Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, August 13
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»டாஸ்மாக் ஊழியர்கள் மாநில அளவில் பணி நிரவல்: 10 ஆண்டுக்கு மேல் பணியாற்றியவர்களுக்கு விரைவில் கலந்தாய்வு
    மாநிலம்

    டாஸ்மாக் ஊழியர்கள் மாநில அளவில் பணி நிரவல்: 10 ஆண்டுக்கு மேல் பணியாற்றியவர்களுக்கு விரைவில் கலந்தாய்வு

    adminBy adminAugust 13, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    டாஸ்மாக் ஊழியர்கள் மாநில அளவில் பணி நிரவல்: 10 ஆண்டுக்கு மேல் பணியாற்றியவர்களுக்கு விரைவில் கலந்தாய்வு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: தமிழகத்​தில் முதல் முறை​யாக மாநில அளவில் டாஸ்மாக் கடை பணியாளர்கள் கலந்தாய்வு மூலம் பணி நிரவல் செய்யப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்​தில் தற்​போது 4,826 டாஸ்​மாக் கடைகள் இயங்கி வரு​கின்றன. இந்த கடைகளில் விற்​பனை​யாளர், உதவி விற்​பனை​யாளர், விற்​பனை மேற்​பார்​வை​யாளர் என 24 ஆயிரத்துக்​கும் மேற்​பட்​டோர் பணியாற்றி வரு​கின்​றனர்.

    இந்​நிலை​யில் டாஸ்​மாக் கடை பணி​யாளர்​களை கடைகளின் நிலை மற்​றும் தேவைக்கு ஏற்ப பணி​யிட மாற்​றம் செய்ய டாஸ்மாக் நிர்​வாகம் முடிவு செய்​துள்​ளது. இதற்​காக மாநில அளவில் கலந்​தாய்வு மூலம் பணி நிர​வல் செய்ய நடவடிக்கை எடுக்கப்​பட்​டுள்​ளது. இதற்கு முன் மாவட்ட அளவில் பணி நிர​வல் செய்​யப்​பட்ட நிலை​யில் முதல் முறை​யாக மாநில அளவில் இந்த பணி​ மேற்​கொள்​ளப்​பட​வுள்​ளது.

    இதுகுறித்து டாஸ்​மாக் அதி​காரி​கள் கூறிய​தாவது: டாஸ்​மாக் கடைகளில் தின​மும் நடக்​கும் விற்​பனை​யின் அளவை கொண்டுகடை பணி​யாளர்​களின் எண்​ணிக்கை நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. ரூ.2 லட்​சம் வரை விற்​பனை நடை​பெறும் கடைகளில் ஒரு மேற்​பார்​வை​யாளர், 3 விற்​பனை​யாளர்​களும், ரூ.2-4 லட்​சம் விற்​பனை​யாகும் கடைகளில் ஒரு மேற்​பார்​வை​யாளர், 4 விற் பனை​யாளர்​களும், ரூ.4-6 லட்​சத்​துக்கு 2 மேற்​பார்​வை​யாளர், 4 விற்​பனை​யாளர்​களும், ரூ.6-8 லட்​சத்​துக்கு 2 மேற்​பார்​வை​யாளர், 5 விற்​பனை​யாளர்​களும், ரூ.8-10 லட்​சத்​துக்கு 2 மேற்​பார்​வை​யாளர், 6 விற்​பனை​யாளர்​களும் கடைகளுக்கு ஒதுக்​கப்​பட்​டுள்​ளது.

    இதில் ஒரு சில இடங்​களில் குறை​வான விற்​பனை நடை​பெறும் கடைகளில் கூடு​தலாக​வும், அதி​க​மான விற்​பனை​யாகும் கடைகளில் குறை​வான பணி​யாளர்​களும் உள்​ளனர். இதனை சரி செய்ய கலந்​தாய்வு மூலம் பணி நிர​வல் மேற்கொள்ளப்படவுள்ளது. இதில் ஒரே இடத்​தில்

    10 ஆண்​டு​களுக்கு மேலாக பணி​யாற்​றி​யுள்​ளவர்​களை விற்​பனை அதி​கம் நடக்​கும் இடங்​களில் நியமிக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. மேலும் ஒரு சில இடங்​களில் அதிக விற்​பனை நடந்​தா​லும் அரசி​யல் பின்​புலம் காரண​மாக குறை​வான பணி​யாளர்​களை வைத்தே விற்​பனை செய்​கின்​றனர். இதனை தடுக்​க​வும் இந்த நடவடிக்கை எடுக்​கப்​படு​கிறது. இவ்​வாறு அவர்​கள் கூறினர்.

    இதுகுறித்து தமிழ்​நாடு டாஸ்​மாக் பணி​யாளர் சங்க பொதுச்​செய​லா​ளர் தனசேகர் கூறியதாவது: இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்​கது, இதனால் பணி​யாளர்​களின் பனிசுமை குறை​யும். ஆனால் இதில் எந்தவித குளறு​படிகள் இல்​லாமல் செய்ய வேண்​டும். அரசி​யல் பலம், நிர்​வாகத்​தில் உயர​தி​காரி​களுன் உதவியோடு சிலர் இந்த நடவடிக்​கை​யிலும் தலை​யிட வாய்ப்புள்ளது. அது​போல ஏதும் நடக்​காமல் நிர்​வாக இயக்​குநர் சரி​யாக இந்த பணி நிர​வல்​ கலந்​தய்​வை நடத்​தி முடிக்​க வேண்டும்​. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் நடந்தால் அரசியல் ரீதியில் எதிர்கொள்வோம்: திமுக

    August 13, 2025
    மாநிலம்

    தூய்மைப் பணியாளர்கள் கலைந்து செல்ல உத்தரவு: கைது செய்ய காவல் துறை ஆயத்தம் – ரிப்பன் மாளிகையில் பரபரப்பு

    August 13, 2025
    மாநிலம்

    மூடப்பட்ட 207 அரசுப் பள்ளிகளை திறக்க வேண்டும்: இபிஎஸ் வலியுறுத்தல்

    August 13, 2025
    மாநிலம்

    ‘தொழிற்சங்க சொத்து விவகாரத்தில் அவதூறு’ – ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு வைகோவுக்கு நோட்டீஸ்

    August 13, 2025
    மாநிலம்

    போராடும் தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவு: தமிழிசையை போலீஸார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு

    August 13, 2025
    மாநிலம்

    ஆளுநரின் சுதந்திர தின தேநீர் விருந்து: தமிழக காங், விசிகவை தொடர்ந்து மார்க்சிஸ்ட் புறக்கணிப்பு

    August 13, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் நடந்தால் அரசியல் ரீதியில் எதிர்கொள்வோம்: திமுக
    • உங்கள் மூளையை எவ்வாறு அவிழ்ப்பது: கவனம் கூர்மைப்படுத்துவதற்கும் மன தெளிவை அதிகரிப்பதற்கும் 5 பயனுள்ள படிகள்
    • 50 ஆண்டு கால சினிமா பயணம்: ரஜினிக்கு கமல்ஹாசன் வாழ்த்து
    • தூய்மைப் பணியாளர்கள் கலைந்து செல்ல உத்தரவு: கைது செய்ய காவல் துறை ஆயத்தம் – ரிப்பன் மாளிகையில் பரபரப்பு
    • அவளுடைய நீண்ட ஆயுள் ரகசியம்? 87 வயதான ஷீலா ஐசக்ஸ் ஆரோக்கியமாக இருப்பதற்கான ஒரு உண்மையான அன்பை வெளிப்படுத்துகிறார்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.