Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, August 18
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»‘பிஹார் தேர்தலை திருட புதிய சதி’ – வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து ராகுல் குற்றச்சாட்டு
    தேசியம்

    ‘பிஹார் தேர்தலை திருட புதிய சதி’ – வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து ராகுல் குற்றச்சாட்டு

    adminBy adminAugust 17, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘பிஹார் தேர்தலை திருட புதிய சதி’ – வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து ராகுல் குற்றச்சாட்டு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சசாரம்: ‘தேர்தல் ஆணையம் பாஜகவுடன் இணைந்து தேர்தல்களைத் “திருடுகிறது” என்பதை முழு நாடும் இப்போது அறிந்திருக்கிறது. வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தத்தில் வாக்காளர்களை சேர்த்தல் மற்றும் நீக்குதல் மூலம் பிஹார் சட்டமன்றத் தேர்தல்களைத் திருட சதி நடக்கிறது’ என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

    மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று பிஹாரின் சசாரத்தில் இருந்து தனது 1,300 கி.மீ ‘வாக்காளர் அதிகார நடைபயணத்தை’ தொடங்கினார். இதன் தொடக்க நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, “பிஹாரில் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நடைபெறவுள்ள ‘வாக்காளர் அதிகார நடைபயணம்’ அரசியலமைப்பைக் காப்பாற்றுவதற்கான போராட்டம். பிஹாரில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மூலம் வாக்காளர்களை நீக்கி, சேர்த்து வாக்குகளை “திருட” ஒரு “புதிய சதி” நடக்கிறது.

    தேர்தல் ஆணையம் பாஜகவுடன் இணைந்து நாடு முழுவதும் சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்களை திருடுகின்றன. மேலும், பிஹாரில் தேர்தலைத் திருட சிறப்பு தீவிர திருத்தம் மூலம் வாக்காளர்களை நீக்கி, சேர்ப்பதே அவர்களின் கடைசி சதி.

    தேர்தல் ஆணையம் என்ன செய்கிறது, அது எப்படி வாக்கு திருட்டை செய்கிறது என்பதை இப்போது முழு நாடும் அறிந்திருக்கிறது. ‘வாக்கு திருட்டு’ குறித்த எனது செய்தியாளர் சந்திப்பிற்குப் பிறகு ஒரு பிரமாணப் பத்திரத்தை சமர்ப்பிக்க தேர்தல் ஆணையம் என்னைக் கேட்டது. ஆனால் பாஜக தலைவர்கள் அதைச் செய்யும்படி கேட்கவில்லை.

    பிஹாரில் தேர்தலை திருட நாங்கள் அனுமதிக்க மாட்டோம். ஏழைகளுக்கு அவர்களின் வாக்குரிமை மட்டுமே உள்ளது, அதை பறிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். ஒவ்வொரு தேர்தலிலும், பாஜக வெற்றி பெறுகிறது. மகாராஷ்டிராவில், அனைத்து கருத்துக் கணிப்புகளும் இண்டியா கூட்டணி வெற்றி பெறும் என்று கூறின. 2024 மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிராவில் எங்கள் கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால் அதே மகாராஷ்டிராவில் நான்கு மாதங்களுக்குப் பிறகு, ஒரு கோடி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதால், பாஜக கூட்டணி சட்டப்பேரவை தேர்தலில் அமோக வெற்றி பெற்றது. மேலும், இதுபோன்ற வாக்காளர் சேர்ப்பு நடந்த இடங்களில் எல்லாம் பாஜக வெற்றி பெற்றது” என்று அவர் கூறினார்.

    பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. இதனை முன்வைத்து இன்று முதல் 16 நாட்கள் ராகுல் காந்தி, பிஹாரில் ‘வாக்காளர் அதிகார நடைபயணம்’ நடத்துகிறார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் பாஜக கூட்டணி வேட்பாளராக அறிவிப்பு: 21-ம் தேதி வேட்புமனு தாக்கல் 

    August 18, 2025
    தேசியம்

    சொத்துக் குவிப்பு வழக்கு மறுவிசாரணை தடை கோரி அமைச்சர் பெரியசாமி மேல்முறையீடு: உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை

    August 18, 2025
    தேசியம்

    என்டிஏ கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு!

    August 17, 2025
    தேசியம்

    “அறிவுத்திறனால் பொது வாழ்வில் தன்னை வேறுபடுத்திக் காட்டியவர்” – சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து 

    August 17, 2025
    தேசியம்

    டி.கே.சிவகுமார்தான் அடுத்த முதல்வர் என்று கூறிய எம்எல்ஏவுக்கு காங்கிரஸ் தலைமை நோட்டீஸ்!

    August 17, 2025
    தேசியம்

    அரசியல் நோக்கங்களுக்காக தேர்தல் ஆணையம் குறிவைக்கப்படுகிறது: தலைமை தேர்தல் ஆணையர்

    August 17, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சென்னை அம்பத்தூரில் திடீரென ஏற்பட்ட ராட்சத பள்ளம்: வாகனங்கள் விழுந்தன
    • ஆப்டிகல் மாயை: 23 களின் கடல் ஒரு ’22’ ஐ மறைக்கிறது, அதை எவ்வளவு வேகமாக கண்டுபிடிக்க முடியும்? | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சி.பி.ராதாகிருஷ்ணனை குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக பாஜக அறிவிப்பு – குடும்பத்தினர் நெகிழ்ச்சி 
    • அல்கலைன் நீர் புற்றுநோயைத் தடுக்க அல்லது குணப்படுத்த முடியுமா:? சிறந்த புற்றுநோயியல் நிபுணர் விளக்குகிறார் – இந்தியாவின் நேரங்கள்
    • குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் பாஜக கூட்டணி வேட்பாளராக அறிவிப்பு: 21-ம் தேதி வேட்புமனு தாக்கல் 

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.