Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, August 9
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»‘தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் செய்த பாவம் என்ன?’ – மாநில கல்விக் கொள்கை மீது எல்.முருகன் 11 கேள்விகள்
    மாநிலம்

    ‘தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் செய்த பாவம் என்ன?’ – மாநில கல்விக் கொள்கை மீது எல்.முருகன் 11 கேள்விகள்

    adminBy adminAugust 8, 2025No Comments4 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் செய்த பாவம் என்ன?’ – மாநில கல்விக் கொள்கை மீது எல்.முருகன் 11 கேள்விகள்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: “ஸ்டிக்கர் ஒட்டும் விளம்பர மாடல் திமுக அரசின் புதிய வெளியீடுதான் மாநில கல்விக் கொள்கை. நான் எழுப்பும் கேள்விகளுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பதிலளிக்க தயாரா?”: என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் சில கேள்விகளைப் பட்டியலிட்டுள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதல்வர் மு.க.ஸ்டாலின் தினந்தோறும் நடத்தி வரும் விளம்பர மாடல் அரசியலில் இன்றைய வெளியீடுதான் மாநில கல்விக் கொள்கை. தமிழில் புதிது புதிதாக பெயர் வைத்து, மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி காலத்தை ஓட்டி வரும் திமுக அரசின் அடுத்த வெளியீடாகவே இந்த மாநில கல்விக் கொள்கை வெளியாகி இருக்கிறது.

    அரைத்த மாவையே அரைப்பது, ஏற்கெனவே இருப்பதை புதிய கோப்பு ஒன்றில் போட்டு வெளியிடுவது, இதையே தனது நிர்வாகத் தந்திரம் என நினைத்துக் கொண்டிருக்கும் முதல்வர், மாநில கல்விக் கொள்கை என்ற பெயரில் இதையே மீண்டும் செய்துள்ளார். தமிழகத்தில் ஏற்கெனவே இருந்து வரும் கல்விக் கொள்கையில் இருந்து என்ன மாற்றத்தை இவர் வெளியிட்டு இருக்கிறார்? 83 பக்கங்களில் வெளியாகி இருக்கும் இந்த மாநில கல்விக் கொள்கையை யாரும் புரிந்து கேள்வி கேட்டு விடக்கூடாது என்பதற்காகவே, புரியாத தமிழில் எழுதி இருக்கிறார்கள்.

    ஆங்கிலத்தில் இருந்து மொழி பெயர்க்கப்பட்டு, இவர்கள் தமிழில் வெளியிட்டுள்ள மாநில கல்விக் கொள்கையே புரியவில்லை என்றால், பள்ளிக் கல்வித் துறை மீது திமுக அரசு காட்டும் ஆர்வம் அந்த லட்சணத்தில் இருக்கிறது. அரசுப் பள்ளிகளில் தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே கற்பிக்கும் இருமொழிக் கொள்கை செயல்படுத்தப்படும் என்கிறார்கள். அப்படி என்றால் தனியார் பள்ளிகளில் தேசிய கல்விக் கொள்கை கூறியபடி மூன்றாவது மொழி இருப்பதை திமுக அரசு ஏற்றுக் கொள்கிறதா? அரசுப் பள்ளி மாணவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? அவர்களுக்கு மட்டும் இந்த வாய்ப்பு மறுக்கப்படுவது ஏன்?

    திமுகவினர் நடத்தும் பள்ளிகளிலும், முதல்வரின் சொந்தக் குடும்ப உறுப்பினர்கள் நடத்தும் பள்ளிகளிலும் தேசிய கல்விக் கொள்கைப்படி திமுகவினருக்கு மூன்று மொழி கற்கும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால், தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய, பட்டியலின, ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலை மக்களுக்கு அந்த வாய்ப்பு கிடையாது. இதற்கு பெயர் தான் திமுகவின் சமூக நீதியா?

    இந்த லட்சணத்தில், பள்ளிகளில் சமூக நீதிக் கல்வி கொண்டு வரப்போவதாக மாநில கல்விக் கொள்கையில் அறிவித்திருக்கிறார்கள். முதலில் திமுகவில் சமூக நீதி இருக்கிறதா? தந்தைக்கு பின்பு மகன் என்ற தாரக மந்திரத்தை பின்பற்றி வரும் போலி திராவிடம் பேசும் திமுகவினர், சமூக நீதியைப் பற்றி தமிழக மக்களுக்கு பாடம் எடுக்கின்றனர்.

    ஆண்டாண்டு காலமாக தமிழகத்தில் இருந்து வந்த மொழி, கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றை அழித்த திமுகவுக்கு சமூக நீதியை பற்றி பேச எந்த அருகதையும் இல்லை. தாய்மொழி வழிக் கல்வி கற்பிக்கப்படும் என்று மாநில கல்விக் கொள்கை கூறுவது வியப்பாக இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் தாய்மொழி வழிக் கல்வி தானே இருக்கிறது. பெருந்தலைவர் காமராஜர் காலம் தொட்டு, தமிழகத்தில் தாய்மொழி வழிக் கல்வி தானே இருக்கிறது. தேசிய கல்விக் கொள்கை அதனைத் தானே வலியுறுத்துகிறது.

    ஏதோ திமுகவினரின் மூளையில் உதித்த அரிய திட்டம் போல கூறுகிறீர்களே. இது ஏற்கெனவே இருக்கும் கல்வி முறை தான். தமிழ் கலாச்சாரம், பண்பாடு பற்றிய வரலாற்று பாடங்கள் இடம்பெறும் என்ற அறிவிப்பும் திமுக அரசின் வெற்று நாடகமே. மாமன்னர்கள் ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் பற்றி கூட பிரதமர் நரேந்திர மோடி பேசிய பிறகு தான், திமுகவினருக்கு கூட தெரிகிறது.

    தமிழகத்தின் மாமன்னர்களின் நீண்டநெடிய வரலாற்றை பாட புத்தகங்களில் இருட்டடிப்பு செய்து வருவது யார்? தனது தந்தை மறைந்த முதல்வர் கருணாநிதியின் வீரபராக்கிரமங்களை விளக்குவது மட்டுமே போதும் என்று இவர்கள் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். தமிழக முதல்வருக்கு நான் சில கேள்விகளை முன் வைக்கிறேன். திராணியும் தெம்பும் இருந்தால் பதில் சொல்லட்டும்.

    1) தமிழகத்தில் 10-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு, தமிழ் எழுத்துகள் கூட சரி வர தெரியவில்லையே ஏன்?

    2) தமிழ்நாட்டு மாணவர்கள் தமிழில் பேசவும், எழுதவும் சிரமப்படுவது ஏன்?

    3) தமிழகப் பள்ளி மாணவர்கள் எண்களை அடையாளம் காணக்கூட சிரமப்படுவதாக ஆய்வுகள் கூறுகிறதே, அது ஏன்?

    4) தமிழகத்தில் பள்ளிக் கட்டிடங்கள் இடிந்து விழும் நிலையில் இருப்பது ஏன்? மரத்தடியில் வகுப்புகள் நடைபெறுவது ஏன்?

    5) பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏதும் இல்லாமல் மாணவ, மாணவியர் அவதிப்படுவது ஏன்?

    6) பள்ளி உள்கட்டமைப்புகளை மேம்படுத்த ஒதுக்கப்பட்ட நிதி என்னாயிற்று?

    7) தமிழக அரசு பள்ளிகளில் தரமில்லை எனக் கூறி, ஏழை கூலித் தொழிலாளி கூட தனது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பது ஏன்?

    8) ஒவ்வொரு ஆண்டும் தனியார் பள்ளிகளில் ஆயிரக்கணக்கில் மாணவர் சேர்க்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வரிசையில் நின்று பெற்றோர்கள் குழந்தைகளை சேர்க்கிறார்களே ஏன்?

    9) ஆண்டுதோறும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறதே அது ஏன்?

    10) பல பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்களே வகுப்பெடுக்கும் அவலம் ஏன்?

    11) அரசுப் பள்ளி மாணவர்கள் ஆய்வகப் பயிற்சிக்கு தனியார் பள்ளிகளுக்கு செல்வது ஏன்?

    பள்ளிக் கல்வியை மேம்படுத்த மத்திய அரசு வழங்கி வரும் நிதியை பெற்றுக்கொண்டு, அதை மடைமாற்றும் போலி திராவிட மாடல் ஆட்சி, பள்ளி கல்வித் துறையை இயக்கும் லட்சணம் இதுதான். கல்வி உரிமை சட்டத்தின் கீழ், தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தமிழக அரசு செலுத்த வேண்டிய கல்வி கட்டணத்தை செலுத்தவில்லை. மத்திய அரசு தனது பங்குக்கு நிதியை வழங்கிய பிறகும், தமிழக அரசு அதனை செலுத்தாத காரணத்தால் தனியார் பள்ளிகள் கட்டணத்தை செலுத்துமாறு பெற்றோர்களை நிர்பந்திப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளி வந்துள்ளன. இந்த தகவல் முதல்வருக்கு தெரியுமா?

    நான் எழுப்பிய இந்த கேள்விகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலில் பதில் சொல்லட்டும். தமிழில் பெயர் வைத்தால் மட்டும் அது மக்கள் பயன்பெறும் திட்டமாகி விடாது. விளம்பரத்துக்காக தமிழில் திட்டங்களை அறிவித்து விட்டு, அடுத்த நாளே மூடு விழா நடத்தும் திமுக அரசு, மாநில கல்விக் கொள்கை வெளியீடு என்ற பெயரில் வெளியிட்டுள்ள அரைத்த மாவை அரைக்கும் இன்றைய விளம்பர நாடகத்தை தமிழக மக்கள் ஒருபோதும் நம்பமாட்டார்கள்” என்று எல்.முருகன் கூறியுள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பற்றி பழனிசாமி கவலைப்படத் தேவையில்லை: பெ.சண்முகம்

    August 9, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் ஓர் இணை அரசாங்கத்தை நடத்துவதாக ஐகோர்ட் கண்டனம்

    August 9, 2025
    மாநிலம்

    வாக்காளர் பட்டியல் திருத்தம் பற்றி இபிஎஸ் மவுனம் காப்பது ஏன்? – துரைமுருகன்

    August 9, 2025
    மாநிலம்

    “சென்னை முழுவதும் போலி வாக்காளர்களால் மட்டுமே திமுக வெற்றி பெறுகிறது” – இபிஎஸ்

    August 8, 2025
    மாநிலம்

    “பாமக பொதுக் குழுவை நடத்த தடை இல்லை… அறத்துக்கு கிடைத்த வெற்றி!” – அன்புமணி

    August 8, 2025
    மாநிலம்

    ஆக.13-ல் ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு

    August 8, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பற்றி பழனிசாமி கவலைப்படத் தேவையில்லை: பெ.சண்முகம்
    • இந்தியாவில் சேலை ஷாப்பிங்: பட்ஜெட்டில் சிறந்த சேலையை வாங்குவது எப்படி | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் ஓர் இணை அரசாங்கத்தை நடத்துவதாக ஐகோர்ட் கண்டனம்
    • ஹார்வர்ட் பயிற்சி பெற்ற மருத்துவர் இந்த 10 குடல் சுகாதார போக்குகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இந்தியாவில் இன்பினிக்ஸ் ஜிடி 30 ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.