Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, August 15
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»கரிசன கணேசன்… கண்டுகொள்ளாத அருண்மொழித்தேவன்! – கடலூர் மாவட்ட அரசியல் கணக்குகள்
    மாநிலம்

    கரிசன கணேசன்… கண்டுகொள்ளாத அருண்மொழித்தேவன்! – கடலூர் மாவட்ட அரசியல் கணக்குகள்

    adminBy adminAugust 15, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கரிசன கணேசன்… கண்டுகொள்ளாத அருண்மொழித்தேவன்! – கடலூர் மாவட்ட அரசியல் கணக்குகள்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் திட்டக்குடி தனி தொகுதி. அமைச்சர் கணேசன் தான் இப்போது இங்கு எம்எல்ஏ. திமுக-வை தவிர மற்ற பிரதான கட்சிகள் எதுவும் திட்டக்குடிக்கு பெரிதாக எந்தத் திட்டமும் வைத்திருக்காததால், தனிக்காட்டு ராஜாவாக வலம் வரும் கணேசன், 2026 தேர்தலிலும் இங்கே வெற்றிக்கொடி நாட்டுவதற்கான வேலைகளில் வேகமாக இருக்கிறார்.

    2011 வரை மங்களூர் தனி தொகு​தியாக இருந்த இந்தத் தொகு​தி​யில் 2001-ல் விசிக தலைவர் திரு​மாவளவன் திமுக சின்னத்​தில் நின்று வெற்றி​பெற்​றார். ஆனால், திமுக தலைமை​யுடன் ஏற்பட்ட கருத்து வேறு​பாட்​டால், 2004-ல் அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜி​னாமா செய்​தார். அதையடுத்து வந்த இடைத் தேர்​தலில், முன்​னாள் எம் எல்ஏ-வான கணேசன் திமுக வேட்​பாள​ராகப் போட்​டி​யிட்டு வெற்றி​பெற்​றார். அடுத்து வந்த 2006 பொதுத் தேர்​தலில் தற்போதைய காங்​கிரஸ் தலைவரான செல்​வப்​பெருந்தகை விசிக வேட்​பாளராக போட்​டி​யிட்டு வெற்றி​பெற்​றார். 2011 தொகுதி மறுசீரமைப்​பின் போது மங்களூர் தொகு​தி​யானது திட்​டக்​குடியாக மாறியது.

    2011-ல் இங்கு தேமு​தி​க-வைச் சேர்ந்த தமிழழகன் எம்எல்​ஏ​வா​னார். 2016-ல் மீண்​டும் கணேசன் எம்எல்ஏ ஆனார். கடந்த தேர்​தலிலும் மீண்​டும் கணேசனே வெற்றி​பெற்று, இப்போது தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்​பாட்டுத் துறைக்கு அமைச்​சராக இருக்​கிறார். இந்தத் தொகு​தி​யில் ஒன்றுக்கு நான்கு முறை எம்எல்​ஏ-​வாகி இருக்​கும் கணேசன். ஐந்தாவது முறை​யாக​வும் வெற்றிக்​கொடி நாட்ட தொகு​திக்​குள் பம்பர​மாய் சுற்றி வருகிறார்.

    1984-க்​குப் பிறகு நடைபெற்ற 7 சட்டப்​பேர​வைத் தேர்​தல்​களில் ஒரே ஒருமுறை மட்டுமே அதிமுக இங்கு போட்​டி​யிட்​டது. அப்போதும் அந்தக் கட்சி​யால் ஜெயிக்​க​முடிய​வில்லை. இதனால் இந்தத் தொகுதியை கூட்​ட​ணிக் கணக்​கில் வைத்​திருக்​கிறது அதிமுக. அதிமுக இங்கு பிரகாசிக்​க​ முடியாமல் இருப்​ப​தற்​குக் காரணம் தேர்​தலில் போட்​டி​யிடுமளவுக்கு பரிச்​சயமான முகங்கள் அந்தக் கட்சிக்கு இல்லாதது தான் என்கிறார்​கள். இன்னொரு பக்கம், கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலா​ளரான அருண்​மொழித்​தேவனும் கணேசனும் பள்ளித் தோழர்கள் என்ப​தால் பரஸ்​பரம் ஒருவரை ஒருவர் எதிர்த்து அரசியல் நடத்து​வ​தில்லை என்கிறார்​கள். இந்தப் புரிதலும் கணேசனுக்கு சாதகமாக இருக்​கிறது.


    அருண்மொழித்தேவன்

    2021-ல், இந்தத் தொகு​தியை பாஜக-வுக்கு விட்டுக்​கொடுத்த அதிமுக, இம்முறை​யும் அதற்கு தயாராகவே இருப்​ப​தாகச் சொல்​கிறார்​கள். இதனால் அதிமுக தரப்​பில் யாருமே தேர்​தலில் போட்​டி​யிடும் ஆர்வம் இல்லாமல் இருக்​கிறார்​கள். வெற்றிபெற முடி​யுமா முடி​யாதா என உறுதியாக தெரியாவிட்​டாலும் பாஜக தரப்​பில் முன்​னாள் எம்எல்​ஏ-​வும் கடலூர் மேற்கு மாவட்ட பாஜக தலைவருமான தமிழழகன் கணேசனை எதிர்த்து களமிறங்க தயாராக இருக்​கிறார்.

    இதனிடையே, வாக்​காளர்களை வசப்​படுத்த வாரத்​தில் 3 நாட்கள் திட்​டக்​குடியையே சுற்றிவரு​கிறார் அமைச்சர் கணேசன். பெண்​களிடம், “என்ன அக்கா… தையல் மிஷின் கிடைச்​சுதா? என்ன ஆயி… ஸ்டா​லின் பணம் (மகளிர் உரிமைத் தொகை) வருதா?” என்றெல்​லாம் உரிமை எடுத்​துப் பேசி வருகிறார். “அமைச்​சர்​களும் எம்எல்​ஏ-க்​களும் தங்கள் தொகு​தி​யில் இருந்து மக்கள் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்​ய​வேண்​டும்” என முதல்வர் அறிவித்த பிறகு, திட்​டக்​குடியே கதி எனக் கிடக்​கிறார் கணேசன். கடலூர் மேற்கு மாவட்டச் செயலா​ள​ராக​வும் இருப்​ப​தால், சொந்தக் கட்சிக்​குள்​ளும் தனக்​கெ​திராக யாரும் முளைத்து​விடக் கூடாது என்ப​தி​லும் கவனமாக இருக்​கிறார்.

    அமைச்சர் கணேசனை எதிர்க்க அதிமுக-​வில் வலுவான வேட்​பாளர் யாருமே இல்லை என்கிறார்களே என கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் அருண்​மொழித்​தேவனிடம் கேட்​டதற்கு, “அமைச்சரை எதிர்க்க அதிமுக-​வில் வலுவான வேட்​பாளர் இல்லை என்று கூறுவது ஏற்புடையதல்ல. கணேசன் எதிர்​மு​காமின் மாவட்டச் செயலா​ளர். அப்படி இருக்கை​யில் எனது கட்சிக்​குத் தான் நான் விசு​வாசமாக இருக்​க​முடி​யும். மற்றபடி, நானும் அவரும் பள்ளித் தோழர்​களாக இருப்​ப​தால் ஒருவரை ஒருவர் எதிர்த்து அரசியல் செய்​வ​தில்லை என்று சொல்​வதெல்​லாம் தவறான தகவல்” என்றார்.

    திட்​டகுடியை விட்டு போகவே மாட்​டேன் என்கிறீர்களே என அமைச்சர் கணேசனிடம் கேட்​டதற்கு, சிரித்​துக் கொண்டே பதில் சொன்னவர், “மீண்​டும் தளபதி ஆட்சி தொடர​வேண்​டும். அவர் செயல்​படுத்​தி​யுள்ள திட்​டங்கள் மக்களை சென்​றடைந்​திருக்​கிறதா என்பதை நேரடி​யாகச் சென்று பார்த்து வருகிறேன். மக்கள் என்னிடம் அளவற்ற அன்புடன் இருக்​கிறார்ர்​கள். தங்களுக்​கானதை உரிமையோடும் என்னிடம் கேட்​கிறார்​கள். அவர்​களின் தேவையை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டிய இடத்​தில் நான் இருக்​கிறேன்” என்​றார்.

    தேர்​தலுக்கு 10 மாதம் இருக்​கும் போது மட்டும் இப்படி கரிசனம் காட்​டா​மல் ஐந்து ஆண்​டு​களும் இப்​படியே இருந்​​தால் மக்​கள் ஏன் சார் உங்களை மறக்​கப் போகிறார்​கள்?





    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    79-வது சுதந்திர தின விழா: ‘தகைசால் தமிழர்’ விருது காதர் மொகிதீனுக்கு வழங்கி கவுரவிப்பு

    August 15, 2025
    மாநிலம்

    புளித்துப் போன நாடகங்கள் போதும்; தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவும்: அன்புமணி

    August 15, 2025
    மாநிலம்

    சுழற்றி அடிக்கும் சொத்து வரி முறைகேடு: அதிமுகவினருக்கும் ஆபத்து? – மதுரைக்கு மேயராக மந்திரிகளை வட்டமிடும் கவுன்சிலர்கள்!

    August 15, 2025
    மாநிலம்

    நிதி பகிர்வில் மாநில உரிமையை மீட்க வேண்டிய தருணம் இது: சுதந்திர தின உரையில் முதல்வர் ஸ்டாலின் உறுதி

    August 15, 2025
    மாநிலம்

    தூய்மைப் பணிகளை தனியார் மயமாக்குவதை விசிக ஒருபோதும் ஏற்காது: திருமாவளவன்

    August 15, 2025
    மாநிலம்

    சென்னை உயர் நீதிமன்றத்தில் சுதந்திர தின விழா: தலைமை நீதிபதி கொடியேற்றினார்

    August 15, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • 79-வது சுதந்திர தின விழா: ‘தகைசால் தமிழர்’ விருது காதர் மொகிதீனுக்கு வழங்கி கவுரவிப்பு
    • ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தினத்தை கொண்டாடும் நாடுகளும்
    • ஜிஎஸ்டி வரிவிதிப்பில் வருகிறது அதிரடி மாற்றம் – பிரதமர் மோடி அறிவித்த தீபாவளி பரிசு!
    • ‘9.6 kbps டூ 5ஜி யுகம் வரை’ – 30 ஆண்டுகளில் இந்தியா கண்ட இணைய புரட்சி!
    • புளித்துப் போன நாடகங்கள் போதும்; தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவும்: அன்புமணி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.