Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, August 16
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தாம்பரத்தில் பட்டா கேட்டு மார்க்சிஸ்ட் போராட்டம்: மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பங்கேற்பு
    மாநிலம்

    தாம்பரத்தில் பட்டா கேட்டு மார்க்சிஸ்ட் போராட்டம்: மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பங்கேற்பு

    adminBy adminAugust 14, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தாம்பரத்தில் பட்டா கேட்டு மார்க்சிஸ்ட் போராட்டம்: மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பங்கேற்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    தாம்பரம்: ​தாம்​பரம் மாநக​ராட்​சிக்கு உட்​பட்ட ராஜீவ் காந்தி நகர், திரு​மங்​கை​யாழ்​வார் நகர், தாங்​கல் உள்​ளிட்ட பகுதி மக்களுக்கு குடிமனைப் பட்டா வழங்க கோரி நேற்று தாம்​பரம் கோட்​டாட்​சி​யர் அலு​வல​கம் முன்பு ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது.

    தாம்​பரம் ராஜீவ்​காந்தி நகரில் உள்ள 102 குடும்​பங்​கள், திருநீர்​மலை 31-வது வார்டு திரு​மங்​கை​யாழ்​வார்​புரம், சர்வே எண் 234/2, 272 ஆகிய​வற்​றில் உள்ள குடி​யிருப்​பு​கள், பொழிச்​சலூர் ஞானமணி நகர் சர்வே எண் 288/2ல் மறு குடியமர்வு செய்​யப்​பட்ட 98 குடும்பங்கள், திரிசூலம் ஊராட்​சி​யில் வசிக்​கும் மக்​கள் ஆகியோருக்கு குடிமனைப் பட்டா வழங்க கோரி மனு கொடுக்​கும் ஆர்ப்பாட்​டம் நடை​பெற்​றது.

    பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் பெ.சண்​முகம் கூறிய​தாவது: ஒரு​புறம் அரசு பட்டா கொடுத்து வருகிறது. மறு​புறம், தமிழகம் முழு​வதும் பட்டா கேட்டு மீண்​டும் மீண்​டும் மக்​கள் மனு கொடுத்து வரு​கின்​றனர்.

    அதி​காரி​களின் அலட்​சி​யம், வரு​வாய்த் துறை ஆவணங்​களில் காலத்​துக்​கேற்ப மாற்​றங்​கள் செய்​யாததே இதற்கு காரணம். வரு​வாய்த் துறை நில நிர்​வாக ஆணை​யரும், ஆட்​சி​யரும் இதில் கவனம் செலுத்த வேண்​டும். பட்டா வழங்​கு​வ​தில் உள்ள பிரச்​சினையை ஆராய்ந்து வரு​வாய்த் துறை பணி​களை விரைவுபடுத்த வேண்​டும்.

    தாம்​பரம் அண்​மை​யில்​தான் மாநக​ராட்​சி​யாக மாறியது. ஆனால், பட்டா கோரும் மக்​கள் 50, 60 ஆண்​டு​களாக வாழ்ந்து வருகின்றனர். ஏற்​கெனவே உள்ள இடத்​துக்கு பட்டா தர முடி​யாது. பழைய அரசாணை​களை காட்​டி, ஒரு சென்ட் பட்டா மட்​டுமே வழங்​கப்​படும் என்று அதி​காரி​கள் கூறுகின்​றனர். எனவே, மக்​கள் குடியேறிய காலத்தை வைத்து பட்டா வழங்​கும் அளவை தீர்​மானிக்க வேண்​டும்.

    மாறாக, தற்​போதைய சூழலுக்கு ஏற்ப தீர்​மானிப்​பதை சிபிஎம் ஏற்​க​வில்​லை. இதை வரு​வாய்த் துறை பரிசீலிக்க வேண்​டும். ராஜீவ் காந்தி நகர் வன நிலம் என்று ஆவணத்​தில் உள்​ளது. ஆனால், 100 ஆண்​டு​களுக்கு மேலாக மக்​கள் வசிக்​கின்​றனர். அந்த இடத்​துக்கு மாற்று இடம் தரப்​பட்​டு​விட்​டது. ஆட்​சி​யரும் பட்டா வழங்க உத்​தர​விட்​டுள்​ளார். அதன் பிறகும் பட்டா வழங்​காமல் இழுத்​தடித்து வரு​கின்​றனர்.

    புறவழிச்​சாலை அமைப்​ப​தற்​காக அங்​கிருந்து அகற்​றப்​பட்​ட​வர்​கள் 1998-ம் ஆண்டு பொழிச்​சலூரில் ஆட்​சி​ய​ரால் குடியமர்த்தப்பட்டனர். இவர்​களுக்​கும் பட்டா மறுக்​கப்​பட்டு வரு​கிறது. மக்​களின் பக்​கம் நின்று பிரச்​சினையை அணு​கா​விட்​டால் ஆட்​சிக்கு அவப்​பெயரை ஏற்​படுத்​தும். பட்டா கோரிய மனுக்​கள் மீது விரைந்து தீர்வு காண வேண்​டும் என்றார். இதன் பின்​னர் வரு​வாய் கோட்​டாட்​சி​யர் அலு​வல​கத்​தில் மனு அளிக்கப்பட்டது​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    அரசியல் கட்சி அலுவலகங்களில் தலைவர்கள் தேசியக் கொடி ஏற்றி மரியாதை

    August 16, 2025
    மாநிலம்

    பிரதமரின் ஜிஎஸ்டி வரி விதிப்பு மாற்ற அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது: திருமாவளவன் கருத்து

    August 16, 2025
    மாநிலம்

    கடலோர காவல் படை சார்பில் இந்தியா-இலங்கை எல்லையில் சுதந்திர தின கொண்டாட்டம்

    August 16, 2025
    மாநிலம்

    அதிமுகவின் நகரும் நியாயவிலைக் கடை திட்டத்தை காப்பியடித்து ‘தாயுமானவர்’ திட்டம் – இபிஎஸ் குற்றச்சாட்டு

    August 16, 2025
    மாநிலம்

    வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறியை தனி நெறியாக அறிவிக்க அதிகாரிகளை அணுகலாம்: கோர்ட் உத்தரவு

    August 16, 2025
    மாநிலம்

    8 மாதங்களாக மாற்றுத்திறனாளி உள்ளிட்டோருக்கான உதவித்தொகைக்கு ஒப்புதல் கொடுப்பது நிறுத்திவைப்பு

    August 16, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கன்டெய்னர் லாரி மீது கார் மோதி காமெடி நடிகர் காயம்
    • அரசியல் கட்சி அலுவலகங்களில் தலைவர்கள் தேசியக் கொடி ஏற்றி மரியாதை
    • காதல் கைப்பிடிகளை அகற்ற 5 பயனுள்ள வழிகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த புதின்: இந்தியா மரியாதைக்குரிய நாடு என புகழாரம்
    • ஆஸ்கர் மீது ஆர்வமில்லை: டென்ஸல் வாஷிங்டன்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.