Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, August 14
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»“செல்லூர் ராஜுவுக்கு மிகப் பெரிய அவமரியாதை” – இபிஎஸ் மீது ஓபிஎஸ் சாடல்
    மாநிலம்

    “செல்லூர் ராஜுவுக்கு மிகப் பெரிய அவமரியாதை” – இபிஎஸ் மீது ஓபிஎஸ் சாடல்

    adminBy adminAugust 14, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “செல்லூர் ராஜுவுக்கு மிகப் பெரிய அவமரியாதை” – இபிஎஸ் மீது ஓபிஎஸ் சாடல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: “முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் பழனிசாமியை வரவேற்றுவிட்டு, அவரது காரில் ஏறும்போது, அவர் வேறு காரில் வருமாறு அறிவுறுத்தப்பட்டார். இது செல்லூர் ராஜுவுக்கு இழைக்கப்பட்ட மிகப் பெரிய அவமரியாதை” என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “அதிமுக என்பது ஒரு மாபெரும் மக்கள் இயக்கம். இது 30 ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்தது. அதற்குக் காரணம் தலைமைப் பண்பு மிக்க, ஆளுமை மிக்க எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர்தான். தொண்டர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கக் கூடியத் தலைவர்களாக விளங்கியவர்கள். இந்தத் தலைமைப் பண்புதான் தொடர் வெற்றிக்கு வழிவகுத்தது.

    அறிவு, அனுபவம், மேலாண்மைத் திறன் மற்றும் மனிதர்களை மதித்து நடந்துகொள்ளும் பண்பு ஆகிய நான்கும் சேர்ந்ததுதான் தலைமைப் பண்பு. இதற்கு மாறாக செயல்படுபவர் பிறர் பார்வையில் ஏளனத்துக்குரியவராக இருப்பார். ஆணவம், கோபம், இழிவான நடத்தை போன்ற குணாதிசயங்களைக் கொண்டவர்கள் தலைமைப் பதவிக்கு அருகதையற்றவர்கள். தலைமைப் பண்புக்கான அறிகுறி துளியும் இல்லாத பழனிசாமியிடம் அதிமுக தற்போது சிக்குண்டு கிடப்பதால், தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது.

    முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் பழனிசாமியை வரவேற்றுவிட்டு, அவரது காரில் ஏறும்போது, அவர் வேறு காரில் வருமாறு அறிவுறுத்தப்பட்டார். இந்தக் காட்சி அனைத்து ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் வைரலாகப் பரவியது. இது செல்லூர் ராஜுவுக்கு இழைக்கப்பட்ட மிகப் பெரிய அவமரியாதை.

    இதேபோன்று, எம்ஜிஆர் காலத்தில் மக்களவைத் துணைத் தலைவராக பதவி வகித்தவரும், ஜெயலலிதா காலத்தில் மத்திய சட்ட அமைச்சராக இருந்தவருமான தம்பிதுரை, பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது தன்னுடைய கருத்தை தெரிவிக்க முற்பட்டபோது, அதைத் தெரிவிக்க அனுமதிக்கவில்லை.

    இந்தக் காட்சியும் அனைத்து ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் வைரலாகப் பரவியது. இது தம்பிதுரைக்கு ஏற்பட்ட இழுக்கு. இதுபோல் வெளிவராத சம்பவங்கள் ஏராளம். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்து பவர்கள் குறிவைக்கப்பட்டு, அவமரியாதை செய்யப்படுகிறார்கள் என்ற கருத்து கட்சியில் நிலவுகிறது” என்று அவர் கூறியுள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: சென்னையில் கைதான 950 பேர் விடுவிப்பு

    August 14, 2025
    மாநிலம்

    “அதிமுக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் வரவுள்ளதால்…” – பழனிசாமி பேச்சு

    August 14, 2025
    மாநிலம்

    “ஆளுநர் ஆர்.என்.ரவியின் அறிக்கையை படித்தால் அமித் ஷாவே சிரிப்பார்!” – அமைச்சர் கே.என்.நேரு

    August 14, 2025
    மாநிலம்

    “தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்துக்கு அதிகாரத்தில் உள்ளோரின் ஆசியே காரணம்” – ஆளுநர் ஆர்.என்.ரவி

    August 14, 2025
    மாநிலம்

    தூய்மை பணியாளர்களின் அறச்சீற்றம் தேர்தலில் எதிரொலிக்கும்: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம்

    August 14, 2025
    மாநிலம்

    ‘ஓரணியில் தமிழ்நாடு’ ஓடிபி தடையை விலக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

    August 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • முதல் நாள் வெளிநாட்டு வசூலில் ‘லியோ’வை முந்தி ‘கூலி’ முதலிடம்!
    • தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: சென்னையில் கைதான 950 பேர் விடுவிப்பு
    • தசை வளர்ச்சி மற்றும் மீட்டெடுப்பை அதிகரிக்கக்கூடிய 5 இயற்கை சப்ளிமெண்ட்ஸ் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • “அதிமுக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் வரவுள்ளதால்…” – பழனிசாமி பேச்சு
    • ஏர்போட்கள் காரணமாக சமூக ஊடக பயனர் தனது விசாரணையின் ஒரு பகுதியை இழக்கிறார்; நீண்டகால பயன்பாட்டிற்கு எதிரான எச்சரிக்கைகள்; ‘நான் என் வாழ்நாள் முழுவதும் வாழ வேண்டும் ….’ | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.