Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, August 13
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க அடுத்த மாதம் அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி?
    தேசியம்

    ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க அடுத்த மாதம் அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி?

    adminBy adminAugust 13, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க அடுத்த மாதம் அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி?
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் வருடாந்திர உயர்மட்ட விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்ற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஐக்கிய நாடுகள் சபையின் 80-வது பொதுச் சபைக் கூட்டத் தொடர் செப்டம்பர் 9-ம் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில் உயர்மட்ட பொது விவாதம் செப். 23 முதல் 29 வரை நடைபெற உள்ளது. இந்த தொடரின் முதல் பாரம்பரிய பேச்சாளராக பிரேசில் உள்ளது. பிரேசில் அரசு தலைவரின் உரையை அடுத்து, அமெரிக்க அதிபரின் உரை இருக்கும். ஐநா பொதுச் சபை மேடையில் உலக தலைவர்கள் மத்தியில் செப். 23-ம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உரை நிகழ்த்த உள்ளார்.

    இந்த உயர்மட்ட விவாதத்துக்கான தற்காலிக பேச்சாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்திய அரசாங்கத் தலைவர் செப். 26-ம் தேதி ஐநா பொதுச் சபை மேடையில் உரையாற்றுவார். அதே தினத்தன்று, சீனா, இஸ்ரேல், பாகிஸ்தான், வங்கதேச அரசு தலைவர்களும் உரை நிகழ்த்த உள்ளனர்.

    ஐநா பொதுச் சபையில் இந்தியா சார்பில் பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அவர் அடுத்த மாதம் அமெரிக்கா செல்ல வாய்ப்பு உள்ளது. இதற்கு முன்பாக, கடந்த பிப்ரவரியில் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றார். அப்போது, அதிபர் ட்ரம்ப் உடன் நடத்திய பேச்சுவார்த்தையில், இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்களை முன்னெடுத்துச் செல்வது தொடர்பான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

    அமெரிக்கா – இந்தியா இடையேயான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தை இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்று வருகிறது. எனினும், இந்தியா அதிக வரி விதிப்பதாகக் கூறி பதில் நடவடிக்கையாக 25% வரியை இந்திய பொருட்களுக்கு விதிப்பதாக ட்ரம்ப் அறிவித்தார். அதன்பின், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியைக் கண்டித்து கூடுதலாக 25% வரி குறித்த அறிப்பை வெளியிட்டார்.

    அதேநேரத்தில், இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க குழு வரும் 25-ம் தேதி இந்தியா வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ரிலையன்ஸ் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை தகர்ப்போம்: பாக். ராணுவ தளபதி அசிம் எச்சரிக்கை

    August 13, 2025
    தேசியம்

    “எனது படத்துடன் டி-ஷர்ட் அணியும் உரிமை அளித்தது யார்?” – பிரியங்காவுக்கு மின்டா தேவி கேள்வி

    August 13, 2025
    தேசியம்

    மேற்கு வங்க தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராக தேர்தல் ஆணையம் உத்தரவு

    August 13, 2025
    தேசியம்

    பிஹாரில் தோல்வி உறுதி என்பதை உணர்ந்தே காங். தேர்தல் ஆணையத்தை குற்றம் சாட்டுகிறது: பாஜக

    August 13, 2025
    தேசியம்

    ஆக.15-ல் அனைத்து மசூதிகளிலும் தேசியக் கொடி: சத்தீஸ்கர் மாநில வக்பு வாரியம் உத்தரவு

    August 13, 2025
    தேசியம்

    தெருநாய்களை காப்பகங்களில் அடைக்கும் உத்தரவுக்கு வலுக்கும் எதிர்ப்பு: பரிசீலிப்பதாக தலைமை நீதிபதி உறுதி

    August 13, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சொத்துவரி முறைகேட்டில் கைதான மதுரை மேயரின் கணவருக்கு நெஞ்சுவலி – மருத்துவமனையில் அனுமதி
    • கல்லீரல் சேதம் எச்சரிக்கை அறிகுறிகள்: கைகள் மற்றும் கால்களில் நிலையான அரிப்பு தீவிரமாக இருக்கலாம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ரிலையன்ஸ் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை தகர்ப்போம்: பாக். ராணுவ தளபதி அசிம் எச்சரிக்கை
    • ஆஸி. மண்ணில் அதிகபட்ச டி20 ஸ்கோர்: ருதுராஜ் சாதனையை முறியடித்த பிரேவிஸ்!
    • பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் அமெரிக்கா – பாகிஸ்தான் இணைந்து தீவிரமாக செயல்பட முடிவு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.