Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, August 14
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தூய்மைப் பணியாளர்கள் கலைந்து செல்ல உத்தரவு: கைது செய்ய காவல் துறை ஆயத்தம் – ரிப்பன் மாளிகையில் பரபரப்பு
    மாநிலம்

    தூய்மைப் பணியாளர்கள் கலைந்து செல்ல உத்தரவு: கைது செய்ய காவல் துறை ஆயத்தம் – ரிப்பன் மாளிகையில் பரபரப்பு

    adminBy adminAugust 13, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தூய்மைப் பணியாளர்கள் கலைந்து செல்ல உத்தரவு: கைது செய்ய காவல் துறை ஆயத்தம் – ரிப்பன் மாளிகையில் பரபரப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்தி வரும் தூய்மைப் பணியாளர்கள் கலைந்து செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களை கைது செய்யவும் போலீஸார் ஆயத்தமாகி வருகின்றனர்.

    சென்னை மாநக​ராட்​சி​யில் ராயபுரம், திரு.​வி.க.நகர் மண்​டலங்​களில் தூய்​மைப் பணி​களை தனி​யாருக்கு விட்​டதை கண்​டித்​தும், பணி நிரந்​தரம் கோரி​யும், ஏற்​கெனவே என்யூஎல்எம் திட்​டம் மூலம் வழங்கப்பட்ட தூய்​மைப் பணியை தொடர வலி​யுறுத்​தி​யும் தூய்​மைப் பணியாளர்​கள் ரிப்​பன் மாளிகை முன்​பு, இரவு பகலாக அங்​கேயே தங்​கி இன்று 13-வது நாளாக போராட்​டம் நடத்தி வருகின்றனர்.

    இது​வரை பல கட்ட பேச்​சு​வார்த்​தைகள் முடிந்​து, தீர்வு எட்​டப்​பட​வில்லை. இந்த நிலையில், இன்று சென்னை ரிப்பன் மாளிகையில் அமைச்சர்கள் சேகர்பாபு, கே.என்.நேரு, மேயர் பிரியா, ஆணையர் உள்ளிட்டோர் தூய்மைப் பணியாளர்கள் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், தூய்மைப் பணியாளர்களை கைது செய்ய காவல் துறை ஆயத்தமாகி வருகிறது.

    இதனையடுத்து, தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வரும் ரிப்பன் மாளிகை முழுவதுமாக காவல் துறை கட்டுப்பாட்டில் வந்துள்ளது. தூய்மைப் பணியாளர்களை கைது செய்து அழைத்துச் செல்ல 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன.

    ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்தும் தூய்மைப் பணியாளர்கள் கலைந்து செல்லுமாறு காவல் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தூய்மைப் பணியாளர்கள் கலைந்து செல்ல மறுக்கும் நிலையில், போலீஸார் அதிகளவில் குவிக்கப்பட்டு வருகின்றனர். போராட்டம் நடத்திவரும் அனைவரும் கலைந்து செல்லவேண்டுமென்றும், இல்லையெனில் வழக்குப் பதிவு செய்யப்படும் என்று காவல் இணை ஆணையர் விஜயகுமார் எச்சரித்துள்ளார்.

    முன்னதாக, போராட்டம் என்ற பெயரில் நடைபாதை, சாலையை மறித்து போராடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என தெரிவித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, ரிப்பன் மாளிகை முன்பாக போராட்டம் நடத்தி வரும் தூய்மைப் பணியாளர்களை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்த போலீஸாருக்கு உத்தரவிட்டது. அதேபோல, மாநகராட்சியின் தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட மற்றொரு வழக்கின் தீர்ப்பை உயர் நீதிமன்ற தனி நீதிபதி தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது குறிப்பிடத்தக்கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு முதல் ரூ.10 லட்சம் காப்பீடு வரை: தமிழக அரசின் 6 அறிவிப்புகள்

    August 14, 2025
    மாநிலம்

    கணவர் கைது எதிரொலி: மதுரை மேயர் இந்திராணி பதவிக்கு நெருக்கடி!

    August 14, 2025
    மாநிலம்

    சுதந்திர தினத்தில் மது விற்றால் கடும் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை

    August 14, 2025
    மாநிலம்

    ‘நீதிமன்ற நடவடிக்கையில் தலையிட கூடாது’ – முன்னாள் நீதிபதிகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு அபராதம்

    August 14, 2025
    மாநிலம்

    போராடிய தூய்மைப் பணியாளர்கள் கைது – சென்னை ரிப்பன் மாளிகை பகுதியில் நள்ளிரவில் நடந்தது என்ன?

    August 14, 2025
    மாநிலம்

    தூய்மைப் பணியாளர்கள் என்ன தேச விரோதிகளா? – அரசை சரமாரியாக சாடிய விஜய்

    August 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நடிகர் நிவின் பாலி மீதான வழக்கு விசாரணைக்குத் தடை
    • தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு முதல் ரூ.10 லட்சம் காப்பீடு வரை: தமிழக அரசின் 6 அறிவிப்புகள்
    • வீட்டில் ஒரு நடப்பட்ட மீன்வளத்தையும், வைத்திருக்க வேண்டிய மீன் வகைகளையும் எவ்வாறு அமைப்பது: 10-படி வழிகாட்டி
    • பிரபாஸ் படத்துக்குச் சிக்கல்
    • கணவர் கைது எதிரொலி: மதுரை மேயர் இந்திராணி பதவிக்கு நெருக்கடி!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.