Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, August 9
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»வாக்காளர் பட்டியல் திருத்தம் பற்றி இபிஎஸ் மவுனம் காப்பது ஏன்? – துரைமுருகன்
    மாநிலம்

    வாக்காளர் பட்டியல் திருத்தம் பற்றி இபிஎஸ் மவுனம் காப்பது ஏன்? – துரைமுருகன்

    adminBy adminAugust 9, 2025No Comments4 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    வாக்காளர் பட்டியல் திருத்தம் பற்றி இபிஎஸ் மவுனம் காப்பது ஏன்? – துரைமுருகன்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: பாஜகவின் அடிமையாய் மாறி, அதிமுகவை அடமானம் வைத்தவர், தமிழ்நாட்டு வாக்காளர்களையும் டெல்லியிடம் அடமானம் வைக்கத் துணிந்துவிட்டாரா? இல்லை என்றால் SIR என்ற முறைகேடான வாக்காளர் பட்டியல் திருத்தம் பற்றி இதுவரை எடப்பாடி பழனிசாமி வாய் திறக்காதது ஏன்? என தமிழக அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் கேள்வியெழுப்பியுள்ளார்

    இதுகுறித்து துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘போலி வாக்காளர்களைச் சேர்த்து பாஜகவுக்கு துணை போகும் அடிமை அதிமுகவுக்கு எதிராக தமிழ்நாடு ஓரணியில் திரண்டு நின்று வெல்லும்.

    பொய்களைக் கட்டவிழ்த்து ஆட்சியைப் பிடித்த பாஜக, தங்களுடைய ஆட்சித்திறனால் மக்களைக் கவர முடியாமல் நாட்டைத் தொடர்ந்து ஆள எத்தனையோ குறுக்கு வழிகளைக் கையாண்டு வருகிறது. தங்களால் வெற்றி பெறவே முடியாத மாநிலங்களில் ஜனநாயகத்தை அழிக்கத் துடிக்கிறது.

    கடந்த தேர்தல்களில் போலி வாக்காளர்களைச் சேர்த்து, அதன் மூலம் பாஜக தனது வெற்றியைச் சாத்தியப்படுத்தியதை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆதாரங்களோடு வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார். பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் இந்தத் தேர்தல் மோசடி ஆதாரங்கள், தேர்தல் ஆணையம் ஒன்றிய பாஜக அரசின் கைப்பாவையாகவே மாறிவிட்டதை காட்டுகிறது. இது இந்திய ஜனநாயகத்துக்கே பேராபத்து.

    2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து, அடுத்த 5 மாதங்களில் நடந்த மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலின்போது நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்தவர்களை விடக் கூடுதலாக 41 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருந்தனர். ஐந்தே மாதங்களில் 41 லட்சம் வாக்காளர்கள் எப்படி வந்தார்கள்.? வானத்திலிருந்து குதித்தார்களா?.

    2024 நாடாளுமன்றத் தேர்தலில் மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 48 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி 30 தொகுதிகளை கைபற்றியது. பாஜக கூட்டணிக்கு 17 இடங்கள்தான் கிடைத்தன. இதனை அப்படியே சட்டமன்றத் தேர்தலில் மாற்றி அமைக்க வேண்டுமெனில் எதையாவது செய்தாக வேண்டும் என்ற முடிவுக்கு வந்து, வாக்காளர் பட்டியலில் தில்லுமுல்லுக்களை அரங்கேற்றியது பாஜக.

    6 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிராவில் தோற்ற பாஜக கூட்டணி, அடுத்து வந்த சட்டமன்றத் தேர்தலில் வென்றதற்குக் காரணமே போலியாக சேர்க்கப்பட்ட வாக்காளர்கள்தான். கூடுதலாக சேர்க்கப்பட்ட 41 லட்சம் வாக்காளர்களால் தேர்தல் முடிவே மாறிப் போனது. நாடாளுமன்ற தேர்தலில் வென்ற காங்கிரஸ் கூட்டணி, பாஜகவும் தேர்தல் ஆணையம் கூட்டணி போட்டு செய்த சதித்திட்டத்தால் சட்டமன்றத் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டது.

    இந்த சதியை அம்பலப்படுத்த வாக்குச்சாவடிகளில் எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகளை வழங்குமாறு தேர்தல் ஆணையத்தைக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேட்டபோது வாக்குச்சாவடிகளில் எடுக்கப்பட்ட வீடியோக்களை தேர்தல் நடந்து 45 நாட்களுக்குப்பின் அழித்து விடுமாறு மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது எனச் சொல்லி வாக்குச்சாவடி கண்காணிப்பு கேமரா பதிவுகளை எல்லாம் அழித்திருக்கிறார்கள்.

    இதே பாணியில்தான் வரப் போகிற பிஹார் சட்டமன்றத் தேர்தலிலும் மோசடிகளை அரங்கேற்ற பாஜக முயல்கிறது. SIR என்ற சிறப்புத் தீவிரத் திருத்தம் என்ற பெயரில் பிஹார் மாநில வாக்காளர் பட்டியலிலிருந்து பாஜகவிற்கு எதிரான மனநிலை கொண்ட வாக்காளர்கள் பல லட்சம் பேரை நீக்கியிருக்கிறது ஒன்றிய பாஜக அரசு. வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப்பணி (SIR) என்கிற பெயரில் இந்தியத் தேர்தல் ஆணையம் இந்தியக் குடிமக்களின் அடிப்படை உரிமையான வாக்குரிமையில் கை வைத்திருக்கிறது.

    சுதந்திரமாகச் செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையம் பாஜகவின் கண்ணசைவிற்கும் அரசியல் விருப்பத்திற்கும் ஏற்ப செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இது நாட்டின் ஜனநாயகத்திற்கு விடப்பட்டிருக்கிற மிகப்பெரிய அச்சுறுத்தல். பிஹாரில் சில மாதங்களில் தேர்தல் நடைபெற இருக்கிற சூழலில், இவ்வளவு குறுகிய காலத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் ஏன்? என எதிர்க்கட்சிகள் அனைத்தும் கேள்வி கேட்டும் அதனை மதிக்காமல் வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையை மேற்கொண்டது தேர்தல் ஆணையம்.

    வாக்காளர் பட்டியல் திருத்தம் என்கிற பெயரில் நாட்டு மக்களின் குடியுரிமையை சோதித்துப் பார்க்கும் நடவடிக்கையாகவே தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

    ஒன்றிய அரசால் வழங்கப்பட்ட ஆதார் அடையாள அட்டையையும், தேர்தல் ஆணையமே கொடுத்த வாக்காளர் அடையாள அட்டையையுமே கூட வாக்காளர் தகுதிக்கான அடையாளமாக ஏற்றுக் கொள்ளாமல் மக்களை திணறடித்தது தேர்தல் ஆணையம். உச்ச நீதிமன்றம் அவற்றையும் ஆவணங்களாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்திய பின்பும் அதனைப் புறக்கணித்து அராஜகம் செய்துள்ளனர்.

    தேர்தல் ஆணையத்தின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கையினால் பீகாரில் 65 லட்சம் பேர் தங்களது வாக்குரிமையை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதில் 36 இலட்சம் பேர் வேலைகளுக்காக வேறு மாநிலங்களுக்குப் புலம் பெயர்ந்தவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. வேலைக்காகத் தற்காலிகமாக வெளியூர் சென்றவர்களை எல்லாம் எந்தவிதக் கேள்வியுமின்றி நீக்கி உள்ளனர். அதோடு அவர்கள் வசிக்கும் மாநிலங்களின் வாக்காளர் பட்டியலில் தங்களை இணைந்து கொள்ளலாம் என மற்றொரு அதிர்ச்சிகரமான தகவலையும் தெரிவித்திருக்கிறது தேர்தல் ஆணையம்.

    தேர்தல் ஆணையத்தின் இந்த SIR நடவடிக்கையினால் பெரியளவில் ஏழை எளிய மக்களும் , சிறுபான்மையின மக்களும், பெண்களும் தங்களது வாக்குரிமையை இழக்கும் அபாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். அதோடு போலி வாக்காளர்களையும் அதிகளவு சேர்த்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாத நபர்கள் பல பேர் ஒரே வீட்டில் வசிப்பதாக வாக்காளர் பட்டியலில் பதிவாகி உள்ளது. SIR என்பது முறைகேட்டைத் தவிர்ப்பதற்காகச் செய்யப்படுகிறது என்றால் இந்த முறைகேடு எப்படி நடந்தது? முறைகேட்டைக் களைவதாகச் சொல்லிக் கொண்டு முறைகேட்டைத் தேர்தல் ஆணையம் செய்யலாமா? SIR என்ற முறையற்ற வாக்காளர் திருத்த நடவடிக்கையைத் தேர்தல் ஆணையம் உடனடியாகக் கைவிட வேண்டும்.

    அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கும் சூழலில், தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைகள் தமிழ்நாட்டிலும் மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். தமிழ்நாட்டு வாக்காளர்கள் தங்களது வாக்காளர் தகுதியை நிரூபிக்க வேண்டும் எனும் பெயரால் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அதே போல முறையற்ற வகையில் லட்சக்கணக்கான பிற மாநில மக்களைத் தமிழ்நாட்டில் சேர்க்கும் சதி திட்டத்தையும் ஒன்றிய பாஜக அரசு மேற்கொள்ளக் கூடும் . இது தமிழ்நாட்டின் அரசியல் உரிமையையே அபகரிக்கும் செயல்.

    நாட்டில் ஜனநாயகத்திற்கும் தமிழ்நாட்டு மக்களின் அரசியல் உரிமைக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் இந்த விவகாரத்தில் வாய்மூடி கள்ள மவுனம் காத்து தமிழ்நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய துரோகத்தைச் செய்து கொண்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.

    பாஜகவின் அடிமையாய் மாறி, அதிமுகவை அடமானம் வைத்தவர், தமிழ்நாட்டு வாக்காளர்களையும் டெல்லியிடம் அடமானம் வைக்கத் துணிந்துவிட்டாரா? இல்லை என்றால் SIR என்ற முறைகேடான வாக்காளர் பட்டியல் திருத்தம் பற்றி இதுவரை வாய் திறக்காதது ஏன்?

    தமிழ்நாட்டில் அரசியல் ரீதியாகப் போராடி வெற்றி பெற முடியாத அடிமைகளும் அவர்கள் எஜமானர்களும் குறுக்கு வழியில் வெற்றி பெற்று விடலாம் என்று கனவு கண்டால், அது ஒருபோதும் நடக்காது. முதல்வர் மு.க,ஸ்டாலினோடு தமிழ்நாட்டு மக்கள் ஓரணியில் திரண்டு நின்று சதிகார கும்பலை விரட்டி அடிப்பார்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்ப்பு இயக்கம் நீட்டிப்பா? – ஆக.13-ம் தேதி திமுக முடிவு

    August 9, 2025
    மாநிலம்

    அவசரகதியில் மாநில கல்விக் கொள்கை வெளியீடு: எல்.முருகன், நயினார் நாகேந்திரன் விமர்சனம்

    August 9, 2025
    மாநிலம்

    ‘ரொம்ப நாளாவே பஞ்சாயத்து ஓடிக்கிட்டு இருக்கு..!’ – ‘முட்டாப் பய’ வசனம் பேசி முட்டிக் கொண்ட மக்கள் பிரதிநிதிகள்

    August 9, 2025
    மாநிலம்

    பள்ளிக்கல்விக்கான மாநில கல்விக் கொள்கையை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்: பிளஸ் 1 பொதுத் தேர்வு நடைமுறை ரத்தாகிறது

    August 9, 2025
    மாநிலம்

    இருமொழிக் கொள்கையே உறுதியானது: மாநில கல்விக் கொள்கையை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின் பேச்சு

    August 9, 2025
    மாநிலம்

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பற்றி பழனிசாமி கவலைப்படத் தேவையில்லை: பெ.சண்முகம்

    August 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்ப்பு இயக்கம் நீட்டிப்பா? – ஆக.13-ம் தேதி திமுக முடிவு
    • அவசரகதியில் மாநில கல்விக் கொள்கை வெளியீடு: எல்.முருகன், நயினார் நாகேந்திரன் விமர்சனம்
    • குழந்தைகளை தோல்வியடையச் செய்வது பரவாயில்லை: இது இன்னும் சிறந்த பெற்றோருக்குரிய நடவடிக்கையாக இருக்கக்கூடிய 5 காரணங்கள்
    • 3 மாதங்களில் யூரிக் அமிலத்தை பாதுகாப்பாக குறைப்பது எப்படி
    • கூடைப்பந்தில் டிஏவி சாம்பியன்!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.