Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, August 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்களில் மீண்டும் தொடங்கிய தூய்மைப் பணி
    மாநிலம்

    ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்களில் மீண்டும் தொடங்கிய தூய்மைப் பணி

    adminBy adminAugust 10, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்களில் மீண்டும் தொடங்கிய தூய்மைப் பணி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை மாநகராட்சி ராயபுரம் மற்றும் திரு.வி.க. நகர் மண்டலங்களில் தூய்மைப் பணி மீண்டும் தொடங்கியது.

    சென்னை மாநகராட்சியில், ராயபுரம் மற்றும் திரு.வி.க. நகர் மண்டலங்களில் தூய்மைப் பணி தனியாரிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தூய்மைப் பணி மாநகராட்சி வசமே தொடர வேண்டும், தானியாரிடம் வழங்கக் கூடாது என வலியுறுத்தி, தூய்மைப் பணியாளர்கள் 9-வது நாளாக நேற்றும் ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்தி வந்தனர். நேற்று முன்தினம் இரவு அமைச்சர் பி.கே.சேகர் பாபு தலைமையிலும், நேற்று காலை ஆணையர் தலைமையிலும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    இதில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்கள் சார்பில், என்யூஎல்எம் முறையில் பணி வழங்க வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தூய்மைப் பணியை தனியாரிடம் வழங்கக் கூடாது ஆகிய 3 கோரிக்கையை வலியுறுத்தினர். இதை அரசுத் தரப்பு ஏற்காததால், 9-வது நாளாக போராட்டத்தை தொடர்வதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், இரு மண்டலங்களிலும் நேற்று தூய்மைப் பணி மீண்டும் தொடங்கியது. இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாநகராட்சி, திடக்கழிவு மேலாண்மை துறை பணிகள், 2020-ம் ஆண்டு முதல், 15 மண்டலங்களில், 10 மண்டலங்கள் மற்றும் அம்பத்தூர் மண்டலத்தில் உள்ள 3 வார்டுகளும் தனியார் நிறுவனங்களின் வழியே செயல்பட தொடங்கின.

    இதனுடன் சேர்த்து, தற்போது ராயபுரம் மற்றும் திரு.வி.க. நகர் மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டு வந்த தூய்மைப் பணிகள் ராம்கி நிறுவனத்துக்கு ஒப்படைக்கப்பட்டு, கடந்த ஜூலை 21 முதல் அந்நிறுவனம் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆக.1 முதல் ராயபுரம், திரு.வி.க. நகர் மண்டலங்களில் சுயஉதவிக் குழுக்கள் மூலம் பணிபுரிந்து வந்த தற்காலிக தூய்மைப் பணியாளர்கள், ராம்கி நிறுவனத்தில் பணியில் சேராமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    ராம்கி நிறுவன ஒப்பந்தப்படி, மொத்தம் 3,809 தூய்மைப் பணியாளர்கள் பணியில் நியமிக்க வேண்டும். தற்போது வரை, 1,770 பணியாளர்களை ராம்கி நிறுவனம் பணி அமர்த்தியுள்ளது. இது நாள் வரை பணிபுரிந்து வந்த சுயஉதவிக் குழுக்களின் தற்காலிக தூய்மைப் பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க மாநகராட்சியால் போதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன்படி, ராம்கி நிறுவனத்தில் மீதமுள்ள 2.039 பணியாளர் இடங்கள், இரு மண்டலங்களிலும் ஏற்கனவே பணிபுரிந்த தற்காலிக தூய்மைப் பணியாளர்களுக்காக ராம்கி நிறுவனத்தால் ஒதுக்கப்பட்டுள்ளது. நேற்று, தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் ராம்கி நிறுவனத்தில் தங்களுடைய விருப்ப கடிதத்தை கொடுத்து பணியில் சேர்ந்த வண்ணம் உள்ளனர். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    தூய்மை பணியாளர்களுக்கு எதிராக செயல்படுவது போன்று போலி பிம்பம்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

    August 12, 2025
    மாநிலம்

    சிவகாசி: பட்டாசு ஆலை உரிமையாளர்கள் வீடு, அலுவலகங்களில் 2-வது நாளாக சோதனை

    August 12, 2025
    மாநிலம்

    குன்றத்தூர் அபிராமி மேல்முறையீடு: காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

    August 12, 2025
    மாநிலம்

    ஓட்டுநர் உரிமத்தை மீண்டும் வழங்க கோரி டிடிஎஃப் வாசன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

    August 12, 2025
    மாநிலம்

    முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்த ‘தாயுமானவர்’ திட்டம் – சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

    August 12, 2025
    மாநிலம்

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான நாகேந்திரனுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள ஐகோர்ட் உத்தரவு

    August 12, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தூய்மை பணியாளர்களுக்கு எதிராக செயல்படுவது போன்று போலி பிம்பம்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்
    • 10 பின்னடைவு மற்றும் விடாமுயற்சியைக் குறிக்கும் குழந்தை பெயர்கள்
    • அரசாங்கம் OCI விதிகளை இறுக்குகிறது: வெளிநாட்டு குடியுரிமை வைத்திருப்பவர்கள் அந்தஸ்தை இழக்க நேரிடும்; 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட குற்றச்சாட்டுகள் ரத்து செய்ய வழிவகுக்கும் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • எம்.பி.க்களுக்கான 184 அடுக்குமாடி குடியிருப்புகள்: பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்
    • சிவகாசி: பட்டாசு ஆலை உரிமையாளர்கள் வீடு, அலுவலகங்களில் 2-வது நாளாக சோதனை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.