சென்னை: தேசிய மருத்துவ ஆணையத்தின் (என்எம்சி) செயலர் மருத்துவர் ராகவ் லங்கர் வெளியிட்ட அறிவிப்பு: நாடு முழுவதும் உள்ள அரசுமற்றும் தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் அனைத்து விதமான விவரங்களையும், அவர்களுக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் குறித்த தரவுகளையும் ஆவணப்படுத்த வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், சில மருத்துவ கல்லூரிகளும், கல்வி நிறுவனங்களும் அதனை முறையாக பின்பற்றுவதில்லை.
மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுவோரின் ஆவணங்களில் துறை சார் மருத்துவர் மற்றும் முதுநிலை உறைவிட மருத்துவர் கையெழுத்து அவசியம் இருக்க வேண்டும். மருத்துவ கல்லூரிகளில் ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் ஆய்வு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த விவரங்களையும் தேசிய மருத்துவ ஆணையத்தின் அதிகாரிகள் சோதனை செய்வார்கள். அதில் ஏதேனும் போலி ஆவணங்களோ, விவரங்களோ இருப்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட மருத்துவ கல்லூரிகள் மற்றும் மருத்துவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.