Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, August 16
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»பிஹார் போல தில்லுமுல்லு செய்து தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்ற பாஜக முயற்சி: திருமாவளவன் குற்றச்சாட்டு
    மாநிலம்

    பிஹார் போல தில்லுமுல்லு செய்து தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்ற பாஜக முயற்சி: திருமாவளவன் குற்றச்சாட்டு

    adminBy adminAugust 15, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பிஹார் போல தில்லுமுல்லு செய்து தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்ற பாஜக முயற்சி: திருமாவளவன் குற்றச்சாட்டு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சேலம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26-வது மாநில மாநாடு சேலம் நேரு கலையரங்கில் தொடங்கியது. 4 நாள் நடைபெறும் மாநாட்டின் முதல் நாளில் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்களின் அணிவகுப்பு மரியாதை, திருப்பூரில் இருந்து வந்த தியாகச்சுடர் பெறுதல், தியாகிகளுக்கு நினைவஞ்சலி ஆகியவை நடைபெற்றது.

    தொடர்ந்து, சுதந்திர தினத்தையொட்டி தேசியக் கொடியை முன்னாள் எம்எல்ஏ பழனிசாமி ஏற்றி, மரியாதை செலுத்தினார். பின்னர், தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் மூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார். மாநாடு தொடங்கியதும் மறைந்த தலைவர், முக்கிய பிரமுகர்களுக்கு அஞ்சலி தீர்மானம் வாசிக்கப்பட்டது.

    அரசியல் விளக்கவுரை கூட்டத்தை மாநிலச் செயலாளர் முத்தரசன் தொடங்கி வைத்தார். கட்சியின் தேசிய செயலாளர்கள் அமர்ஜித் கவுர், நாராயணன், ஆனி ராஜா, தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர்கள் வெங்கடாசலம், மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

    மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது: “திமுக தலைமையிலான இந்த கூட்டணி வலுவான கூட்டணி. சனாதனத்தை எதிர்க்கிற கூட்டணி. பாஜக, சங்பரிவாரங்களை தமிழகத்திற்குள் நுழையவிடாமல் தடுக்கும் கூட்டணி என்பதில் மாற்று கருத்து இல்லை . ஆனால் , தில்லுமுல்லு வேலைகளை செய்து நம்மை வீழ்த்த அவர்கள் முயற்சிக்கலாம். எப்படியெல்லாம் இவற்றை நாம் எதிர்கொள்ளப் போகிறோம், எப்படி அதை முறியடிக்க போகிறோம், இதை மக்களிடம் எப்படி அம்பலப்படுத்த போகிறோம். வலது சாரிகளை எதிர்கொள்வதற்கு இடதுசாரிகளின் வலிமை மென்மேலும் பெருக வேண்டிய தேவை உள்ளது.

    இடதுசாரிகளின் வலிமை என்பது, கம்யூனிஸ்ட் கட்சிகளின் கருத்தோடு இணைந்துது இயங்கக்கூடிய ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையாகும். அது சட்டமன்றத்தில் எத்தனை இடங்களில் வெற்றி பெறுவோம் என்பதில் இல்லை, நாடாளுமன்றத் தேர்தலில் எத்தனை இடங்களில் வெற்றி பெறுகிறோம் என்பதில் இல்லை. தேசிய அளவில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஒற்றுமையும் ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையும் ஒருங்கிணைக்கப்பட வேண்டிய, ஒன்று திரட்டப்பட வேண்டிய தேவைகள் தான் இன்று நம் முன் இருக்கின்ற சவாலாகும். அனைத்து ஜனநாயக கட்சிகளையும் அணி திரட்ட வேண்டிய பொறுப்பு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இருக்கிறது .உங்களோடு இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற புரிதலோடு இதனை பதிவு செய்கிறேன்.

    தேர்தல் ஆணையமும் பாஜகவும் சேர்ந்து கொண்டுபிஹாரில் திருட்டு வேலைகளை செய்து வருவதை நாம் பார்க்க முடிகிறது. அமித்ஷா, தமிழகத்திற்கு வரும் போது 2026-ம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தான் அமையும். கூட்டணி ஆட்சி உருவாகும் என்று திரும்பத் திரும்ப சொல்கிறார்.

    பிஹார் தில்லு முல்லு குறித்து, ராகுல் காந்தி ஆதாரத்துடன் விவரித்து இருக்கிறார். இதுபோல தில்லுமுல்லு வேலைகளை தமிழகத்திலும் அவர்கள் செய்ய முயலலாம். அதன் மூலம் ஆட்சியை கைப்பற்றலாம் என திட்டமிட்டு இருக்கிறார்கள் என்பதை இது காட்டுகிறது.

    கர்நாடகா, மகாராஷ்டிரா தேர்தல்களில் அவர்கள் பெற்ற வெற்றியின் பின்னால் இப்படிப்பட்ட தில்லுமுல்லு வேலைகள் நடந்திருக்க வாய்ப்புள்ளது என்று அரசியல் வல்லுநர்கள் அழுத்தமாக பேசுகிறார்கள். இவற்றை நாம் எதிர் கொள்ள வேண்டும். ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி அரசியலமைப்பு சட்டத்தை சிதைக்க பார்க்கிறார்கள். தேர்தல் ஆணையத்துடன் கூட்டு சேர்ந்து, ஆட்சி அதிகாரத்தை திருடுகிற முயற்சியை பாஜக சங்க பரிவார்கள் மேற்கொண்டுள்ளனர். அதை எதிர்கொள்ளும் வகையில், திமுக கூட்டணி வலுவாக இருக்கிறது.ஆனால் பிஹார் போன்று எஸ்ஐஆர் தில்லுமுல்லு வேலைகளை செய்து நம்மை வீழ்த்த அவர்கள் முயற்சிக்கலாம்.

    காங்கிரஸ், இடதுசாரிகள் இல்லாத பாரதம், திராவிட கட்சிகள் இல்லாத தமிழகம் என பாஜக வெளிப்படையாக பேசுகிற நிலை உள்ளது. அது தேர்தல் முழக்கம் அல்ல அரசியல் முழக்கமும் அல்ல. பாரம்பரிய கோட்பாடு பின்னணியாகும். பாசிசம் முற்றிப்போய் உள்ளது. அந்த பாசிசம் வீழ்த்தப்பட வேண்டும் என்பதை நேரடியாக சொல்லாமல் ஜனநாயகம் வெல்ல வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சொல்கிறது. இப்படிப்பட்ட களத்தில் விடுதலை சிறுத்தை உறுதுணையாக இருக்கும்” இவ்வாறு திருமாவளவன் பேசினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் மறைவு: ஜி.கே. வாசன் இரங்கல்

    August 16, 2025
    மாநிலம்

    புறவழிச் சாலைகளை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது: ஓபிஎஸ் வலியுறுத்தல்

    August 16, 2025
    மாநிலம்

    கீதை உபதேசத்தை மனதில்கொண்டு தர்மத்தை நிலைநாட்டுவோம்: பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து

    August 16, 2025
    மாநிலம்

    முதல்வர் கோப்பைக்கான போட்டிகள் குறித்த விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி: உதயநிதி தொடங்கி வைத்தார்

    August 16, 2025
    மாநிலம்

    அமைச்சர் ஐ.பெரியசாமி இல்லம், உறவினர் வீடுகளில் அமலாக்கத் துறை அதிரடி சோதனை!

    August 16, 2025
    மாநிலம்

    சோதனைகளை சாதனைகளாக மாற்ற வேண்டும்: விஐடி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கமல்ஹாசன் அறிவுரை

    August 16, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் மறைவு: ஜி.கே. வாசன் இரங்கல்
    • தைராய்டு, இதயம் மற்றும் ஊட்டச்சத்து சிக்கல்களின் சாம்பல் முடி எச்சரிக்கை: உங்கள் தலைமுடியில் குறைபாடுகள் மற்றும் உறுப்பு அழுத்தங்கள் எவ்வாறு காட்டுகின்றன | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • புறவழிச் சாலைகளை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது: ஓபிஎஸ் வலியுறுத்தல்
    • நீரிழிவு ஆபத்து குடும்பங்களில் இயங்குகிறது: ஒரு நபரின் ப்ரீடியாபயாட்டீஸ் முழு குடும்பத்திற்கும் ஆபத்தை எவ்வாறு குறிக்கலாம்
    • கீதை உபதேசத்தை மனதில்கொண்டு தர்மத்தை நிலைநாட்டுவோம்: பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.