Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, August 13
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான நாகேந்திரனுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள ஐகோர்ட் உத்தரவு
    மாநிலம்

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான நாகேந்திரனுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள ஐகோர்ட் உத்தரவு

    adminBy adminAugust 12, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான நாகேந்திரனுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள ஐகோர்ட் உத்தரவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிறையில் உள்ள நாகேந்திரனுக்கு கல்லீரல் பாதிப்பு தொடர்பாக மருத்துவ பரிசோதனைகளை இன்று மேற்கொள்ள வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நாகேந்திரன் உள்ளிட்ட 27 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக உள்ள நாகேந்திரன் கல்லீரல் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வருகிறார். சிறையில் நாகேந்திரன் உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும், அவருக்கு உரிய சிகிச்சை வழங்க கோரி அவரின் மனைவி விசாலாட்சி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கு, நீதிபதி எம்.எஸ் ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நாகேந்திரனுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளவதற்கு அவரின் குடும்பத்தினர் 3 பேர் கல்லீரல் தானம் செய்ய தயாராக இருப்பதாகவும், அது தொடர்பாக நாகேந்திரன் குடும்பத்தினர் அளித்த விவரங்களை காவல் துறை தரப்பில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் தாமேதரன் தாக்கல் செயதார்

    நாகேந்திரன் உடல் நிலை குறித்து வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அவரை இன்று அனுமதித்து மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், அதே வேளையில் நாகேந்திரனுக்கு கல்லீரல் தானம் செய்ய இருக்கும் குடும்பத்தினரின் உடல் நிலையை பரிசோதிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    இந்த பரிசோதனைகளுக்கு பின்னர் நாகேந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என சிஎம்சி மருத்துவர்கள் அறிவுறுத்தினால், நாகேந்திரனுடன் அவருக்கு உதவியாக அவரின் குடும்பத்தினர் ஒருவர் மட்டும் உடன் இருக்க அனுமதி அளிக்கப்படுவதாகவும், உடன் இருக்கும் குடும்ப உறுப்பினர் மொபைல் போன் பயன்படுத்த அனுமதி இல்லை என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 18-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    சுதந்திர தின விழா: சென்னையில் பாதுகாப்பு பணியில் 9,000 போலீஸ்; கோட்டையை சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு வளையம்

    August 13, 2025
    மாநிலம்

    தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: குடியரசுத் தலைவர் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்

    August 13, 2025
    மாநிலம்

    பள்ளி மாணவர்களிடம் நாட்டு வெடிகுண்டு: உரிய நடவடிக்கை எடுக்க இபிஎஸ் வலியுறுத்தல்

    August 13, 2025
    மாநிலம்

    வெள்ள பாதிப்பு பகுதிகளில் இருந்து மீட்டு சிகிச்சை அளிக்க கர்ப்பிணிகள், நோயாளிகளுக்கு படகு ஆம்புலன்ஸ் சேவை

    August 13, 2025
    மாநிலம்

    ‘வாக்குத் திருட்டு’ மற்றும் பிஹார் SIR-க்கு கண்டனம்: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்

    August 13, 2025
    மாநிலம்

    மீன்வளத் துறை சார்பில் மீன் இறங்குதளங்கள் உட்பட ரூ.177 கோடியில் பணிகள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

    August 13, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சுதந்திர தின விழா: சென்னையில் பாதுகாப்பு பணியில் 9,000 போலீஸ்; கோட்டையை சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு வளையம்
    • ஒரு நாளைக்கு இரண்டு முறைக்கு மேல் சாப்பிடுவதை நிறுத்துங்கள்: இருதயநோய் நிபுணர் ஆல்கஹால், குச்சி அல்லாத பான்கள், மறைக்கப்பட்ட இதய அபாயங்கள் மற்றும் தடுக்க பிற உதவிக்குறிப்புகள் பற்றி எச்சரிக்கிறார் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஆக.15-ல் அனைத்து மசூதிகளிலும் தேசியக் கொடி: சத்தீஸ்கர் மாநில வக்பு வாரியம் உத்தரவு
    • ‘அப்டேட்’ இல்லையெனில் ‘அவுட்டேட்’
    • தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: குடியரசுத் தலைவர் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.