Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, August 13
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»அதிமுக ஆட்சி அமைந்ததும் விவசாயத்துக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம்: இபிஎஸ் வாக்குறுதி
    மாநிலம்

    அதிமுக ஆட்சி அமைந்ததும் விவசாயத்துக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம்: இபிஎஸ் வாக்குறுதி

    adminBy adminAugust 12, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அதிமுக ஆட்சி அமைந்ததும் விவசாயத்துக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம்: இபிஎஸ் வாக்குறுதி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கிருஷ்ணகிரி/ஓசூர்: அதிமுக ஆட்சி அமைந்ததும் விவசாயத்துக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என அதிமுக பொதுச்செய லாளர் பழனிசாமி தெரிவித்தார். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரத்தின் 3-ம் கட்ட சுற்றுப்பயணத்தை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி நேற்று தொடங்கினார்.

    இதில், ராயக்கோட்டையில் அவர் பேசியதாவது: மலர் விவசாயிகளுக்காக ஓசூரில் ரூ.20 கோடியில் சர்வதேச பன்னாட்டு மலர் ஏல மையத்தை அதிமுக ஆட்சியில் திறந்து வைத்தோம். ஆனால், அந்த மையத்தை திமுக அரசு மூடி வைத்துள்ளது. நிகழாண்டில் மா மகசூல் அதிகரித்து கடும் விலை வீழ்ச்சியடைந்தது. பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்கவும், மாங்கனி கொள்முதல் விலையை கிலோ ரூ.13 என நிர்ணயம் செய்ய வலியுறுத்தி, உண்ணாவிரதப் போராட்டங்கள் நடத்தினோம்.

    ஆனால், திமுக அரசு கண்டு கொள்ளவில்லை. தற்போது, விவசாயத்துக்கு சுழற்சி முறையில் மும்முனை மின்சாரம் வழn்கப்படுகிறது. திமுக ஆட்சியில் விவசாயிகள் படும் துன்பங்கள், துயரங்களைக் கண்டு கொள்வதில்லை. அதிமுக ஆட்சி அமைந்ததும், மா விவசாயிகளுக்கு விடிவு காலம் பிறக்கும். 24 மணி நேரமும் விவசாயத்துக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.

    அனைத்து ஏழைகள், பட்டியல், பழங்குடியின மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். குறிப்பாக வீட்டுமனை இல்லாவிட்டாலும், நிலம் வழங்கி வீடுகளைக் கட்டித் தருவோம். விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர் கடன்களை 5 ஆண்டுகளில் 2 முறை தள்ளுபடி செய்தது அதிமுக அரசு. ஒவ்வொரு தீபாவளி பண்டிகைக்கும் தாய்மார்களுக்கு தரமான சேலை வழங்குவோம். இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து, தேன்கனிக் கோட்டையில் பேசும்போது, “நான் பேருந்து எடுத்து கொண்டு புறப்பட்டதால், ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளார். அதிமுக – பாஜக கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணி என்பதற்கு மக்களே சாட்சி. திமுக, கூட்டணி கட்சிகளை நம்பி உள்ளது. அதிமுக – பாஜக கூட்டணி மக்களை நம்பி உள்ளது. 2026-ல் சட்டப்பேரவை தேர்தலில் திமுக 200 இடங்களில் வெல்லும் என ஸ்டாலின் பொய் சொல்கிறார்.

    ஆனால், அதிமுக- பாஜக கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும். மத்திய அரசுடன் அதிமுக இணக்கமாக இருந்து ஆட்சி செய்து, தமிழகம் ஏற்றம் பெற்றது. ஊழல் நிறைந்த திமுக ஆட்சியை அகற்றவே, அதிமுக-பாஜக கூட்டணி அமைந்துள்ளது” என்றார்.

    பின்னர், ஓசூர் மற்றும் சூளகிரியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ, மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை, முன்னாள் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், பாலகிருஷ்ணரெட்டி மற்றும் பாஜக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ‘தாயுமானவர்’ திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்: முதியோர் மாற்றுத் திறனாளிகள் வீடுகளுக்கே சென்று ரேசன் பொருட்கள் விநியோகம்

    August 13, 2025
    மாநிலம்

    மாமல்லபுரத்தில் அன்புமணி கூட்டிய பொதுக்குழு சட்ட விரோதம்: தேர்தல் ஆணையத்துக்கு ராமதாஸ் கடிதம்

    August 13, 2025
    மாநிலம்

    சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும்: பள்ளிகளுக்கு கல்வித் துறை அறிவுறுத்தல்

    August 13, 2025
    மாநிலம்

    ஆர்.நல்லகண்ணு நூற்றாண்டு சிறப்பு வெளியீடு: ‘அறவாழ்வின் அடையாளம்’ நூலை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்

    August 13, 2025
    மாநிலம்

    வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: திருவள்ளூர், ராணிப்பேட்டை, நீலகிரியில் இன்று கனமழை

    August 13, 2025
    மாநிலம்

    தேர்தல் வியூகம், கூட்டணி, கட்சி பணிகள் குறித்து பாஜக நிர்வாகிகளுடன் தேசிய பொதுச்செயலாளர் ஆலோசனை

    August 13, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பள்ளிகள் இடையிலான வாலிபால்: டான் போஸ்கோ, வேலம்மாள் அரை இறுதிக்கு முன்னேற்றம்
    • ‘தாயுமானவர்’ திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்: முதியோர் மாற்றுத் திறனாளிகள் வீடுகளுக்கே சென்று ரேசன் பொருட்கள் விநியோகம்
    • உரத்த குறட்டை ஏன் ஒரு சிவப்புக் கொடியாக இருக்கக்கூடும் என்று சிறந்த செயல்பாட்டு மருத்துவ மருத்துவர் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மாமல்லபுரத்தில் அன்புமணி கூட்டிய பொதுக்குழு சட்ட விரோதம்: தேர்தல் ஆணையத்துக்கு ராமதாஸ் கடிதம்
    • உயர் யூரிக் அமில அறிகுறிகள்: இரத்த பரிசோதனை உறுதிப்படுத்துவதற்கு முன்பு உங்கள் உடல் கொடுக்கும் உயர் யூரிக் அமிலத்தின் 7 ஆரம்ப அறிகுறிகள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.