Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, August 13
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது முப்படைகளுக்கு முழு சுதந்திரம் அளித்த மத்திய அரசு: ராணுவ தளபதி நெகிழ்ச்சி
    மாநிலம்

    ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது முப்படைகளுக்கு முழு சுதந்திரம் அளித்த மத்திய அரசு: ராணுவ தளபதி நெகிழ்ச்சி

    adminBy adminAugust 11, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது முப்படைகளுக்கு முழு சுதந்திரம் அளித்த மத்திய அரசு: ராணுவ தளபதி நெகிழ்ச்சி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கை​யின்​போது முப்​படைகளுக்கு மத்​திய அரசு முழு சுதந்​திரம் அளித்​த​தால்​தான் களத்​தில் உத்​வேகத்​துடன் செயல்பட முடிந்​தது என்று ராணுவ தளபதி உபேந்​திர திவேதி தெரி​வித்​தார்.

    சென்னை ஐஐடி​யில் இந்​திய ராணுவ ஆராய்ச்சி மைய​மான ‘அக்​னிஷோத்’ தொடக்க நிகழ்ச்சி சமீபத்​தில் நடை​பெற்​றது. ராணுவ தளபதி உபேந்​திர திவேதி சிறப்பு விருந்​தின​ராக கலந்​து​கொண்​டு, மையத்தை தொடங்கி வைத்​தார். அவர் பேசி​ய​தாவது: ஜம்மு காஷ்மீரின் பஹல்​காமில் கடந்த ஏப்​ரல் 22-ம் தேதி தீவிர​வா​தி​கள் தாக்​குதல் நடத்​தினர். அடுத்த நாளான 23-ம் தேதி சிறப்பு கூட்​டம் கூட்​டப்​பட்​டது. அதில், பாது​காப்​புத் துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங் மற்​றும் முப்​படை தளப​தி​கள் பங்​கேற்​றோம். பதிலடி​யாக ஏதாவது செய்ய வேண்​டும் என்​ப​தில் அனை​வரும் தெளி​வாக இருந்​தோம். என்ன செய்ய வேண்​டும் என்று முடி​வெடுக்க அரசிடம் இருந்து முழு சுதந்​திரம் எங்​களுக்கு வழங்​கப்​பட்​டது. இதன்​மூலம் முழு​மை​யான நம்​பிக்​கை, அரசி​யல் தெளிவு கிடைத்​த​தால், ராணுவ தளப​தி​கள் களத்​தில் விருப்​பப்​படி செயல்பட முடிந்​தது.

    இந்த சந்​திப்​புக்கு 2 நாட்​களுக்கு பிறகு, தீவிர​வாத இலக்​கு​களை எவ்​வாறு தாக்​கு​வது என்​பது குறித்து ஒரு திட்​டம் வகுக்​கப்​பட்​டது. தாக்​குதல் நடத்த வேண்​டிய இலக்​கு​களை முடிவு செய்​தோம். திட்​ட​மிடப்​பட்ட 9 இலக்​கு​களில் 7 முக்​கிய இலக்​கு​களை முழு​வதும் அழித்​தோம். இதில், ஏராள​மான தீவிர​வா​தி​கள் கொல்​லப்​பட்​டனர். ‘ஆபரேஷன் சிந்​தூர்’ என்ற இரண்டே வார்த்​தை, ஒட்​டுமொத்த தேசத்​தை​யும் ஒருங்​கிணைத்​தது. அதனால்​தான் மொத்த நாடும் எங்​களுக்கு ஆதர​வாக இருந்​தது. ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்கை ஒரு சதுரங்க விளை​யாட்​டு​போல இருந்​தது. ஏனென்​றால், எதிரி​யின் அடுத்த நகர்வு என்​ன​வாக இருக்​கும், என்ன செய்​யப் போகிறார்​கள் என்​பது எங்​களுக்கு தெரி​யாது. எதிரி​களும் சதுரங்க நகர்​வு​களை செய்து வந்​தனர். அவர்​களுக்கு தொடர்ந்து ‘செக்’ வைத்​துக்​கொண்டு இருந்​தோம்.

    உரி, பால​கோட் போன்ற முந்​தைய பதிலடி தாக்​குதலில் இருந்துவேறு​பட்​டது ஆபரேஷன் சிந்​தூர். உரி நடவடிக்​கை​யின்​போது,ஏவுதளங்​களை குறிவைப்​ப​தில் கவனம் செலுத்​தப்​பட்​டது. 2019-ம்ஆண்டு பால​கோட் தாக்​குதல்​களில், பதிலடி கொடுக்​கும் வித​மாக ஜம்மு காஷ்மீர் வழி​யாக ஊடுருவி பாகிஸ்​தானுக்​குள் பயிற்சி முகாம்​களை தாக்​கு​வதே நோக்​க​மாக இருந்​தது. ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கை​யில் எதிரி​யின் பகு​திக்​குள் ஆழமாக சென்று தாக்​குதல் நடத்​தப்​பட்​டது. நாங்​கள் எதிரி​யின் மையப்​பகு​தியை அடைந்​தது இதுவே முதல் முறை. இது​தான் அவர்​களுக்கு அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யது. ஆனாலும், இந்த மோதலில் தாங்​கள் வெற்றி பெற்​ற​தாக பாகிஸ்​தான் கதை கூறிவரு​வது​தான் வேடிக்​கை.இவ்​வாறு அவர் பேசி​னார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: குடியரசுத் தலைவர் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்

    August 13, 2025
    மாநிலம்

    பள்ளி மாணவர்களிடம் நாட்டு வெடிகுண்டு: உரிய நடவடிக்கை எடுக்க இபிஎஸ் வலியுறுத்தல்

    August 13, 2025
    மாநிலம்

    வெள்ள பாதிப்பு பகுதிகளில் இருந்து மீட்டு சிகிச்சை அளிக்க கர்ப்பிணிகள், நோயாளிகளுக்கு படகு ஆம்புலன்ஸ் சேவை

    August 13, 2025
    மாநிலம்

    ‘வாக்குத் திருட்டு’ மற்றும் பிஹார் SIR-க்கு கண்டனம்: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்

    August 13, 2025
    மாநிலம்

    மீன்வளத் துறை சார்பில் மீன் இறங்குதளங்கள் உட்பட ரூ.177 கோடியில் பணிகள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

    August 13, 2025
    மாநிலம்

    2 தடங்களில் மெட்ரோ ரயில் நீட்டிப்பு திட்டம்: அறிக்கை தயாரிக்க தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம்

    August 13, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஆக.15-ல் அனைத்து மசூதிகளிலும் தேசியக் கொடி: சத்தீஸ்கர் மாநில வக்பு வாரியம் உத்தரவு
    • ‘அப்டேட்’ இல்லையெனில் ‘அவுட்டேட்’
    • தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: குடியரசுத் தலைவர் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்
    • இருதயநோய் நிபுணர் 5 அத்தியாவசிய இதய சுகாதார சோதனைகளை வெளிப்படுத்துகிறார், இது உங்கள் உயிரைக் காப்பாற்றக்கூடிய ஈ.கே.ஜி மற்றும் எக்கோ கார்டியோகிராம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க அடுத்த மாதம் அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி?

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.