Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, August 15
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தமிழக வளர்ச்சி குஜராத், பிஹாரைவிட பின்தங்கி உள்ளது: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கருத்து
    மாநிலம்

    தமிழக வளர்ச்சி குஜராத், பிஹாரைவிட பின்தங்கி உள்ளது: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கருத்து

    adminBy adminAugust 15, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தமிழக வளர்ச்சி குஜராத், பிஹாரைவிட பின்தங்கி உள்ளது: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கருத்து
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: ‘குஜ​ராத், பிஹார், உத்​தரப்பிரதேசத்தை விட வளர்ச்​சி​யில் தமிழகம் பின்​னோக்கி உள்​ளது’ என மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் தெரி​வித்​தார். தமிழக பாஜக சார்​பில் 79-வது சுதந்​திர தினத்​தையொட்டி ‘இல்​லந்​ தோறும் மூவர்​ணக்​கொடி’ என்ற தலைப்​பில் சென்னை ஸ்டான்லி மருத்​து​வ​மனை அரு​கில் மூவர்​ணக் கொடி யாத்​திரை நடை​பெற்​றது. இதில், மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் கலந்து கொண்டு யாத்​திரையை தொடங்கி வைத்​தார்.

    அப்​போது செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: சமூக நீதியை பற்றி பேசுவதற்கு திமுக​வுக்கு தகுதி இல்​லை. ஜனநாயக முறை​யில் தங்​களது கோரிக்​கையை முன்​வைத்து தூய்மை பணி​யாளர்​கள் உண்​ணா​விரதம் மேற்​கொண்​டனர்.

    அவர்​களிடத்​தில் பேச்​சு​வார்த்தை நடத்த அரசு தரப்​பில் யாரும் தயா​ராக இல்​லை. கரோனா காலத்​தில் மக்​கள் அனை​வரும் பயத்​தில் இருந்தபோது, தூய்மை பணி​யாளர்​கள், சுகா​தா​ரப் பணி​யாளர்​கள் தங்​களது உயிரை பணயம் வைத்து நாட்​டுக்​காக சேவை செய்​தனர்.

    ஆனால், முதல்​வர் ஸ்டா​லினுக்​கு, தூய்மை பணி​யாளர்​களின் கோரிக்​கையை செவிக் கொடுத்து கேட்க நேரமில்​லாமல், சினிமா பார்த்​துக் கொண்​டிருக்​கிறார். இதுபோன்ற கொடுங்​கோல் ஆட்சிதான் தமிழகத்​தில் நடந்து கொண்​டிருக்​கிறது. அவர்​கள் மீது அடக்​கு​முறையை ஏவி, தூய்மை பணி​யாளர்​களை தாக்​கியது வன்​மை​யாக கண்​டிக்​கத்​தக்​கது. இது தொடர்​பாக சம்​பந்​தப்​பட்ட துறை​கள், ஆணை​யத்​துக்கு அவர்​களது கோரிக்​கையை எடுத்து சென்று அவர்​களுக்கு துணை நிற்​பேன்.

    காங்​கிரஸ் ஆட்சி காலத்​தில் தான் அரசு துறை​கள் அதி​க​மாக தனி​யார் மயமாக்​கப்​பட்​டன. தமிழகம் வளர்ச்சி அடைந்​துள்​ளது என திமுக அரசு ஒரு மாய பிம்​பத்தை உரு​வாக்கி உள்​ளது. தமிழகத்​தின் வளர்ச்​சியை விட உத்​தரப்பிரதேசம், பிஹார், குஜ​ராத்​தின் வளர்ச்சி மிக வேக​மாக இருக்​கிறது. இவர்​களு​டன் ஒப்​பிடும்போது, நாம் பின்​னோக்கி தான் இருக்​கிறோம். இவ்​வாறு அவர் கூறி​னார்.

    இதற்கிடையே, தமிழக பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் சென்​னை​யில் உள்ள தனது வீட்​டிலும், முன்​னாள் மாநில தலை​வர் அண்​ணா​மலை சென்​னையை அடுத்த பனையூரில் உள்ள தனது வீட்​டிலும், தமிழிசை சவுந்​தர​ராஜன் சாலிகி​ராமத்​தில்​ உள்​ள தனது வீட்​டிலும்​ தேசி​ய கொடியை ஏற்​றி மரி​யாதை செலுத்​தினர்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    விடுதலை போராட்ட தியாகிகள் ஓய்வூதியம் உயர்வு: சுதந்திர தின உரையில் முதல்வர் ஸ்டாலின் 9 அறிவிப்புகள்

    August 15, 2025
    மாநிலம்

    கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் 950 பேர் விடுவிப்பு – பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டது குறித்து வழக்குப் பதிவு

    August 15, 2025
    மாநிலம்

    செங்கல்பட்டில் ரூ.700 கோடி முதலீட்டில்  மின் கருவிகள் உற்பத்தி ஆலை: முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம்

    August 15, 2025
    மாநிலம்

    சென்னையில் நாய் கடி சம்பவத்தை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

    August 15, 2025
    மாநிலம்

    ஆக.17-ல் திருமாவளவன் பிறந்தநாள் விழா ஏற்பாடுகள் தீவிரம்: கமல்ஹாசன் உள்ளிட்டோர் பங்கேற்பு

    August 15, 2025
    மாநிலம்

    அரசின் திட்டங்களை எதிர்த்து வழக்கு; வழக்கறிஞர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் அபராதம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

    August 15, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • விடுதலை போராட்ட தியாகிகள் ஓய்வூதியம் உயர்வு: சுதந்திர தின உரையில் முதல்வர் ஸ்டாலின் 9 அறிவிப்புகள்
    • சாட்ஜ்ட் ஆலோசனைக்குப் பிறகு செல்வாக்கு செலுத்துபவர்கள் விமானத்தை இழக்கிறார்கள்: திருப்பம் உங்களை பேச்சில்லாமல் விட்டுவிடும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கணவரின் கொலைக்கு நீதி வழங்கியதாக உ.பி. முதல்வர் யோகியை புகழ்ந்த சமாஜ்வாதி எம்எல்ஏ நீக்கம்
    • கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் 950 பேர் விடுவிப்பு – பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டது குறித்து வழக்குப் பதிவு
    • பக்கவாதம் பெறுவதற்கான வாய்ப்புகளை குறைக்கக்கூடிய 5 உணவுகள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.