Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, August 10
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»நாடாளுமன்றத்தில் சமோசா பிரச்சினையை எழுப்பிய பாஜக எம்.பி ரவி கிஷண் – நெட்டிசன்கள் கடும் விமர்சனம்
    தேசியம்

    நாடாளுமன்றத்தில் சமோசா பிரச்சினையை எழுப்பிய பாஜக எம்.பி ரவி கிஷண் – நெட்டிசன்கள் கடும் விமர்சனம்

    adminBy adminAugust 9, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    நாடாளுமன்றத்தில் சமோசா பிரச்சினையை எழுப்பிய பாஜக எம்.பி ரவி கிஷண் – நெட்டிசன்கள் கடும் விமர்சனம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் மக்களவையில் சமோசா பிரச்சினையை பாஜகவின் எம்பி நடிகர் ரவி கிஷண் (56) எழுப்பியிருந்தார். இதனால், அவர் மீது கடும் விமர்சனங்கள் கிளம்பி இணையத்தில் வைரலாகி வருகின்றன.

    நாடாளுமன்றத்தின் மக்களவையில் பாஜகவின் எம்பியான நடிகர் ரவி கிஷண் சமீபத்தில் சமோசா பிரச்சினையை எழுப்பியிருந்தார். சமோசாவின் அளவுகள் குறைந்து, அதன் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் புகார் செய்தார். இதனால், சமோசா பிரச்சினையை தீர்க்கும் வகையில் மத்திய அரசு நாடு முழுவதிலும் ஒரே வகையில் சட்டம் இயற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

    நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இதுவரையும் எந்த எம்பியும் இதுபோல் சமோசா விவகாரத்தை எழுப்பியதில்லை எனத் தெரிகிறது. முதன்முறையாக நாடாளுமன்றத்திலும் முக்கியத்துவம் பெற்ற சமோசா விவகாரத்தில், பாஜக எம்பி மீது சமூகவலைதளங்களில் கடுமையாகவும், கிண்டல் பேசியும் விமர்சனங்கள் வைரலாகி வருகின்றன.

    போஜ்புரி நடிகரான ரவி கிஷணின் சமோசா விவகாரத்தில் ஒருவர், ‘சமோசாவைக் குறிப்பிட்டு மக்களவை எம்பிக்கள் முன்பாக கிண்டலடிக்கிறார் என எண்ணினேன். ஆனால், அவர் சமோசாவை போய் மிகவும் முக்கியமானப் பிரச்சினையாக முன்னிறுத்துகிறார்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

    மற்றொருவரது தனது விமர்சனத்தில், ‘எம்பி ரவி கிஷண் நாட்டின் முக்கியப் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் எழுப்பியுள்ளார். இது சமோசாவின் விலை மற்றும் அளவு குறித்தது. இது, தெருமுனைக் கடை அல்லது ஐந்து நட்சத்திர ஓட்டலாக இருந்தாலும் ஒரே வகையில் கிடைக்க வேண்டும் என விரும்புகிறார். ஆக.. நாட்டின் உண்மையானப் பிரச்சினையை ஒருவழியாக மக்களவையில் ஒரு எம்பி எழுப்பி விட்டது மகிழ்ச்சி அளிக்கிறது’ எனத் தெரிவித்துள்ளார்.

    ‘மருந்துகளின் விலை வானத்தை தொட்டுவிடும் அளவில் உயர்கிறது. பொருளாதரமும் வீழ்ச்சி அடைகிறது. வேலை இல்லாத் திண்டாட்ட நிலை உயர்கிறது. அரசு சார்பில் கட்டப்படும் பாலங்கள் உடைகின்றன. ஆனால், ரவி கிஷண்ஜிக்கு சமோசா விலையும், அளவும் மட்டுமே பிரச்சினையாக உள்ளது’ என்றும் ஒருவர் விமர்சித்துள்ளார்.

    இதுபோன்ற பல விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் தொடர்ந்து மூன்று முறை எம்.பி.யான ரவி கிஷண் தனது எக்ஸ் தளத்தில், ‘வாடிக்கையாளர்கள் வாங்கும் சமோசாவின் விலையும், அதன் தரமும் முக்கியம். எண்ணெய் அல்லது நெய் ஊற்றி செய்யப்படும் இந்த சமோசா ருசியாக இருக்கும் ரகசியமும் எனக்கு புரியவில்லை.

    மெனு அட்டைகளில் சமோசாவின் விலையுடன் அதன் அளவும் குறிப்பிடுவது அவசியம். 11 வருடங்களாக பல துறைகளில்ச சீர்திருத்தம் செய்து வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. ஆனால், இந்த உணவு(சமோசா) துறையில் மட்டும் சீர்திருத்தம் செய்யப்படாமல் உள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

    போஜ்புரி மொழியின் பிரபல நடிகரான ரவி கிஷண், காங்கிரஸில் இணைந்து 2014 மக்களவை தேர்தலில் உ.பி.யின் ஜோன்பூரில் போட்டியிட்டு தோல்வியுற்றார். பிறகு பாஜகவில் இணைந்தவர் 2019 மற்றும் 2024 மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று உபி முதல்வர் யோகியின் சொந்த ஊரான கோரக்பூர் தொகுதி எம்பியாக உள்ளார். இவருக்கு சமீபத்தில் சிறந்த எம்பி விருதான சன்சத் ரத்னா வழங்கப்பட்டிருப்பது நினைவுகூரத்தக்கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    தேர்தல் ஆணையத்தை நம்பாவிட்டால் எம்பி பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ய வேண்டும்: பாஜக

    August 9, 2025
    தேசியம்

    நாடு முழுவதும் உற்சாகத்துடன் ரக்‌ஷா பந்தன் கொண்டாட்டம்!

    August 9, 2025
    தேசியம்

    இந்திய நீதி அறிக்கை 2025: முதல் 5 இடங்களைப் பிடித்த தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள்!

    August 9, 2025
    தேசியம்

    அங்கீகரிக்கப்படாத 334 அரசியல் கட்சிகள் நீக்கம் – தேர்தல் ஆணையம் நடவடிக்கை

    August 9, 2025
    தேசியம்

    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 பாதுகாப்புப் படையினர் உயிரிழப்பு

    August 9, 2025
    தேசியம்

    ‘சமஸ்கிருதம்’ காலத்தால் அழியாத அறிவின் ஆதாரமாக உள்ளது: பிரதமர் மோடி வாழ்த்து

    August 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கோவையில் பைக் டாக்ஸி, வாடகைக்கு பயன்படுத்தப்பட்ட சொந்த கார்கள் பறிமுதல்: ரூ.1.8 லட்சம் அபராதம் விதிப்பு
    • உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து பேச ட்ரம்ப் – புதின் ஆக.15-ம் தேதி சந்திப்பு
    • வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 15-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
    • சிறப்பு எஸ்ஐ கொலை வழக்கில் குற்றவாளியை என்கவுன்டர் செய்தது மாபெரும் தவறு: கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு
    • தமிழகத்தின் வளர்ச்சியை பார்த்து விரைவில் இந்த தேசமே வியப்படையும்: முதல்வர் ஸ்டாலின்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.