Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, August 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தூய்மை பணியாளர்களுக்கு எதிராக செயல்படுவதுபோல் போலி பிம்பம்: ஐகோர்ட்டில் தமிழக அரசு வாதம்
    மாநிலம்

    தூய்மை பணியாளர்களுக்கு எதிராக செயல்படுவதுபோல் போலி பிம்பம்: ஐகோர்ட்டில் தமிழக அரசு வாதம்

    adminBy adminAugust 12, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தூய்மை பணியாளர்களுக்கு எதிராக செயல்படுவதுபோல் போலி பிம்பம்: ஐகோர்ட்டில் தமிழக அரசு வாதம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: அரசு, தூய்மை பணியாளர்களுக்கு எதிராக செயல்படுவது போன்ற போலி பிம்பம் கட்டமைக்கப்படுவதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

    தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பணி நிரந்தரம் கோரியும் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் கடந்த 12 நாட்களாக நீடித்து வருகிறது.

    இந்த போராட்டம் காரணமாக பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி, வழக்கறிஞர் வினோத் நேற்று முறையீடு செய்திருந்தார். மனுத்தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும் என தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்திருந்தது.

    இந்நிலையில் தலைமை நீதிபதி அமர்வில் ஆஜராகி இருந்த வழக்கறிஞர் வினோத், மீண்டும் இன்று இந்த விவகாரம் தொடர்பாக முறையீடு செய்தார்.

    அப்போது குறுக்கிட்ட தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், “தூய்மைப் பணியாளர்களுக்கு அரசு ஆதரவாக இருக்கிறது. தூய்மைப் பணியாளர்களுக்கு எதிராக அரசு செயல்படுவதை போன்ற போலி தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது.” என விளக்கமளித்தார்.

    அப்போது மனுவில் சில குறைபாடுகள் இருப்பதாக பதிவுத் துறை தெரிவித்ததை சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி எம்​.எம்​.ஸ்ரீவஸ்​த​வா, குறைபாடுகளை நிவர்த்தி செய்து மனுத்தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்றும் தினந்தோறும் முறையீடு செய்தால் மனு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட மாட்டாது எனவும் எச்சரித்தார்.

    சர்ச்சையின் பின்னணி: சென்னை மாநக​ராட்​சி​யின், 5-வது மற்​றும் 6-வது மண்​டலங்​களில் தூய்​மைப் பணிக்​கான ரூ. 276 கோடிக்​கான ஒப்​பந்​தத்தை தனியாருக்கு வழங்​கியதை எதிர்த்​து, தூய்​மைப் பணி​யாளர்​கள் சென்னை மாநகராட்சி அலு​வல​கம் முன்​பாக கடந்த 10 நாட்​களுக்​கும் மேலாக தொடர் போராட்​டத்​தில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

    மாநக​ராட்சி தூய்​மைப் பணி​களை தனி​யாருக்கு வழங்​கும் தீர்​மானத்தை ரத்து செய்​து, தூய்மை பணியாளர்களின் வாழ்​வா​தா​ரத்தை பாது​காக்​கக்​கோரி அவர்கள் போராடி வருகின்றனர்.

    முன்னதாக, சென்னை மாநக​ராட்​சி​யில், தூய்மை பணி​களை தனி​யாருக்கு வழங்​கு​வதை எதிர்த்து தொடரப்​பட்ட வழக்​கில், மாநக​ராட்சி நிர்​வாக​மும். தமிழக அரசும் இன்று பதிலளிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​வி்ட்​டது நினைவுகூரத்தக்கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான நாகேந்திரனுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள ஐகோர்ட் உத்தரவு

    August 12, 2025
    மாநிலம்

    முருகன் வரலாறா அல்லது மு.க.ஸ்டாலின் வரலாறா? – அன்புமணி சாடல்

    August 12, 2025
    மாநிலம்

    எய்ட்ஸ் தொற்றுள்ளவர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை: புதுவை முதல்வர் அறிவிப்பு

    August 12, 2025
    மாநிலம்

    தூய்மைப் பணியை தனியாருக்கு தருவதை எதிர்த்து வழக்கு: மாநகராட்சி நிர்வாகம், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

    August 12, 2025
    மாநிலம்

    ‘நாம் மாற்று சக்தி இல்லை; நாமே முதன்மை சக்தி’ – மதுரை மாநாட்டுக்கு விஜய் அழைப்பு

    August 12, 2025
    மாநிலம்

    மதுரையில் தவெக மாநில மாநாடு ஏற்பாடுகள் தீவிரம்!

    August 12, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கேளிக்கை வரியை குறைக்க புதுச்சேரி அரசு மறுப்பு: 15 திரையரங்குகளில் மட்டுமே ‘கூலி’ ரிலீஸ்
    • ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான நாகேந்திரனுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள ஐகோர்ட் உத்தரவு
    • கிறிஸ்டியானோ ரொனால்டோவின் முதல் குழந்தை கிறிஸ்டியானோ ஜூனியரின் உயிரியல் தாய் யார்? இல்லை, இது ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் அல்ல – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • “காசாவில் இனப்படுகொலை நடக்கவில்லை” – பிரியங்கா குற்றச்சாட்டுக்கு இஸ்ரேல் தூதர் பதில்
    • முருகன் வரலாறா அல்லது மு.க.ஸ்டாலின் வரலாறா? – அன்புமணி சாடல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.