Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, August 16
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»ஆட்சியமைக்க ஓய்வின்றி களப்பணியாற்ற வேண்டும்: திமுக மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு
    மாநிலம்

    ஆட்சியமைக்க ஓய்வின்றி களப்பணியாற்ற வேண்டும்: திமுக மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு

    adminBy adminAugust 16, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஆட்சியமைக்க ஓய்வின்றி களப்பணியாற்ற வேண்டும்: திமுக மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: மீண்​டும் நாம் ஆட்​சி​யமைக்க களம் தயா​ராகி​விட்​ட​தால் நானும் ஓய்​வெடுக்க போவ​தில்​லை.; உங்​களை​யும் ஓய்​வெடுக்க அனு​ம​திப்​ப​தில்லை என்று திமுக மாவட்ட செய​லா​ளர்​கள் கூட்​டத்​தில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​தார். திமுக மாவட்ட செய​லா​ளர்​கள் கூட்​டம், சென்னை தேனாம்​பேட்​டை​யில் உள்ள திமுக தலைமை அலு​வல​க​த்​தில் நேற்று நடந்​தது.

    இந்த கூட்​டத்​தில் திமுக தலை​வரும், தமிழக முதல்​வரு​மான மு.க.ஸ்​டா​லின் பேசி​ய​தாவது: சட்​டப்​பேரவை தேர்​தலை எதிர்கொள்ளும் வகை​யில் தொகுதி பிரச்​சனை​களை களை​ய​வும், மக்​கள் குறை​களை தீர்க்​க​வும் ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’, ‘நலம் காக்​கும் ஸ்டா​லின், ‘தா​யு​மானவர் திட்​டம்’ ஆகிய​வற்றை செயல்​படுத்தி வரு​கிறோம். நலத்​திட்​டங்​கள் மூலம் மக்​கள் மத்​தி​யில் நமது செல்​வாக்கு அதி​கரித்​துள்​ளது. நாள்​தோறும் கட்சி நிர்​வாகி​கள் மக்​களை சந்​தித்​துக் கொண்டே இருக்க வேண்​டும்.

    தற்​போது பாஜக அரசு தேர்​தல் ஆணை​யம் மூலம் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தம் மூலம் என்​னென்ன அட்​டூழி​யங்​களை பிஹாரில் மேற்​கொண்டு வரு​கிறது என்​பதை கண்​கூ​டாக பார்க்​கிறோம். வெளி​நாட்டு முதலீடு​களை ஈர்க்​கும் பொருட்டு கடந்த ஆண்​டு​களில் துபாய், சிங்​கப்பூர், ஜப்​பான், ஸ்பெ​யின், அமெரிக்கா உள்​ளிட்ட நாடு​களுக்கு பயணம் மேற்​கொண்​டு, அங்​குள்ள முதலீட்​டாளர்​களு​டன் பேசி​யதன் விளை​வாக தமிழகத்​துக்கு ரூ.10 லட்​சம் கோடி அளவி​லான முதலீடு​கள் கொண்​டு​வரப்​பட்​டு, பல்வேறு பன்​னாட்டு நிறு​வனங்​கள் தங்​களது நிறு​வனங்​களை தொடங்கி உள்​ளன.

    அதன் காரண​மாக சுமார் 30 லட்​சம் பேருக்கு நேரடி​யாக​வும், மறை​முக​மாக​வும் வேலை​வாய்ப்பு பெருகி உள்​ளது. மத்​திய அரசு வெளி​யிட்ட தகவல்​படி இந்​தி​யா​விலேயே பொருளா​தா​ரத்​தில் இரட்டை இலக்க வளர்ச்​சியை எட்​டிய ஒரே மாநிலம் தமிழகம்தான். வரும் செப்​டம்​பர் மாதம் ஜெர்​மனி, இங்​கிலாந்து நாடு​களுக்கு சுற்​றுப்​பயணம் மேற்​கொண்டு முதலீடு​களை ஈர்த்து வர உள்​ளேன்.

    வரும் நாட்​களில் திமுக அரசு மேற்​கொள்​ளும் நடவடிக்​கைகளால், தமிழகத்​தின் வளர்ச்சி பிற வளர்ந்த நாடு​களுக்கு இணை​யாக உயரும் என்​பதை உறு​தி​யாக சொல்லி கொள்​கிறேன். நானும் ஓய்​வெடுக்க போவ​தில்​லை. உங்​களை​யும் ஓய்​வெடுக்க அனு​ம​திப்​ப​தில்​லை. மீண்​டும் நாம் ஆட்​சி​யமைக்க களம் தயா​ராகி​விட்​டது முழு வீச்​சுடன் பணி​யாற்​றிடு​வோம்​. இவ்​வாறு அவர் தெரிவித்தார்​.

    தீர்மானங்கள்: முன்னதாக நடைபெற்ற திமுக மாவட்ட செய​லா​ளர்​கள் கூட்​டத்தில், கட்​சி​யின் பொதுச்​செய​லா​ள​ரும், நீர்​வளம் மற்​றும் சட்​டத்​துறை அமைச்​சரு​மான துரை​முரு​கன், பொருளாள​ரும், மக்​களவை உறுப்​பினரு​மான டி.ஆர்​.​ பாலு, முதன்​மைச் செய​லா​ள​ரும், நகராட்சி நிர்​வாகத்​துறை அமைச்​சரு​மான கே.என்​.நேரு, துணை பொது செய​லா​ளர்​களான ஊரக வளர்ச்​சித்​துறை அமைச்​சர் இ.பெரிய​சாமி, எம்​.பி.க்​கள் திருச்சி சிவா, ஆ.ரா​சா, அந்​தி​யூர் செல்​வ​ராஜ், கனி​மொழி, அமைப்​புச் செய​லா​ளர் ஆர்​.எஸ். பார​தி, செய்தி தொடர்பு தலை​வர் டி.கே.எஸ்​.இளங்​கோவன், இணை அமைப்பு செய​லா​ளர் அன்​பகம் கலை, துணை அமைப்பு செய​லா​ளர்​கள் ஆஸ்​டின், தாயகம் கவி, மற்​றும் மாவட்ட செய​லா​ளர்​கள் கலந்து கொண்​டனர்.

    இந்த கூட்​டத்​தில் நிறைவேற்​றப்​பட்ட தீர்​மானங்​கள் வரு​மாறு: தேர்​தல் நடை​முறைக்கு அடிப்​படை ஆவணமே வாக்​காளர் பட்​டியல்​தான் என்ற நிலை​யில், அந்த வாக்​காளர் பட்​டியலை துல்​லிய​மாக​வும், தவறுகள் இல்​லாமலும் தயாரிப்​பது சுதந்​திர​மான மற்​றும் நேர்​மை​யான தேர்​தலுக்கு மிக முக்​கிய​மானது.

    தேர்​தல் ஜனநாயகத்தை சிதைக்​கும் பிஹார் சிறப்பு தீவிர திருத்​தத்​தினை எதிர்த்து திமுக உள்​ளிட்ட இண்​டியா கூட்​டணி கட்​சிகள் அனைத்​தும் கடுமை​யான எதிர்ப்​பினை பதிவு செய்த நிலை​யிலும், உச்ச நீதி​மன்​றமே எச்​சரித்த பிறகும் அம்​மாநிலத்​தில் 65 லட்​சம் வாக்​காளர்​களை, தன்​னிச்​சை​யாக தேர்​தல் ஆணை​யம் நீக்​கி​யிருப்​பது ஜனநாயக விரோத நடவடிக்​கை​யாகும்.

    பாஜக அரசும் இந்​திய தலைமை தேர்​தல் ஆணை​ய​மும் தொடர்ந்து மேற்​கொள்​ளும் ஒரு சார்​பான நடவடிக்​கைகளுக்கு இந்த கூட்​டம் கடும் கண்​டனத்தை தெரி​வித்து கொள்​கிறது. தேர்​தலை நடத்​து​வது மட்​டுமல்ல, அதற்​கான வாக்​காளர் பட்​டியலை தயாரிப்​பதும் தன்​னாட்​சிபெற்ற அமைப்​பிடம் இருக்க வேண்​டும் என அரசி​யல் சட்​டத்​திலேயே தேர்​தல் ஆணை​யத்​துக்கு முழு பொறுப்​பும் ஒப்​படைக்​கப்​பட்​டுள்​ளது.

    ஆனால், தேர்​தல் ஆணை​யர்​களை நியமிக்​கும் தேர்வு குழு​விலிருந்து உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி நீக்​கப்​பட்​டபிறகு, தேர்​தல் நடத்​து​வ​தில் மட்​டுமல்ல, வாக்​காளர் பட்​டியலைத் தயாரிப்​ப​தி​லும் தேர்​தல் ஆணை​யம் அரசி​யல் சாயம் பூசி கொண்​டு, பாஜக அரசுடன் கைகோத்து நிற்​பது ஜனநாய கத்தை கேள்விக்​குரிய​தாக ஆக்​கு​வது கவலை​யளிக்​கிறது.

    தமிழகம் உள்​ளிட்ட பிற மாநிலங்​களில் தேர்​தல் நடை​முறை​களை தொடங்​கும் முன்பே சுதந்​திர​மான மற்​றும் நேர்​மை​யான முறை​யில் வாக்​காளர் பட்​டியலை சரி​பார்த்து உறு​திப்​படுத்​தும் பணியை தேர்​தல் ஆணை​யம் நிறைவேற்​றிட வேண்​டும். இவ்வாறு இந்த கூட்டத்தில் தீர்​மானங்​கள்​ நிறைவேற்​றப்​பட்​டன.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாட்டம்: டெல்லியில் பிரதமர், சென்னையில் முதல்வர் தேசியக் கொடி ஏற்றி மரியாதை

    August 16, 2025
    மாநிலம்

    பேராசிரியர் காதர் மொகிதீனுக்கு தகைசால் தமிழர் விருது: சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

    August 16, 2025
    மாநிலம்

    மலைப்பகுதிகளில் விடியல் பேருந்து பயணம்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட 9 அறிவிப்புகள்  என்ன?

    August 16, 2025
    மாநிலம்

    ஆளுநரின் தேநீர் விருந்தை முதல்வர் புறக்கணிப்பு: தமிழகத்துக்கு எதிராக ஆளுநர் செயல்படுவதாக அமைச்சர் புகார்

    August 16, 2025
    மாநிலம்

    பிஹார் போல தில்லுமுல்லு செய்து தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்ற பாஜக முயற்சி: திருமாவளவன் குற்றச்சாட்டு

    August 15, 2025
    மாநிலம்

    மாநில கல்விக் கொள்கையின்படி பாடத்திட்டத்தை மேம்படுத்த வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவுறுத்தல்

    August 15, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாட்டம்: டெல்லியில் பிரதமர், சென்னையில் முதல்வர் தேசியக் கொடி ஏற்றி மரியாதை
    • ஆப்டிகல் மாயை: உங்கள் மூளை கடிகாரத்தை வெல்ல முடியுமா? “III” – டைம்ஸ் ஆஃப் இந்தியா என்ற கடலில் தனி “III” ஐக் கண்டறியவும்
    • பேராசிரியர் காதர் மொகிதீனுக்கு தகைசால் தமிழர் விருது: சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்
    • மலைப்பகுதிகளில் விடியல் பேருந்து பயணம்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட 9 அறிவிப்புகள்  என்ன?
    • ஆட்சியமைக்க ஓய்வின்றி களப்பணியாற்ற வேண்டும்: திமுக மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.