Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, August 14
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»‘வாக்கு திருட்டுக்கு எதிராக உங்கள் குரலை உயர்த்துங்கள்’ – பொது மக்களுக்கு காங்கிரஸ் அழைப்பு
    தேசியம்

    ‘வாக்கு திருட்டுக்கு எதிராக உங்கள் குரலை உயர்த்துங்கள்’ – பொது மக்களுக்கு காங்கிரஸ் அழைப்பு

    adminBy adminAugust 13, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘வாக்கு திருட்டுக்கு எதிராக உங்கள் குரலை உயர்த்துங்கள்’ – பொது மக்களுக்கு காங்கிரஸ் அழைப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: பாஜகவின் பிடியில் இருந்து அரசியலமைப்பு நிறுவனங்களை விடுவிக்க ஒன்றிணைவோம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அழைப்பு விடுத்துள்ளார்.

    தேர்தலில் வாக்கு திருட்டு நடப்பதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இதை விளக்கும் வகையில் வீடியோ ஒன்றை அக்கட்சி தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளது. அந்த வீடியோவை, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளனர்.

    ஒரு நிமிடம் ஓடக்கூடிய அந்த வீடியோவில், மக்கள் வாக்களிக்க வரிசையில் காத்திருப்பது போன்றும், வரிசையில் நின்ற கணவனும் மனைவியும் வாக்களிக்கச் செல்லும்போது அவர்களை வழிமறிக்கும் இருவர், உங்கள் வாக்கு ஏற்கெனவே போடப்பட்டு விட்டது என்று கூறுவதாக உள்ளது. மேலும், அவ்வாறு கூறும் இருவருக்கும் தேர்தல் அதிகாரி உடந்தையாக இருப்பதுபோன்றும் காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள மல்லிகார்ஜுன் கார்கே, “உங்கள் வாக்குரிமையைப் பறிக்க விடாதீர்கள், இந்த முறை கேள்விகளைக் கேளுங்கள், பதில்களைக் கோருங்கள்! வாக்கு திருட்டுக்கு எதிராக உங்கள் குரலை உயர்த்துங்கள், பாஜகவின் பிடியிலிருந்து அரசியலமைப்பு நிறுவனங்களை விடுவிப்போம்!” என பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

    இதே வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள ராகுல் காந்தி, “உங்கள் வாக்கு திருடப்படுகிறது… உங்கள் உரிமை திருடப்படுகிறது… இது உங்கள் அடையாள திருட்டுக்கு சமம்” என குறிப்பிட்டுள்ளார்.

    பிரியங்கா காந்தி, “உங்கள் வாக்கு திருடப்படுவது என்பது உங்கள் உரிமைகளைத் திருடுவது, உங்கள் அடையாளத்தைத் திருடுவது போன்றது. உங்கள் வாக்களிக்கும் உரிமையைக் காப்பாற்றுங்கள், வாக்கு திருட்டுக்கு எதிராக உங்கள் குரலை உயர்த்துங்கள்” என தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் கட்சியின் எக்ஸ் பக்கத்தில், “வாக்குகள் திருடப்படுகின்றன. இது உங்கள் உரிமைகளை, உங்கள் அடையாளத்தைத் திருடுவதற்குச் சமம். எங்களுடன் சேருங்கள் – வாக்கு திருட்டுக்கு எதிராக உங்கள் குரலை உயர்த்துங்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    वोट चोरी…

    आपके अधिकार की चोरी है, पहचान की चोरी है।

    हमारे साथ जुड़ें-

    वोट चोरी के खिलाफ आवाज उठाएं #VoteChori pic.twitter.com/Bf0elDbYLk


    — Congress (@INCIndia) August 13, 2025



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ‘இறந்துபோன’ வாக்காளர்கள் உடன் தேநீர் விருந்து: தேர்தல் ஆணையத்துக்கு நன்றி என ராகுல் காந்தி பதிவு

    August 13, 2025
    தேசியம்

    டெல்லியில் தெரு நாய்கள், மும்பையில் புறாக்கள்… – பிரச்சினையும் பின்னணியும்

    August 13, 2025
    தேசியம்

    “எங்களிடம் பிரம்மோஸ் உள்ளது” – பாகிஸ்தான் பிரதமருக்கு ஒவைசி பதிலடி

    August 13, 2025
    தேசியம்

    ‘வாக்கு திருட்டு’ விழிப்புணர்வு பிரச்சாரம்: பிஹாரில் ஆக.17 முதல் 15 நாட்களுக்கு ராகுல் காந்தி நடைபயணம்

    August 13, 2025
    தேசியம்

    “ரேவந்த் மூலம் சந்திரபாபு நாயுடுவுடன் ‘தொடர்பில்’ இருக்கிறார் ராகுல்” – ஜெகன் மோகன் ரெட்டி பகீர்

    August 13, 2025
    தேசியம்

    மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் வங்கியில் பட்டப்பகலில் 15 கோடி தங்கம், பணம் கொள்ளை

    August 13, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “உங்கள் மீதான வியப்பு குறையவே இல்லை” – ரஜினிக்கு ஷங்கர் புகழாரம்
    • சென்னையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு
    • உங்கள் தினசரி கப் காபி அல்லது தேநீர் உங்கள் மனநிலையை அதிகரிக்க முடியுமா? அறிவியல் எடை | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘இது பூமியில் மிகப்பெரிய நதி டெல்டா’: நாசா விண்வெளி வீரர் கங்கா நதி டெல்டாவின் அதிர்ச்சியூட்டும் காட்சியை விண்வெளியில் இருந்து பிடிக்கிறார் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘இறந்துபோன’ வாக்காளர்கள் உடன் தேநீர் விருந்து: தேர்தல் ஆணையத்துக்கு நன்றி என ராகுல் காந்தி பதிவு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.