Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, August 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»‘தாயுமானவர் திட்டம்’ இந்தியாவுக்கே முன்மாதிரி முயற்சி: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
    மாநிலம்

    ‘தாயுமானவர் திட்டம்’ இந்தியாவுக்கே முன்மாதிரி முயற்சி: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

    adminBy adminAugust 12, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘தாயுமானவர் திட்டம்’ இந்தியாவுக்கே முன்மாதிரி முயற்சி: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: 70 வயதுக்கு மேற்பட்ட 20 இலட்சத்து 42 ஆயிரத்து 657 மூத்த குடிமக்கள் – 1 லட்சத்து 27 ஆயிரத்து 797 மாற்றுத் திறனாளிகள் என மொத்தம் 21 இலட்சத்து 70 ஆயிரத்து 454 பேர் பயனடையும் ‘தாயுமானவர் திட்டம்’ உள்ளிட்ட அரசின் சேவைகளை மக்களின் வீடுகளுக்கே தேடிச் சென்று கொடுப்பது, இந்தியாவிற்கே முன்மாதிரி முயற்சி என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

    ‘தாயுமானவர் திட்டம்’ தொடங்கிவைக்கப்படுவது குறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவில் வெளியிட்டுள்ள காணொலிப் பதிவு மூலம் கருத்து தெரிவித்துள்ளார்.

    அதன் விவரம் வருமாறு: வணக்கம்! நம்முடைய திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்துப் பார்த்து செயல்படுத்திக்கொண்டு இருக்கிறோம்! அந்த வரிசையில், என்னுடைய மனதிற்கு பிடித்த திட்டமாக உருவாகியிருப்பதுதான், இந்த தாயுமானவர் திட்டம்!

    கூட்டுறவுத் துறை சார்பில், வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேசன் பொருட்களை வழங்கும் தாயுமானவர் திட்டத்தை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! இப்படி, அரசின் சேவைகளை மக்களின் வீடுகளுக்கே தேடிச் சென்று கொடுப்பது, இந்தியாவிற்கே முன்மாதிரி முயற்சி!

    ஒரு திட்டத்தை அறிவிப்பதோடு, கடமை முடிந்துவிடுவதாக நாம் நினைப்பதில்லை! அந்த திட்டத்தின் பலன் – பயன், கடைக்கோடி மனிதரையும் சென்று சேருகிறதா என்று கண்காணிப்பதையும் கடமையாக நினைக்கிறேன்! அப்படி, வயது முதிர்ந்தோரும் – மாற்றுத் திறனாளிகளும் ரேசன் கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்குவதில் ஏற்படும் சிரமத்தை உணர்ந்து, இந்த திட்டத்தை உருவாக்கியிருக்கிறோம்!

    இந்தத் திட்டத்தை 34 ஆயிரத்து 809 நியாய விலைக் கடைகளில் செயல்படுத்த போகிறோம்! 70 வயதுக்கு மேற்பட்ட 20 இலட்சத்து 42 ஆயிரத்து 657 மூத்த குடிமக்கள் – ஒரு இலட்சத்து 27 ஆயிரத்து 797 மாற்றுத் திறனாளிகள் என்று 21 இலட்சத்து 70 ஆயிரத்து 454 பேர் இந்த திட்டத்தால் பயனடைய போகிறார்கள்! ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் குடிமை பொருட்கள் உங்கள் வீடு தேடி வந்துவிடும்! இதற்காக கூட்டுறவுத் துறைக்கு ஆகப்போகும் 30 கோடியே 16 இலட்சம் ரூபாயை கூடுதல் செலவாக கருதாமல் – மக்களுக்கு செய்யும் உயிர்காக்கும் கடமையாக நாங்கள் நினைக்கிறோம்! இது கூட்டுறவுத் துறையின் மிகப்பெரிய சேவை! அந்தத் துறை அதிகாரிகள், அலுவலர்கள், கடை விற்பனையாளர்கள் செய்யப் போகும் மிகப்பெரிய கடமை!

    தமிழ்நாடு முழுவதும் 37 ஆயிரத்து 328 நியாய விலைக் கடைகள் இருக்கிறது! இதில், கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 2 ஆயிரத்து 394 புதிய நியாய விலைக் கடைகளை திறந்திருக்கிறோம்! தலைவர் கலைஞர் வழியில், இந்த நியாய விலைக் கடைகளை நாம் முறையாக – சிறப்பாக நடத்துவதால்தான், தமிழ்நாடு இன்றைக்கு பட்டினிச் சாவு இல்லாத மாநிலமாக இருக்கிறது! இந்த ரேசன் கடைகளின் பயன்பாட்டை இன்னும் எளிமையாக்க முயற்சிகள் எடுத்திருக்கிறோம்!

    இந்த நேரத்தில், கூட்டுறவுத் துறை அதிகாரிகள் மற்றும் அலுவலவலர்களுக்கு நான் வைக்கும் வேண்டுகோள் என்பது – இந்த திட்டத்தின் நோக்கம் நூறு விழுக்காடு நிறைவேறும் வகையில் உங்களின் பணி அமைய வேண்டும்! உங்களை எதிர்பார்த்து காத்திருக்கும் முதியவர்களும் மாற்றுத்திறனாளிகளும் மனம் குளிரும் வகையில் நீங்கள் கனிவாக நடந்துகொள்ள வேண்டும்! நீங்கள் பெறும் நல்ல பெயர்தான், ஆட்சிக்கு கிடைக்கும் பாராட்டு.

    இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்த ‘தாயுமானவர்’ திட்டம் – சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

    August 12, 2025
    மாநிலம்

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான நாகேந்திரனுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள ஐகோர்ட் உத்தரவு

    August 12, 2025
    மாநிலம்

    முருகன் வரலாறா அல்லது மு.க.ஸ்டாலின் வரலாறா? – அன்புமணி சாடல்

    August 12, 2025
    மாநிலம்

    எய்ட்ஸ் தொற்றுள்ளவர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை: புதுவை முதல்வர் அறிவிப்பு

    August 12, 2025
    மாநிலம்

    தூய்மைப் பணியை தனியாருக்கு தருவதை எதிர்த்து வழக்கு: மாநகராட்சி நிர்வாகம், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

    August 12, 2025
    மாநிலம்

    ‘நாம் மாற்று சக்தி இல்லை; நாமே முதன்மை சக்தி’ – மதுரை மாநாட்டுக்கு விஜய் அழைப்பு

    August 12, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • இந்த நாடுகளுக்குச் செல்வது உங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்: சி.டி.சி சிக்கல்கள் நிலை 2 ஜெர்மனி, இங்கிலாந்து மற்றும் பிறவற்றிற்கான எச்சரிக்கை அதிகரித்து வரும் போலியோ வைரஸ் கவலைகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • IISC, தொடக்கமானது பல் உணர்திறனை நடத்துவதற்கு காந்த நானோபோட்களை உருவாக்குகிறது – இந்தியாவின் டைம்ஸ்
    • ‘நேர்காணலுக்கு என்னை அழைத்த ஒரே நிறுவனம் சிபொட்டில் தான்’: இந்தியன் -ஆரிஜின் டெக்கியின் சிலிக்கான் வேலி கதை வைரலாகி வருகிறது – இந்தியாவின் டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவு எத்தகையது? – நிபுணர்கள் கருத்து
    • முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்த ‘தாயுமானவர்’ திட்டம் – சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.