Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, December 5
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»இந்தியாவுடன் பேச்சு இல்லை: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு
    உலகம்

    இந்தியாவுடன் பேச்சு இல்லை: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு

    adminBy adminAugust 9, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    இந்தியாவுடன் பேச்சு இல்லை: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி / வாஷிங்டன்: வரிவிகிதம் தொடர்பான சிக்கல்கள் தீர்க்கப்படும்வரை இந்தியாவுடன் வர்த்தக பேச்சு வார்த்தை நடத்தப்படாது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

    இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். முதல்கட்டமாக 25 சதவீத வரி விதிப்பு கடந்த 7-ம் தேதி அமலுக்கு வந்தது. மேலும் 25 சதவீத வரி விதிப்பு 27-ம் தேதி அமலுக்கு வரும் என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

    இந்த சூழலில், தலைநகர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் நேற்று பேசிய ட்ரம்ப், “வரி விகிதம் தொடர்பான சிக்கல்கள் தீர்க்கப்படும்வரை இந்தியாவுடன் வர்த்தக பேச்சு வார்த்தை நடத்தப்படாது” என்று தெரிவித்தார்.

    இந்தியாவில் இருந்து அமெரிக்கா​வுக்கு ஏற்​றுமதி செய்​யப்​படும் பொருட்​களில் ஸ்மார்ட்​போன்​, கணினி, மருந்​துகள், சில வகை உலோகங்​கள், கனிமங்​களுக்கு 50 சதவீத வரி​வி​திப்​பில் இருந்து விலக்கு அளிக்​கப்​பட்டுள்ளது. இதன்​படி இந்​தி​யாவில் தயாரிக்​கப்​படும் ஆப்​பிள் போன் உள்​ளிட்​ட​வற்​றுக்கு கூடு​தல் வரி விதிக்​கப்​ப​டாது. எனினும் அமெரிக்​கா​வின் வரி விதிப்​பால் இந்​தி​யா​வின் ஜவுளி, நகைகள், வைரங்​கள் ஏற்​றுமதி பாதிக்​கப்​படும் என்று தெரி​கிறது.

    இதுகுறித்து மத்​திய வெளியுறவு அமைச்சக செயலர் (பொருளா​தார உறவுகள்) தாமு ரவி கூறியபோது, ‘‘அமெரிக்​கா​வின் வரி வி​திப்பு என்​பது தற்​காலிக பிரச்​சினைதான். இதற்கு விரை​வில் தீர்வு காணப்​படும். மத்​திய கிழக்கு நாடு​கள், லத்​தீன் அமெரிக்க நாடு​கள், ஆப்​பிரிக்க நாடு​கள், தெற்கு ஆசிய நாடு​களுடன் வர்த்தக உறவை மேம்​படுத்த இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. அந்த நாடு​களுக்கு இந்​திய பொருட்களின் ஏற்​றுமதி அதி​கரிக்​கப்​படும்’’ என்றார்.

    இதற்கிடையே, ‘அமெரிக்​கா​வின் போயிங் நிறு​வனத்​திடம் இருந்து ரூ.31,500 கோடி மதிப்​பில் பி-81 ரக போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஏற்கெனவே முடிவு செய்த நிலையில், இதுதொடர்​பான ஒப்​பந்​தம் நிறுத்தி வைக்​கப்​பட்டுள்ளது’ என ராய்ட்​டர்ஸ் நிறுவனம் நேற்று செய்தி வெளியிட்டது.

    ராஜ்நாத் சிங் பயணம் ரத்து? – பாது​காப்​பு துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங்​கின் வாஷிங்​டன் பயண​ம் ரத்து செய்​யப்​பட்​டுள்ளதாகவும் ராய்ட்​டர்ஸ் நிறு​வன செய்​தி​யில் கூறப்​பட்டிருந்​தது. இதுகுறித்து பாது​காப்​புத் துறை வட்​டாரங்​கள் கூறும்​போது, ‘இந்த செய்​தி​கள் தவறானவை. அமெரிக்கா​வுடன் பல்​வேறு பாது​காப்பு ஒப்​பந்​தங்​கள் செய்​யப்​பட்டுள்​ளன. ஆயுத கொள்​முதல் நடவடிக்​கைகள் தொடர்​கின்​றன’ என்று தெரிவித்துள்ளன.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    வட கொரியா, அமெரிக்கா மற்றும் ரஷ்யா மூன்றாம் உலகப் போரைத் தூண்டினால், 72 மணி நேரத்தில் 60% மனித இனம் இறக்கக்கூடும் என்று நிபுணர் எச்சரித்தார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    December 5, 2025
    உலகம்

    ‘நெட்ஃபிக்ஸ் ஒபாமா நியூஸ் நெட்வொர்க் ஆகலாம்’: வார்னர் பிரதர்ஸ் கையகப்படுத்தல் குறித்து மாகா ஆர்வலர் லாரா லூமர் எச்சரிக்கை | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    December 5, 2025
    உலகம்

    Spotify Wrapped 2025: உங்கள் ‘கேட்கும் வயது’ உங்களைப் பற்றி என்ன சொல்கிறது; மீம்ஸில் விளக்கினார் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    December 5, 2025
    உலகம்

    ‘மிகவும் விசித்திரமான வழக்கு’: ருமேனியாவின் ‘டிராகுலா கோட்டை’ அருகே காணாமல் போன பிரிட்டிஷ் இளம்பெண்ணை தேடுதல் தீவிரம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    December 5, 2025
    உலகம்

    ஒவ்வொரு நாட்டிற்கும் விஜயம் செய்த பயணி, நண்பர் சாம்பலைச் சிதறடித்ததால் வடகொரியா தன்னை சிறையில் அடைத்துவிட்டது என்கிறார் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    December 5, 2025
    உலகம்

    ஜாக் தி ரிப்பர் தீர்க்கப்பட்டாரா? ஒரு சால்வை மீது டிஎன்ஏ ஒரு போலந்து 19 ஆம் நூற்றாண்டு குடியேறியவரை சுட்டிக்காட்டுகிறது; இது முடியாது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    December 5, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அட்ரியன் சிலிஸின் தோல் புற்றுநோயைக் கண்டறிதல்: எல்லா வித்தியாசங்களையும் ஏற்படுத்திய அறிகுறிகளை அவர் எவ்வாறு கண்டறிந்தார்
    • வட கொரியா, அமெரிக்கா மற்றும் ரஷ்யா மூன்றாம் உலகப் போரைத் தூண்டினால், 72 மணி நேரத்தில் 60% மனித இனம் இறக்கக்கூடும் என்று நிபுணர் எச்சரித்தார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அன்றைய ஊட்டச்சத்து உண்மை: கிரேக்க தயிரில் வழக்கமான தயிரில் உள்ள புரதத்தை விட இரண்டு மடங்கு புரதம் உள்ளது
    • ‘நெட்ஃபிக்ஸ் ஒபாமா நியூஸ் நெட்வொர்க் ஆகலாம்’: வார்னர் பிரதர்ஸ் கையகப்படுத்தல் குறித்து மாகா ஆர்வலர் லாரா லூமர் எச்சரிக்கை | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஆஸ்பிரேஷன் நிமோனியா: ஒரு ‘எளிய விபத்து’ எப்படி இந்த உயிருக்கு ஆபத்தான நிலைக்கு வழிவகுக்கும் என்பதை மருத்துவர் விளக்குகிறார் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.