Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, August 18
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»அரசியல் நோக்கங்களுக்காக தேர்தல் ஆணையம் குறிவைக்கப்படுகிறது: தலைமை தேர்தல் ஆணையர்
    தேசியம்

    அரசியல் நோக்கங்களுக்காக தேர்தல் ஆணையம் குறிவைக்கப்படுகிறது: தலைமை தேர்தல் ஆணையர்

    adminBy adminAugust 17, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அரசியல் நோக்கங்களுக்காக தேர்தல் ஆணையம் குறிவைக்கப்படுகிறது: தலைமை தேர்தல் ஆணையர்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: அரசியல் நோக்கங்களுக்காக தேர்தல் ஆணையம் குறிவைக்கப்படுவதாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

    பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதனை முன்வைத்து இன்று முதல் 16 நாட்கள் ராகுல் காந்தி, பிஹாரில் ‘வாக்காளர் அதிகார நடைபயணம்’ நடத்துகிறார்.

    இந்த நிலையில், புதுடெல்லியில் இன்று தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோருடன் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.

    அப்போது, “அரசியல் நோக்கங்களுக்காக வாக்காளர்களை குறிவைக்கும் ஒரு ஏவுதளமாக தேர்தல் ஆணையம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், தேர்தல் ஆணையம் வாக்காளர்களுடன் உறுதியாக நிற்கிறது. தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரை, ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. எங்களுக்கு எல்லா கட்சிகளும் ஒன்றுதான்.

    தேர்தல் ஆணையம் அதன் அரசியலமைப்பு பொறுப்பிலிருந்து பின்வாங்காது. வாக்கு திருட்டு போன்ற முறையற்ற வார்த்தைகளை பயன்படுத்துவது அரசியலமைப்பை அவமதிப்பதற்குச் சமம்.

    தரவுத்தளத்தில் திருத்தங்கள் செய்வதற்கான அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்வதற்காக வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் தொடங்கப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியலில் ஆட்சேபனைகளைத் தெரிவிக்க ஒரு மாத கால அவகாசம் உள்ளது. அதில் ஏதேனும் பிழைகள் இருந்தால் குறிப்பிடுமாறு அரசியல் கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்தோம். தேர்தல் ஆணையத்தின் கதவுகள் எப்போதும் அனைவருக்கும் சமமாக திறந்திருக்கும்.

    அனைத்து வாக்காளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் களத்தில் வெளிப்படையாகப் பணியாற்றி வருகின்றனர். இந்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் குரல் அவர்களின் கட்சிகளின் தலைமையைச் சென்றடையவில்லை அல்லது தவறான தகவல்களைப் பரப்பும் முயற்சியில் அடிப்படை யதார்த்தங்கள் புறக்கணிக்கப்படுகின்றன என்பது கவலைக்குரிய விஷயம்.

    மின்னணு வாக்காளர் பட்டியலைப் பொறுத்தவரை, இது வாக்காளர் தனியுரிமையை மீறுவதற்கு வழிவகுக்கும் என்று உச்ச நீதிமன்றம் 2019 இல் கூறியது. சில நாட்களுக்கு முன்பு பல வாக்காளர்களின் புகைப்படங்கள் அவர்களின் அனுமதியின்றி ஊடகங்களில் வெளியிடப்பட்டதை நாங்கள் கண்டோம். தேர்தல் ஆணையம் எந்த வாக்காளரின் சிசிடிவி காட்சிகளையும் பகிர்ந்து கொள்ள வேண்டுமா?.

    மக்களவைத் தேர்தலுக்காக 1 கோடிக்கும் மேற்பட்ட அதிகாரிகள், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பூத்-லெவல் முகவர்கள் மற்றும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் பணிபுரிந்தனர். இவ்வளவு வெளிப்படையான செயல்முறையுடன், இவ்வளவு மக்கள் முன்னிலையில் யாராவது வாக்குகளைத் திருட முடியுமா?. இரட்டை வாக்களிப்பு பற்றிய சில குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன, ஆனால் நாங்கள் ஆதாரம் கேட்டபோது, எங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. இதுபோன்ற குற்றச்சாட்டுகள் தேர்தல் ஆணையத்தையோ அல்லது எந்த வாக்காளரையோ பயமுறுத்துவதில்லை.

    அரசியல் காரணங்களுக்காக வாக்காளர்களை குறிவைக்க தேர்தல் ஆணையம் ஒரு ஏவுதளமாகப் பயன்படுத்தப்படும்போது, அனைத்து வாக்காளர்களுடனும் நாங்கள் உறுதியாக நிற்கிறோம் என்பதை தெளிவுபடுத்துகிறோம்” என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் பாஜக கூட்டணி வேட்பாளராக அறிவிப்பு: 21-ம் தேதி வேட்புமனு தாக்கல் 

    August 18, 2025
    தேசியம்

    சொத்துக் குவிப்பு வழக்கு மறுவிசாரணை தடை கோரி அமைச்சர் பெரியசாமி மேல்முறையீடு: உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை

    August 18, 2025
    தேசியம்

    என்டிஏ கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு!

    August 17, 2025
    தேசியம்

    “அறிவுத்திறனால் பொது வாழ்வில் தன்னை வேறுபடுத்திக் காட்டியவர்” – சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து 

    August 17, 2025
    தேசியம்

    டி.கே.சிவகுமார்தான் அடுத்த முதல்வர் என்று கூறிய எம்எல்ஏவுக்கு காங்கிரஸ் தலைமை நோட்டீஸ்!

    August 17, 2025
    தேசியம்

    ‘பிஹார் தேர்தலை திருட புதிய சதி’ – வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து ராகுல் குற்றச்சாட்டு

    August 17, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சென்னை அம்பத்தூரில் திடீரென ஏற்பட்ட ராட்சத பள்ளம்: வாகனங்கள் விழுந்தன
    • ஆப்டிகல் மாயை: 23 களின் கடல் ஒரு ’22’ ஐ மறைக்கிறது, அதை எவ்வளவு வேகமாக கண்டுபிடிக்க முடியும்? | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சி.பி.ராதாகிருஷ்ணனை குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக பாஜக அறிவிப்பு – குடும்பத்தினர் நெகிழ்ச்சி 
    • அல்கலைன் நீர் புற்றுநோயைத் தடுக்க அல்லது குணப்படுத்த முடியுமா:? சிறந்த புற்றுநோயியல் நிபுணர் விளக்குகிறார் – இந்தியாவின் நேரங்கள்
    • குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் பாஜக கூட்டணி வேட்பாளராக அறிவிப்பு: 21-ம் தேதி வேட்புமனு தாக்கல் 

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.