Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, August 15
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் தெரு நாய்களின் தொல்லை அதிகரிப்பு: உச்ச நீதிமன்றம் கருத்து
    தேசியம்

    அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் தெரு நாய்களின் தொல்லை அதிகரிப்பு: உச்ச நீதிமன்றம் கருத்து

    adminBy adminAugust 15, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் தெரு நாய்களின் தொல்லை அதிகரிப்பு: உச்ச நீதிமன்றம் கருத்து
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தலைநகர் டெல்லியில் வெறி நாய்க்கடியால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது என்று முன்னணி நாளிதழில் அண்மையில் செய்தி வெளியானது.

    இந்த செய்தியை அடிப்படையாக வைத்து உச்ச நீதிமன்றம் தானாக வழக்கு பதிவு செய்து விசாரித்தது. இந்த வழக்கை நீதிபதிகள் பர்திவாலா, மகாதேவன் அமர்வு விசாரித்து கடந்த 11-ம் தேதி முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தது. டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் சுற்றித் திரியும் தெருநாய்களை 8 வாரங்களில் அப்புறப்படுத்தி காப்பகங்களில் அடைக்க வேண்டும்.

    5,000 நாய்களுக்கு ஒரு காப்பகம் அமைக்கப்பட வேண்டும். இனிமேல் ரேபிஸ் பாதிப்பால் யாரும் உயிரிழக்கக்கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தலைநகர் டெல்லி உட்பட பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து தெருநாய்கள் தொடர்பான வழக்கை விசாரிக்க 3 நீதிபதிகள் அடங்கிய புதிய அமர்வை தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமைத்தார்.

    இதன்படி நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, அஞ்சாரியா அமர்வு முன்பு நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது டெல்லி அரசின் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதிட்டார். விலங்குகள் நல தொண்டு அமைப்புகள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி, சித்தார்த் தாவே உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்டனர்.

    அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதிகள் கூறியதாவது: டெல்லி மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சிய போக்கால் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. தெருநாய் தொல்லை பிரச்சினைக்கு தீர்வு காண டெல்லி அரசு தரப்பிலோ, மாநகராட்சி தரப்பிலோ இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    தெருநாய்கள் பிரச்சினைக்கு அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர். கடந்த 11-ம் தேதி உச்ச நீதி மன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க விலங்குகள் நல தொண்டு அமைப்புகள் சார்பில் கோரப்பட்டது. ஆனால் நேற்றைய விசாரணையில் நீதிபதிகள் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    கணவரின் கொலைக்கு நீதி வழங்கியதாக உ.பி. முதல்வர் யோகியை புகழ்ந்த சமாஜ்வாதி எம்எல்ஏ நீக்கம்

    August 15, 2025
    தேசியம்

    “அணு ஆயுத மிரட்டலை இனி பொறுத்துக்கொள்ள மாட்டோம்” – சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி

    August 15, 2025
    தேசியம்

    “பிரதமராக மோடி இருக்கும் வரை…” – கூட்டணி குறித்து சிராக் பாஸ்வான் ஓபன் டாக்

    August 15, 2025
    தேசியம்

    தெலங்கானா சிறுமி கொலை வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை

    August 15, 2025
    தேசியம்

    பிஹார் வாக்காளர் பட்டியலில் இருந்து 65 லட்சம் வாக்காளர் நீக்கப்பட்ட விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

    August 15, 2025
    தேசியம்

    பனாரஸ் இந்து பல்கலை.யில் தெலுங்கு மொழி துறைத் தலைவர் பதவியை பெறுவதில் மோதல்: பேராசிரியர் மீது தாக்குதல், 3 பேர் கைது

    August 15, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • விடுதலை போராட்ட தியாகிகள் ஓய்வூதியம் உயர்வு: சுதந்திர தின உரையில் முதல்வர் ஸ்டாலின் 9 அறிவிப்புகள்
    • சாட்ஜ்ட் ஆலோசனைக்குப் பிறகு செல்வாக்கு செலுத்துபவர்கள் விமானத்தை இழக்கிறார்கள்: திருப்பம் உங்களை பேச்சில்லாமல் விட்டுவிடும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கணவரின் கொலைக்கு நீதி வழங்கியதாக உ.பி. முதல்வர் யோகியை புகழ்ந்த சமாஜ்வாதி எம்எல்ஏ நீக்கம்
    • கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் 950 பேர் விடுவிப்பு – பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டது குறித்து வழக்குப் பதிவு
    • பக்கவாதம் பெறுவதற்கான வாய்ப்புகளை குறைக்கக்கூடிய 5 உணவுகள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.