Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, August 14
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»சொத்துவரி முறைகேட்டில் கைதான மதுரை மேயரின் கணவருக்கு நெஞ்சுவலி – மருத்துவமனையில் அனுமதி
    மாநிலம்

    சொத்துவரி முறைகேட்டில் கைதான மதுரை மேயரின் கணவருக்கு நெஞ்சுவலி – மருத்துவமனையில் அனுமதி

    adminBy adminAugust 13, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சொத்துவரி முறைகேட்டில் கைதான மதுரை மேயரின் கணவருக்கு நெஞ்சுவலி – மருத்துவமனையில் அனுமதி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: சொத்துவரி முறைகேடு வழக்கில் கைதான மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி கணவர் பொன் வசந்த் நெஞ்சுவலி காரணமாக சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேட்டில் 2 உதவி ஆணையாளர்கள், வரிவிதிப்புக் குழு தலைவர் உள்பட இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த்தையும் போலீஸார் கைது செய்துள்ளனர். இன்று அதிகாலை அவரை 6.30 மணிக்கு மதுரை அழைத்து வந்த போலீஸார், நேரடியாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்று மருத்துவப் பரிசோதனை செய்தனர். அப்போது அவர் தனக்கு நெஞ்சுவலி, படபடப்பு இருப்பதாகவும், மேலும் சர்க்கரை நோய், ரத்த அழுத்தமும் இருப்பதாக கூறியுள்ளார்.

    உடனடியாக மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்துள்ளனர். அவருக்கு இசிஜி-யில் மாற்றம் இருந்ததால் எக்கோ பரிசோதனையும் செய்தனர். மேலும், அவர் தனக்கு தலைசுற்றலும், மயக்கமும் ஏற்படுவதாக கூறியதால் மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை வழங்கப்படுகிறது. அவர் சிகிச்சை பெறும் வார்டில் ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் 10 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மேயர் இந்திராணி அதிகாலையில் தனது சொந்த காரில், மருத்துவமனைக்கு சென்று கணவர் பொன் வசந்த்தை பார்த்து அழுதுள்ளார். அவருக்கு அவரது ஆதரவாளர்கள் ஆறுதல் கூறி, வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    சொத்துவரி விதிப்புக்குழு தலைவர் விஜயலட்சுமி கணவர் கண்ணன், வாக்குமூலத்தில் தனது பெயர் இடம்பெற்றதுமே, பொன் வசந்த் சென்னை சென்றுள்ளார். இந்த வழக்கில் இருந்து தப்பிக்க பொன் வசந்த், சென்னையில் முகாமிட்டிருந்தார். ஆனால், திமுக தலைவர்களையும், அமைச்சர்களையும் அவரை சந்திக்க கூட மறுத்ததாக கூறப்படுகிறது. அனைவரும் கைவிட்ட நிலையிலே மத்திய குற்றப் பிரிவு போலீஸார் சென்னை சென்று அவரை கைது செய்துள்ளனர். சென்னையில் இருந்து அவரை மதுரைக்கு அழைத்து வந்த நிலையில், தன் மீது எந்த தவறும் இல்லை என்று அவர் போலீஸாரிடம் கூறியுள்ளார்.

    மேலும், சென்னையில் இருந்து மதுரை வரும் வரை, கடைசி நேரத்தில் செல்போனில், பலரை தொடர்புகொள்ள முயற்சித்துள்ளார். ஆனாலும், யாரும் உதவவில்லை என்று கூறப்படுகிறது. இந்த வழக்கில் பொன் வசந்த் வாக்குமூலத்தை பொறுத்தும், அவர் வழங்கும் ஆதாரங்கள் அடிப்படையில் மேலும் பல திமுக, அதிமுக உள்ளிட்ட சில கட்சிகளின் கவுன்சிலர்கள் சிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    திருச்சி அருகே காட்டுப்பன்றி தாக்கியதில் மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகி உயிரிழப்பு

    August 14, 2025
    மாநிலம்

    ஆர்டிஐ பதில்கள் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு மாநில தகவல் ஆணையர் உத்தரவு

    August 14, 2025
    மாநிலம்

    நெல்லை சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழா: 739 பேருக்கு பட்டம் வழங்கினார் ஆளுநர் ரவி

    August 14, 2025
    மாநிலம்

    கட்சிக் கொடிக்கம்பம் வழக்கில் திடீர் திருப்பம்: உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் முடித்துவைப்பு

    August 14, 2025
    மாநிலம்

    ஆத்தூரில் அமைச்சர் ஐ.பெரியசாமியை வம்புக்கு இழுக்கும் தவெக! – போஸ்டருக்கு போஸ்டரால் பதிலடி கொடுத்த திமுக

    August 14, 2025
    மாநிலம்

    கிருஷ்ண ஜெயந்தி அரசு விடுமுறை என்பதால் ஆக.16-ல் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெறாது: அமைச்சர் அறிவிப்பு

    August 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • திருச்சி அருகே காட்டுப்பன்றி தாக்கியதில் மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகி உயிரிழப்பு
    • குழந்தைகளில் கொழுப்பு கல்லீரல் நோய்: இந்த அமைதியான கல்லீரல் நோய் ஏன் அதிகரித்து வருகிறது என்பதை ஹார்வர்ட் பயிற்சி பெற்ற மருத்துவர் விளக்குகிறார் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • உ.பி.யில் பறவைக் காய்ச்சல் அபாயம்: விழிப்புடன் இருக்க முதல்வர் உத்தரவு
    • ஆர்டிஐ பதில்கள் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு மாநில தகவல் ஆணையர் உத்தரவு
    • வெளிநாட்டு துப்பாக்கிகள் கடத்தலில் முக்கிய குற்றவாளி கைது

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.