள்ள கூட்​ட​ணி, மதச்​சார்​பற்ற கூட்​டணி என்​பதே நாடு முழு​வதும் உள்ள முக்கியமான அரசி​யல். மதச்​சார்​பின்மை காப்​போம் என்ற கருத்​தி​யலை மக்​களிடம் கொண்​டு​போய் சேர்ப்​ப​தன் மூல​மாகவே மதச்​சார்​பற்ற முற்​போக்கு கூட்​ட​ணி​யின் வெற்​றியை நாம் மேலும் உறு​திப்​படுத்த முடி​யும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

    தலை​வர்​கள் வாழ்த்து: இதற்​கிடையே, பல்​வேறு தலை​வர்​களும் திரு​மாவளவனுக்கு பிறந்​த​நாள் வாழ்த்து தெரி​வித்​துள்​ளனர். அவர்​கள் கூறி​யுள்​ள​தாவது:

    மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல்​காந்​தி: அனை​வரும் அதி​காரம், சம உரிமை, கண்​ணி​யம் பெறு​வதற்கு நாம் ஒன்​று​பட்டு நிற்​போம்.

    முதல்​வர் ஸ்டா​லின்: ஆழ்ந்த அறி​வும், தெளி​வான சிந்​தனை​யும், உழைக்​கும் மக்​களின் நலன் காக்க உரமாகும் தியாக எண்​ண​மும் கொண்ட அருமை சகோ​தரர் திரு​மாவளவனுக்கு பிறந்​த​நாள் வாழ்த்​துகள். நமது லட்​சி​யப் பயணத்​துக்கு துணை​யாக வரும் அவர், மகிழ்ச்​சி​யுட​னும், உடல்​நலத்​துட​னும் வாழ வாழ்த்​துகிறேன்.

    துணை முதல்​வர் உதயநி​தி: மதச்​சார்​பின்​மை, சமூகநீதி காக்​கும் களத்​தில் உறு​தி​யாய் நிற்​கும் விசிக தலை​வர் திரு​மாவளவனின் சமூக, அரசி​யல் பணி​கள் என்​றும் நிலைத்​திருக்​கும். இவ்​வாறு அவர்​கள் தெரி​வித்​துள்​ளனர்.

    முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம், தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை, தி​முக துணை பொதுச் செய​லா​ளர் கனி​மொழி எம்.பி. அமமுக பொதுச் செய​லா​ளர் டிடிவி தினகரன், நாம் தமிழர்​ கட்​சி தலை​மை ஒருங்​கிணைப்​பாளர்​ சீமான்​ உள்​ளிட்​டோரும்​ வாழ்த்​து தெரிவித்துள்ளனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்கும் உத்தரவை எதிர்த்து சென்னையில் நடந்த பேரணி!

    August 18, 2025
    மாநிலம்

    தனி​யார் தேயிலை தோட்​டத்​தில் பெண் சிறுத்தை உடல் மீட்பு

    August 18, 2025
    மாநிலம்

    திமுக கூட்டணி கட்சிகள் ஆட்​சியில் பங்கு கேட்கவில்லை: தவாக தலைவர் வேல்முருகன் கருத்து

    August 18, 2025
    மாநிலம்

    அவதூறுகளைப் பரப்பி தமிழகத்தின் மொழி, இன உணர்வை அணையாமல் பார்த்துக் கொள்கிறார் ஆளுநர்: முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

    August 18, 2025
    மாநிலம்

    4 ஆண்டுகளில் நிறைவேற்றாததை 7 மாதத்தில் நிறைவேற்றுவார்களா? – திமுக மீது இபிஎஸ் விமர்சனம்

    August 18, 2025
    மாநிலம்

    சாதிய படுகொலைகளை விசாரிக்க தனி விரைவு நீதிமன்றம் அமைக்க வேண்டும்: கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

    August 18, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஆசிய கோப்பை தொடருக்கான பாக். அணி அறிவிப்பு: ஓரங்கட்டப்பட்ட பாபர் அசம், ரிஸ்வான்
    • அஜித்தின் 64-வது படம் எப்படியிருக்கும்? – ஆதிக் ரவிச்சந்திரன் தகவல்
    • தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்கும் உத்தரவை எதிர்த்து சென்னையில் நடந்த பேரணி!
    • உள்நாட்டு பொருட்களை மட்டுமே விற்க வேண்டும்: வியாபாரிகளிடம் பிரதமர் மோடி வேண்டுகோள்
    • முடி வளர்ச்சிக்கான முட்டைகள்: முடி மெல்லியதாக நிறுத்த முட்டைகளை எவ்வாறு பயன்படுத்துவது – இந்தியாவின் நேரங்கள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.