Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, August 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»கவின் கொலை வழக்கு: எஸ்.ஐ., மகனை 2 நாள் காவலில் விசாரிக்க சிபிசிஐடி-க்கு அனுமதி
    மாநிலம்

    கவின் கொலை வழக்கு: எஸ்.ஐ., மகனை 2 நாள் காவலில் விசாரிக்க சிபிசிஐடி-க்கு அனுமதி

    adminBy adminAugust 11, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கவின் கொலை வழக்கு: எஸ்.ஐ., மகனை 2 நாள் காவலில் விசாரிக்க சிபிசிஐடி-க்கு அனுமதி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    நெல்லை: திருநெல்வேலியில் ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ் கொலை வழக்கில் கைதான சப்-இன்ஸ்பெக்டரையும், அவரது மகனையும் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

    தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியை சேர்ந்த பட்டியலின சமூக இளைஞரான மென்பொருள் பொறியாளர் கவின் செல்வ கணேஷ் கடந்த 27-ம் தேதி திருநெல்வேலி கேடிசி நகரில் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் இவர் காதலித்ததாக கூறப்படும் பெண்ணின் சகோதரர் சுர்ஜித் என்பவரை பாளையங்கோட்டை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    அவரது பெற்றோரான தமிழ்நாடு சிறப்பு காவல்படை சப்-இன்ஸ்பெக்டர்களான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். சரவணனை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

    இந்நிலையில், கொலை தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக சிறையில் இருக்கும் சுர்ஜித் மற்றும் சரவணன் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி சார்பில் திருநெல்வேலி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை திருநெல்வேலி மாவட்ட 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி ஹேமா முன்னிலையில் இன்று நடைபெற்றது.

    இதையொட்டி பாளையங்கோட்டை மத்திய சிறையிலிருந்து துப்பாக்கி போலீஸார் பாதுகாப்புடன் சுர்ஜித்தும், சரவணனும் அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இரு தரப்பு வாதங்களுக்குப்பின் சப்-இன்ஸ்பெக்டரையும், அவரது மகனையும் 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணைக்குப்பின் நாளை மறுநாள் மாலை 6 மணிக்குள் அவர்களை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி ஹேமா உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    “வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்டச் சாலையை தனியாருக்கு தாரை வார்க்க திமுக துடிப்பது ஏன்?” – அன்புமணி

    August 12, 2025
    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: திருவள்ளூர், ராணிபேட்டை, நீலகிரியில் கனமழை வாய்ப்பு

    August 12, 2025
    மாநிலம்

    “ராகுல் காந்தியை மன்னிப்பு கேட்க சொல்வது ஜனநாயக கேலிக்கூத்து!” – அப்பாவு கருத்து

    August 12, 2025
    மாநிலம்

    திருச்சி டிஐஜி வருண்குமார் உள்பட 4 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

    August 12, 2025
    மாநிலம்

    “ஓட்டு வாங்கிய பிறகு வாக்கு மாறிவிடுமா?” – போராடும் தூய்மை பணியாளர்கள் கொந்தளிப்பு

    August 11, 2025
    மாநிலம்

    “கவின் படுகொலையை விஜய் கண்டிக்கவில்லை” – திருமாவளவன்

    August 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்டச் சாலையை தனியாருக்கு தாரை வார்க்க திமுக துடிப்பது ஏன்?” – அன்புமணி
    • இரவு நேர உணவை நிறுத்துங்கள்: படுக்கைக்கு முன்பு உங்கள் உணவை முடிக்க வேண்டும்? | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • டெல்லியில் தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி செல்ல முயன்ற ராகுல், கார்கே, அகிலேஷ் உள்ளிட்ட எம்.பி.க்கள் கைது
    • வானிலை முன்னறிவிப்பு: திருவள்ளூர், ராணிபேட்டை, நீலகிரியில் கனமழை வாய்ப்பு
    • இன்சுலின் எதிர்ப்பின் எச்சரிக்கை அறிகுறிகள் நீங்கள் புறக்கணிக்க முடியாது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.