Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, August 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»சட்டவிரோத வருவாயை பிரிக்கவே மாதந்தோறும் கூட்டம்: கனிமவள அதிகாரிகள் மீது நீதிபதி கடும் அதிருப்தி
    மாநிலம்

    சட்டவிரோத வருவாயை பிரிக்கவே மாதந்தோறும் கூட்டம்: கனிமவள அதிகாரிகள் மீது நீதிபதி கடும் அதிருப்தி

    adminBy adminAugust 12, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சட்டவிரோத வருவாயை பிரிக்கவே மாதந்தோறும் கூட்டம்: கனிமவள அதிகாரிகள் மீது நீதிபதி கடும் அதிருப்தி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: சட்​ட​விரோத வரு​வாயை தங்​களுக்​குள் பிரித்​துக் கொள்​ளவே கனிம வளத்​துறை அதி​காரி​கள் மாதந்தோறும் கூட்​டம் நடத்​து​வ​தாக உயர் நீதி​மன்ற நீதிபதி கடும் அதிருப்தி தெரி​வித்​தார்.

    திண்​டுக்​கல் மாவட்டம், சின்​னாள​பட்டி பகு​தி​யைச் சேர்ந்த தினேஷ்கு​மார், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு: மாற்​றுத் திற​னாளி​யான நான், 2018-ம் ஆண்​டில் திண்​டுக்​கல் மாவட்ட புவி​யியல் மற்​றும் சுரங்​கத்​துறை​யின் மாவட்ட கனிம நிதி அறக்​கட்​டளை​யில் கணக்​காள​ராகச் சேர்ந்​தேன். 2022-ம் ஆண்​டில் மாரி​யம்​மாள் என்​பவர் உதவி இயக்​குந​ராக பொறுப்​பேற்​றார்.

    அவர் தற்​காலிக பணி​யில் இருந்த என்னை நீக்​கி​னார். பிறகு அவருக்கு உதவி​யாள​ராகப் பணிபுரி​யு​மாறும், அதற்கு ஊதி​யம் தரு​வ​தாக​வும் கூறி​னார். அதன்​படி, அவருக்கு உதவி​யாள​ராகப் பணிபுரிந்​தேன். குவாரி உரிமை​யாளர்​கள் எனது வங்​கிக் கணக்​கில் செலுத்​தும் லஞ்​சப் பணத்தை வாரத்​துக்கு ஒரு​முறை எடுத்து உதவி இயக்​குநர் மாரி​யம்​மாளிடம் ஒப்​படைத்து விடு​வேன். அப்​போது போலி நடைச்​சீட்டு வழங்​கிய​தாக புகார் எழுந்​தது. அதற்கு நான்​தான் காரணம் என மாரி​யம்​மாள் கூறி​னார்.

    இதனால் அவரது தூண்​டு​தலின்​ பேரில் குவாரி உரிமை​யாளர்​கள் கொடுத்த லஞ்​சப் பணத்தை என்​னிடம் கேட்டு கொலை மிரட்டல் விடுகின்​றனர். எனக்கும், என் தாயார் உயிருக்கு அச்​சுறுத்​தல் ஏற்​பட்​டுள்​ளது.

    60-க்​கும் மேற்​பட்ட குவாரி உரிமை​யாளர்​களிடம் இருந்து மாரி​யம்​மாள் வங்​கிக் கணக்கு மூலம் லஞ்​சப்​பணம் வாங்கியதற்​ கான ஆதா​ரங்​கள் என்​னிடம் உள்​ளன. எனவே எனக்​கும், எனது தாயாருக்​கும் போலீஸ் பாது​காப்பு வழங்க உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு அதில் கூறி​யிருந்​தார்.

    இந்த மனு நீதிபதி பி.பு​கழேந்தி முன் விசா​ரணைக்கு வந்​தது. அரசு வழக்​கறிஞர் வாதிடும்​போது, “மனு​தா​ரர் உள்​நோக்​கத்​துடன் இந்த வழக்கை தாக்​கல் செய்து உள்​ளார். தனிப்​பட்ட முறையில் குவாரி உரிமை​யாளர்​களிடம் இருந்​தும் மனு​தா​ரர் ஆதா​யம் அடைந்​துள்​ளார். எனவே மனுவை தள்​ளு​படி செய்யவேண்​டும்” என்​றார்.

    மனு​தா​ரரின் வழக்​கறிஞர் வாதிடும்​போது, “கனிமவள உதவி இயக்​குநர் மாரி​யம்​மாள், லஞ்ச வழக்​கால் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்ட 3 மாதத்​தில் மீண்​டும் அதே பணி​யிடத்​தில் நியமிக்​கப்​பட்​டுள்​ளார். அவர் பல்​வேறு குவாரி உரிமை​யாளர்​களிடம் இருந்து லஞ்​சம் பெற்​றதற்கு ஆதா​ரங்​கள் உள்​ளன.

    தற்​போது, அவர் தேனி மாவட்​டத்​தில் பணி​யில் இருப்​ப​தால் இந்த மாவட்​டத்​தில் இருந்து சுமார் ரூ.2,000 கோடி மதிப்​புள்ள கனிமவளங்​கள் கேரளா​வுக்கு கடத்​தப்​படு​கின்​றன” என்றார். இதையடுத்து நீதிப​தி, “கனிம வள அதி​காரி​கள் கூட்​டம் நடத்​து​வ​தே, ஒவ்​வொரு மாத​மும் எவ்​வளவு வரு​மானம் வரு​கிறது? அதை எப்​படி பிரித்​துக் கொள்​வது என்​ப​தற்​காகத்​தான்.

    அதி​காரி​களும், குவாரி உரிமை​யாளர்​களும் அரசுக்​குச் சேர வேண்​டிய வரு​வாயைப் பங்கு போட்​டுக் கொள்​கின்​றனர். தமிழகம் முழு​வதும் இதே நிலை​தான் நீடிக்​கிறது. மனு​தாரர் வங்​கிக் கணக்​கில் குவாரி உரிமை​யாளர்​கள் எதற்​காக பணம் செலுத்​தினர்? இதன் மூலம் யார் ஆதாயம் அடைந்​தனர்? என்று அம்​பாத்​துறை காவல் ஆய்​வாளர் விரிவாக​வும், நேர்​மை​யாக​வும் விசா​ரணை நடத்தி நீதி​மன்​றத்​தில் அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டும்.

    தவறும்​பட்​சத்​தில் இந்த விவ​காரம் சிபிசிஐடி விசா​ரணைக்கு மாற்​றப்​படும். இந்த வழக்​கில் நேர்​மை​யாக விசா​ரணை நடத்தினால், அரசுக்கு குறைந்​த​பட்​சம் ஆயிரம் கோடி ரூபாய் வரு​வாய் பெற்​றுத்தர முடி​யும். இந்த விசா​ரணைக்கு தேவை​யான உதவிகளை திண்​டுக்​கல் மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் செய்ய வேண்​டும். விசா​ரணை ஆக.22-க்கு தள்ளிவைக்கப்படுகிறது’’ என உத்​தரவிட்​டார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ‘நாம் மாற்று சக்தி இல்லை; நாமே முதன்மை சக்தி’ – மதுரை மாநாட்டுக்கு விஜய் அழைப்பு

    August 12, 2025
    மாநிலம்

    மதுரையில் தவெக மாநில மாநாடு ஏற்பாடுகள் தீவிரம்!

    August 12, 2025
    மாநிலம்

    ராகுல்காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து: சென்னையில் மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கைது

    August 12, 2025
    மாநிலம்

    ஜெயலலிதா எனது அரசியல் ரோல் மாடல்: தேமுதிக பொதுச்​செயலாளர் பிரேமலதா கருத்து

    August 12, 2025
    மாநிலம்

    ‘தாயுமானவர் திட்டம்’ இந்தியாவுக்கே முன்மாதிரி முயற்சி: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

    August 12, 2025
    மாநிலம்

    தூய்மை பணியாளர்களுக்கு எதிராக செயல்படுவதுபோல் போலி பிம்பம்: ஐகோர்ட்டில் தமிழக அரசு வாதம்

    August 12, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘நாம் மாற்று சக்தி இல்லை; நாமே முதன்மை சக்தி’ – மதுரை மாநாட்டுக்கு விஜய் அழைப்பு
    • கல்லீரல் பாதிப்பு: மஞ்சள் முதல் கிரீன் டீ: மூலிகை சப்ளிமெண்ட்ஸ் கல்லீரலை ஆபத்தில் வைக்க முடியுமா? | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நாசா எங்கள் சூரிய குடும்பம் மூலம் மர்மமான விண்மீன் பொருள் பந்தயத்தில் விறுவிறுப்பான புதுப்பிப்பைப் பகிர்ந்து கொள்கிறது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழுவை அறிவித்தார் மக்களவை சபாநாயகர்
    • மாணவர் சேர்க்கை இல்லை என்று கூறி 207 அரசுப் பள்ளிகளுக்கு மூடுவதா? – அன்புமணி கண்டனம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.