Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, August 14
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆக.14, 15-ல் தலைமைச் செயலக பகுதியில் ‘ட்ரோன்’ பறக்க தடை
    மாநிலம்

    சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆக.14, 15-ல் தலைமைச் செயலக பகுதியில் ‘ட்ரோன்’ பறக்க தடை

    adminBy adminAugust 14, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆக.14, 15-ல் தலைமைச் செயலக பகுதியில் ‘ட்ரோன்’ பறக்க தடை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு தலைமைச் செயலகத்தை சுற்றி 2 நாட்கள் ட்ரோன் பறக்க காவல் ஆணையர் அருண் தடைவிதித் துள்ளார். நாடு முழுவதும் 15-ம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னை கோட்டையில் முதல்வர் மு.க.ஸ்டா லின் தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்ற உள்ளார். இதையொட்டி, சுதந்திர தினவிழா நடைபெறும் புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் காவல் அதிகாரிகள் மற்றும் போலீஸார் கொண்ட 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    9 ஆயிரம் போலீஸார்: மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் உத்தரவின் பேரில், கூடுதல் ஆணையர்கள் கண்ணன் (தெற்கு), கார்த்திகேயன் (போக்குவரத்து), பிரவேஷ்குமார் (வடக்கு) மேற்பார்வையில், சுமார் 9,000 போலீஸார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட சென்னை விமான நிலையம், ரயில் நிலையங்கள், பேருந்து முனையங்கள், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், கடற்கரை பகுதிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் இதர முக்கிய இடங்களில் வழக்கத்தைவிட கூடுதலாக போலீஸார் பணியமர்த்தப்பட்டு, தீவிர சோதனைகள் மற்றும் கண்காணிப்புப் பணிகள் பலப்படுத்தபட்டு வருகிறது.

    வாகன சோதனை: இதுதவிர சென்னை யிலுள்ள அனைத்து தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சந்தேக நபர்களின் நடமாட்டம் குறித்து ஏதேனும் தகவல் இருந்தால் காவல்துறைக்கு தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சென்னை பெருநகர் முழுவதும் அந்தந்த காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நான்கு சக்கர மற்றும் இருசக்கர ரோந்து வாகனங்கள் மூலம் ரோந்து பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு, முக்கியமான இடங்களில் தடுப்புகள் அமைத்து காவல் துறையினர் மூலம் இப்போதே தீவிர வாகனத் தணிக்கைகளும் தொடங்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சுதந்திர தின பாதுகாப்பு நடவடிக்கையின் ஒருபகுதியாக சென்னையில் ஆக. 14 மற்றும் 15 (வியாழன், வெள்ளி) ஆகிய இரு நாட்களிலும், அரசு ஏற்பாடுகள் தவிர தலைமைச் செயலகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள், முதல்வரின் இல்லத்தில் இருந்து தலைமைச் செயலகம் வரையிலும் முதல்வர் செல்லும் வழித்தடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த பகுதிகளில் ட்ரோன்கள், ரிமோட் மூலம் இயக்கப்படும் மைக்ரோ லைட் ஏர்கிராப்ட் பாரா கிளைடர்ஸ், பாரா மோட்டார்ஸ், ஹேன்ட் கிளைடர்ஸ், ஹாட் ஏர் பலூன்கள் போன்றவற்றைப் பறக்க தடை விதிக்கப்படுவதாக காவல் ஆணையர் அருண் அறிவித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ஏலகிரி மலையில் சாலைகள் சீரமைக்கப்படும்: மலைவாழ் மக்களிடம் இபிஎஸ் வாக்குறுதி

    August 14, 2025
    மாநிலம்

    தமிழக மீனவர்கள் 8 பேருக்கு ரூ.9 லட்சம் அபராதம், 16 பேருக்கு காவல் நீட்டிப்பு: இலங்கை கோர்ட் உத்தரவு

    August 14, 2025
    மாநிலம்

    ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷுடன் தமிழக பாஜக மாநிலச் செயலாளர் அமர் பிரசாத் ரெட்டி சந்திப்பு

    August 14, 2025
    மாநிலம்

    தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்த வழக்கறிஞர்கள் கைது: ஐகோர்ட்டில் மனு தாக்கல்

    August 14, 2025
    மாநிலம்

    உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்கு எதிரான பொதுநல மனு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு

    August 14, 2025
    மாநிலம்

    தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

    August 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஏலகிரி மலையில் சாலைகள் சீரமைக்கப்படும்: மலைவாழ் மக்களிடம் இபிஎஸ் வாக்குறுதி
    • பெருங்குடல் புற்றுநோயால் தப்பிப்பிழைப்பவராக இந்த உணவுகளை ஒருபோதும் சாப்பிட வேண்டாம்: உங்கள் குடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இந்த நாளை மறக்க முடியுமா? – 17 வயதில் சச்சின் முதல் டெஸ்ட் சதம் விளாசி அசத்தல்!
    • தமிழக மீனவர்கள் 8 பேருக்கு ரூ.9 லட்சம் அபராதம், 16 பேருக்கு காவல் நீட்டிப்பு: இலங்கை கோர்ட் உத்தரவு
    • இந்தியாவின் 8 சின்னமான விலங்குகள் மற்றும் அவற்றை எங்கு கண்டுபிடிக்க வேண்டும்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.