Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, August 15
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»‘உங்களுடன் ஸ்டாலின்’, ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு
    மாநிலம்

    ‘உங்களுடன் ஸ்டாலின்’, ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

    adminBy adminAugust 15, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘உங்களுடன் ஸ்டாலின்’, ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ முகாம்​களில் பெறப்​படும் மனுக்​கள் மீது உரிய காலத்​தில் நடவடிக்கை மேற்​கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்​சி​யர்​களுக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அறி​வுறுத்​தி​னார். ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ மற்​றும் ‘நலம் காக்​கும் ஸ்டா​லின்’ திட்​டங்​களின் செய​லாக்​கம் குறித்து அனைத்து மாவட்ட ஆட்​சி​யர்​களு​டன் சென்னை தலை​மைச்​ செயலகத்தில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் காணொலி வாயி​லாக ஆய்வு நடத்​தி​னார்.

    கூட்​டத்​தில், ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ திட்​டம் மக்​களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வரு​வதை தொடர்ந்​து, இதற்​காக நன்கு திட்​ட​மிட்​டுப் பணி​யாற்றி வரும் மாவட்ட ஆட்​சி​யர்​கள் மற்​றும் அனைத்​துத் துறை அலு​வலர்​களை​யும் பாராட்​டி​னார். அதே​போன்​று, ‘நலம் காக்​கும் ஸ்டா​லின்’ திட்​ட​மும் மிகச் சிறப்​பாக நடை​முறைபடுத்​தப்​பட்டு வரு​வ​தால், அதற்​கான பணி​களில் ஈடு​பட்டு வரும் சுகா​தா​ரத்​துறை சார்ந்த மருத்​து​வர்​கள் மற்​றும் துறை அலு​வலர்​களை​யும் பாராட்​டி​னார்.

    தொடர்ந்​து, கூட்​டத்​தில் முதல்​வர் பேசி​ய​தாவது: மாவட்ட ஆட்​சி​யர்​கள் தாங்​கள் பெற்ற மனுக்​கள் மீது விரை​வாகத் தீர்வு காண வேண்​டும். குறிப்​பாக, வரு​வாய்த் துறை மற்​றும் ஊரக வளர்ச்​சித் துறை​களில் நிலு​வை​யில் உள்ள மனுக்​கள் மீது உடனடி​யாக நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

    முதி​யோர் ஓய்​வூ​தி​யம், பட்டா மாறு​தல், பட்​டா​வில் பெயர் திருத்​தம் ஆகியவை தொடர்​பான மனுக்​களில் நிலு​வை​யில் உள்ளவற்றை விரைந்து நடவடிக்கை எடுத்து பயனாளி​களுக்கு உரிய உதவி​களைச் செய்ய வேண்​டும். ‘நலம் காக்​கும் ஸ்டா​லின்’ முகாம்​களின் திட்ட ஏற்​பாடு​களில் ஒருசில இடங்​களில் ரத்​தப் பரிசோதனை முடிவு​கள் வழங்​கு​வ​தில் தாமதம், போக்​கு​வரத்து ஏற்​பாடு​கள் போன்​றவை குறித்து எனது கவனத்​துக்கு வந்​தது. அந்த குறைகளை சரி செய்ய வேண்​டும்.

    டோக்​கன் வழங்​கும் பகு​தி​களில் கூட்​டத்​தைக் கட்​டுப்​படுத்த அதிக கவுன்ட்​டர்​கள் ஏற்​படுத்த வேண்​டும். முகாம்​கள் நடப்​பது குறித்து பொது​மக்​கள் அறியும் வகை​யில் விளம்​பரங்​கள் செய்ய வேண்​டும். முகாம்​களில் பொது​மக்​களுக்கு குடிநீர் மற்​றும் கழிப்​பறை வசதி​கள் போது​மான அளவுக்கு ஏற்​படுத்த வேண்​டும்.

    இவற்​றையெல்​லாம், மாவட்ட ஆட்​சித் தலை​வர்​கள் கவனத்​தில் கொண்​டு, குறை​பாடு​கள் இல்​லாமல் ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ மற்றும் ‘நலம் காக்​கும் ஸ்டா​லின்’ முகாம்​களை நடத்த வேண்​டும். முகாம்​களில் பெறப்​படும் மனுக்​கள் மீது உரிய காலத்​தில் நடவடிக்கை மேற்​கொண்​டு, மனு​தா​ரர்​களின் கோரிக்​கைகளுக்​குத் தீர்வு கண்​டு, அவர்​களுக்​குத் தேவை​யான உதவி​களை செய்து தர வேண்​டும். இவ்​வாறு முதல்​வர் அறி​வுறுத்​தி​னார். இக்​கூட்​டத்​தில், அமைச்​சர் துரை​முரு​கன், துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின், பல்​வேறு துறை அமைச்​சர்​கள், தலை​மைச்​செயலர்​ நா.​முரு​கானந்​தம்​ உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    79-வது சுதந்திர தின விழா: ‘தகைசால் தமிழர்’ விருது காதர் மொகிதீனுக்கு வழங்கி கவுரவிப்பு

    August 15, 2025
    மாநிலம்

    புளித்துப் போன நாடகங்கள் போதும்; தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவும்: அன்புமணி

    August 15, 2025
    மாநிலம்

    சுழற்றி அடிக்கும் சொத்து வரி முறைகேடு: அதிமுகவினருக்கும் ஆபத்து? – மதுரைக்கு மேயராக மந்திரிகளை வட்டமிடும் கவுன்சிலர்கள்!

    August 15, 2025
    மாநிலம்

    நிதி பகிர்வில் மாநில உரிமையை மீட்க வேண்டிய தருணம் இது: சுதந்திர தின உரையில் முதல்வர் ஸ்டாலின் உறுதி

    August 15, 2025
    மாநிலம்

    தூய்மைப் பணிகளை தனியார் மயமாக்குவதை விசிக ஒருபோதும் ஏற்காது: திருமாவளவன்

    August 15, 2025
    மாநிலம்

    சென்னை உயர் நீதிமன்றத்தில் சுதந்திர தின விழா: தலைமை நீதிபதி கொடியேற்றினார்

    August 15, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • 79-வது சுதந்திர தின விழா: ‘தகைசால் தமிழர்’ விருது காதர் மொகிதீனுக்கு வழங்கி கவுரவிப்பு
    • ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தினத்தை கொண்டாடும் நாடுகளும்
    • ஜிஎஸ்டி வரிவிதிப்பில் வருகிறது அதிரடி மாற்றம் – பிரதமர் மோடி அறிவித்த தீபாவளி பரிசு!
    • ‘9.6 kbps டூ 5ஜி யுகம் வரை’ – 30 ஆண்டுகளில் இந்தியா கண்ட இணைய புரட்சி!
    • புளித்துப் போன நாடகங்கள் போதும்; தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவும்: அன்புமணி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.