Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, August 13
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»கவின் படுகொலையை கண்டிக்காத திமுக, அதிமுக, பாஜகவை ஒரே தட்டில் வைத்து தான் பார்க்க வேண்டும்: கிருஷ்ணசாமி
    மாநிலம்

    கவின் படுகொலையை கண்டிக்காத திமுக, அதிமுக, பாஜகவை ஒரே தட்டில் வைத்து தான் பார்க்க வேண்டும்: கிருஷ்ணசாமி

    adminBy adminAugust 10, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கவின் படுகொலையை கண்டிக்காத திமுக, அதிமுக, பாஜகவை ஒரே தட்டில் வைத்து தான் பார்க்க வேண்டும்: கிருஷ்ணசாமி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ராஜபாளையம்: சமூக நீதி, சுயமரியாதை பேசும் அதிமுக, திமுக, இந்து ஒற்றுமை பேசும் பாஜக என யாருமே கவின் படுகொலையை கண்டிக்காததால், அவர்களை ஒரே தட்டில் வைத்து தான் பார்க்க வேண்டும், என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

    ராஜபாளையத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: சமூக நீதி, சமத்துவம், சுதந்திரம், மதச்சார்பற்ற தன்மை என்பது வெறும் வார்த்தைகள் அல்ல. இது இந்திய அரசியல் சாசனத்தின் ஆன்மா. தற்போது அதற்கு நேர் விரோதமான சம்பவங்கள் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.

    ஜூலை 27-ல் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்களத்தை சேர்ந்த மென் பொறியாளர் கவின், தன்னை நேசிக்கும் பெண்ணுடன் பழகியதால் படுகொலை செய்யப்பட்டார்.

    தங்களது கொள்கைக்கு எதிராக நடக்கும் இதுபோன்ற படுகொலை சம்பவங்களை தடுத்து நிறுத்த திமுக, அதிமுக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்து ஒற்றுமை பேசும் பாஜக அதற்கு எதிராக உள்ள சாதி வேறுபாடுகளை களைய முன்வர வில்லை. சமூக நீதி, சுயமரியாதை பேசும் திமுக, அதிமுக, இந்து ஒற்றுமை பேசும் பாஜக என எவருமே கவின் படுகொலையை கண்டிக்கவில்லை. அனைவருமே அடிப்படையில் சாதியவாதிகளாகவே உள்ளனர்.

    திமுக பல தவறுகளை செய்து வருகிறது. 525 வாக்குறுதிகளில் முக்கிய அம்சங்களை கூட நிறைவேற்ற வில்லை. 2009-ல் பட்டியல் பிரிவை பிரித்து அருந்ததியர்களுக்கு 3 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கியது திமுக. கடந்த திமுக ஆட்சியில் அரசு துறை பணிகளை ஒன்றிய வாரியாக பிரித்து அனைத்து பணிகளையும் முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியர் சமூகத்திற்கு ஒதுக்கி உள்ளனர்.

    கவின் படுகொலையை கண்டித்து தமிழகம் முழுவதும் ஒன்றியங்கள் தோறும் போராட்டம் நடத்த திட்டமிட்டு, முதலாவதாக திருச்சியில் ஆகஸ்ட் 17-ல் போராட்டம் நடத்த உள்ளோம்.

    தூய்மை பணியாளர்கள் 10 ஆண்டுகள் பணி செய்தால் பணி நிரந்தரம் என்ற வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை. பேரிடர் காலங்களில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களை ஏமாற்ற கூடாது.

    டாஸ்மாக்கை திறந்து வைத்து விட்டு, உங்களுடன் ஸ்டாலின் என்பது ஏமாற்று வேலை. திமுக அரசுக்கு இறுதி தீர்ப்பு வழங்கும் நேரம் வந்து விட்டது.

    ராஜபாளையம் நகராட்சியில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை. வத்திராயிருப்பில் உள்ள தாலுகா தலைமை மருத்துவமனையை சீரமைக்கக்கோரி செப்டம்பரில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    ராஜபாளையம் எம்.எல்.ஏ அரிசி ஆலையில் இருந்து மட்டுமே தான் நெல் அரவை செய்ய வேண்டும் என கட்டாயப்படுத்துவதால் ஊழல் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை தடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும், என்றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    டாஸ்மாக் ஊழியர்கள் மாநில அளவில் பணி நிரவல்: 10 ஆண்டுக்கு மேல் பணியாற்றியவர்களுக்கு விரைவில் கலந்தாய்வு

    August 13, 2025
    மாநிலம்

    தவறான மின்கணக்கீடு செய்தால் கடும் நடவடிக்கை: நிதி கட்டுப்பாட்டாளர்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தல்

    August 13, 2025
    மாநிலம்

    ‘தாயுமானவர்’ திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்: முதியோர் மாற்றுத் திறனாளிகள் வீடுகளுக்கே சென்று ரேசன் பொருட்கள் விநியோகம்

    August 13, 2025
    மாநிலம்

    மாமல்லபுரத்தில் அன்புமணி கூட்டிய பொதுக்குழு சட்ட விரோதம்: தேர்தல் ஆணையத்துக்கு ராமதாஸ் கடிதம்

    August 13, 2025
    மாநிலம்

    சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும்: பள்ளிகளுக்கு கல்வித் துறை அறிவுறுத்தல்

    August 13, 2025
    மாநிலம்

    ஆர்.நல்லகண்ணு நூற்றாண்டு சிறப்பு வெளியீடு: ‘அறவாழ்வின் அடையாளம்’ நூலை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்

    August 13, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கூர்மையான கண்களுக்கு கொய்யா இலை தேநீர்: அதை வீட்டில் செய்வது எப்படி
    • பிஎட் மாணவர் சேர்க்கை: கல்லூரி ஒதுக்கீட்டு ஆணையை பதிவிறக்கம் செய்யலாம் – அமைச்சர் தகவல்
    • ‘கூலி’ பாடலை பாராட்டிய ஹாலிவுட் நடிகை!
    • இரத்த அழுத்தத்தைக் குறைக்க 2 நிமிட தந்திரம்: அறிவியலால் ஆதரிக்கப்படும் ஒரு எளிய உடற்பயிற்சி | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மாநிலக் கல்விக் கொள்கை-2025 தொடர்பான விமர்சனங்களுக்கு பள்ளிக்கல்வித் துறை விளக்கம் 

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.