Last Updated : 17 Aug, 2025 12:33 AM
Published : 17 Aug 2025 12:33 AM
Last Updated : 17 Aug 2025 12:33 AM

சென்னை: தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான முதல் சுற்று பொது கலந்தாய்வு https:tnmedicalselection.net என்ற சுகாதாரத் துறை இணையதளத்தில், கடந்த ஜூலை 30-ம் தேதி தொடங்கி நேற்று முடிவடைந்தது. இன்று இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இறுதி பட்டியல் நாளை (ஆக.18) வெளியிடப்படவுள்ளது. கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு பெற்றதற்கான ஆணையை நாளை முதல்24-ம் தேதி நண்பகல் 12 மணி வரை மாணவர்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கலந்தாய்வு முடிவுகள் நாளை அறிவிக்கப்படும் என்று மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் தெரிவித்துள்ளது.
FOLLOW US
தவறவிடாதீர்!