Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, August 8
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»பூம்புகார் மாநாட்டில் பூகம்பம் வெடிக்கலாம்! – பதறும் பாட்டாளி சொந்தங்கள்
    மாநிலம்

    பூம்புகார் மாநாட்டில் பூகம்பம் வெடிக்கலாம்! – பதறும் பாட்டாளி சொந்தங்கள்

    adminBy adminAugust 8, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பூம்புகார் மாநாட்டில் பூகம்பம் வெடிக்கலாம்! – பதறும் பாட்டாளி சொந்தங்கள்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ஆகஸ்ட் 10-ம் தேதி பூம்புகாரில் வன்னிய மகளிர் பெருவிழாவை நடத்துவதில் தீவிரமாக இருக்கிறார் மருத்துவர் ராமதாஸ். ஆனால், அன்புமணியை ஒதுக்கிவைத்துவிட்டு அய்யா நடத்தும் இந்த மாநாட்டால் பாமக-வுக்குள் பூகம்பம் வெடிக்கலாம் என பதறுகிறார்கள் பாட்டாளி சொந்தங்கள். ​

    பாமக-​வில் தந்​தைக்​கும் மகனுக்​கும் இடை​யில் வெடித்​துள்ள உரிமை மோதல் பிரச்​சினை​யானது நாளுக்கு நாள் வலுத்​துக் கொண்டே வரும் நிலையில், மகனைப் புறக்​கணித்​து​விட்டு பூம்​பு​காரில் வன்​னிய மகளிர் பெரு​விழாவை நடத்த ஆயத்​த​மாகி வரு​கி​றார் ராமதாஸ். கடந்த 20 ஆண்​டு​களாக அன்​புமணி இல்​லாமல் எந்த நிகழ்ச்​சி​யை​யும் நடத்​திப் பழக்​கமில்​லாத ராம​தாஸ், முதல்​முறை​யாக மகனின் தயவில்லாமல் இந்த மாநாட்டை வெற்​றிகர​மாக நடத்தி முடிக்க, தனது ஆதர​வாளர்​களை முடுக்கி விட்​டுள்​ளார். இந்த மாநாட்​டில் 3 லட்​சம் மகளிர் பங்​கேற்க வேண்​டும் என்​பது அய்​யா​வின் அன்​புக்​கட்​டளை என்​கி​றார்​கள்.

    மகளிர் மாநாட்​டுக்கு அன்​புமணியை அழைப்​பீர்​களா என செய்​தி​யாளர்​கள் கேட்​கும் போதெல்​லாம், “அழைப்பு விடுப்​போம்​… விடுக்​கப்​படும்​… எல்லோருக்​கும் அழைப்பு விடுக்​கி​றோம்; அனை​வ​ரும் வரலாம்” என பட்​டும் படா​மலேயே பதிலளித்து வரு​கி​றார் ராம​தாஸ். ஆனால், மாநாட்டை முன்​னின்று நடத்​தும் வன்​னியர் சங்​கத்​தினரோ, “அன்​புமணிக்கு அழைப்பு விடுக்​கப்​பட​வில்​லை” எனச் சொல்​கி​றார்​கள்.

    அன்​புமணிக்கு மட்​டுமல்​லாது அவரது ஆதர​வாளர்​களை​யும் ஒதுக்​கிவைக்க திட்​ட​மிட்​டிருப்​ப​தாக தெரி​கிறது. இதனால், மகளிர் மாநாட்​டில், அழைப்பில்​லாமல் அன்​புமணி​யும் அவரது விசு​வாசிகளும் கலந்து கொள்​வார்​களா என்ற கேள்வி எழுந்​துள்​ளது.

    இது தொடர்​பாக சேலம் மேற்கு எம்​எல்​ஏ-​வும், பாமக (ரா​ம​தாஸ் தரப்​பு) மாநில இணை பொதுச்​செய​லா​ள​ரு​மான அருளிடம் கேட்​ட​போது, “மகளிர் மாநாட்​டுக்​காக அவருக்கு (அன்​புமணி) அழைப்பு விடுக்​கப்​பட்​டதா இல்​லையா என்​பது குறித்து அய்​யா​வுக்​குத்​தான் தெரி​யும். மாநாட்டை வெற்​றிகர​மாக நடத்தி முடிக்க மற்ற நிர்​வாகி​களு​டன் இணைந்து செயல்​பட்டு வரு​கிறேன். அழைப்பு அனுப்​பப்​பட்ட விவரம் தொடர்​பாக நான் வேண்​டு​மா​னால் அய்​யா​விடம் கேட்​டு​விட்​டுச் சொல்​கிறேன்” என முடித்​துக் கொண்​டார்.

    ராம​தாஸுக்கு மிக நெருக்​க​மான புள்​ளி​களில் ஒரு​வ​ரான அருள், தனக்​குத் தெரி​யாது என்று சொல்​லும்​போதே அய்யா தரப்​பில் இருந்து சின்ன அய்யா​வுக்கு இது​வரை அழைப்பு விடுக்​கப்​பட​வில்லை என்​பது உறு​தி​யாகிறது.


    வடிவேல் ராவணன், அருள்

    இது தொடர்​பாக பாமக (அன்​புமணி தரப்​பு) மாநில பொதுச் செய​லா​ள​ரான வடிவேல் ராவணனிடம் கேட்​டதற்​கு, “சின்ன அய்​யா​வுக்கு அழைப்பு விடுக்கப்​பட்​டதா என்று எனக்கு தெரி​யாது. எனக்​கும், என்​னைப் போன்​றவர்​களுக்​கும் அழைப்பு கிடை​யாது. நாங்​கள் மாநாட்​டில் கலந்து கொள்​வது குறித்து தலை​வர்​தான் (அன்​புமணி) முடி​வெடுப்​பார்” என்​றார்.

    பொது​வான நிலைப்​பாட்​டில் இருக்​கும் பாமக-​வினரோ, “பாமக-​வில் இது​வரை இல்​லாத அளவுக்கு மிகப்​பெரிய பூகம்​பம் வெடிக்க பூம்​பு​கார் மகளிர் மாநாடு காரண​மாக அமைந்​து​விடுமோ என அச்​சப்​படு​கி​றோம்.

    அப்​பா​வும் பிள்​ளை​யும் போட்டி பொதுக்​குழுக்​களை கூட்​டி, ஒரு​வ​ருக்கு ஒரு​வர் எதி​ரான நிலைப்​பாட்டை எடுக்​கத் திட்​ட​மிடு​கி​றார்​கள். விட்​டுக்​கொடுத்​துப் போகவேண்​டும் என இரு​வ​ரும் நினைத்​தா​லும் இரு தரப்​பிலும் இருக்​கும் சிலர் இந்​தப் பகையை தூபம் போட்டு வளர்ப்​ப​திலேயே குறியாய் இருக்​கி​றார்​கள். இது புரி​யாமல் யார் பெரிய​வர் என பார்த்​து​விடு​வோம் என அப்​பா​வும் பிள்​ளை​யும் முஷ்டியை தூக்​கிக் கொண்டு நிற்கின்றனர்.

    இப்​போதும் காலம் கடந்​து​விட​வில்​லை. நடந்​ததை எல்​லாம் மறந்​து​விட்டு இரு​வ​ரும் மகளிர் மாநாட்​டில் ஒன்​றாக கைகோக்க வேண்​டும். அப்​போது தான் பாமக-வுக்​கான பழைய மரி​யாதை கிடைக்​கும்” என்​றனர்​.





    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    அதிமுக கொள்கை வேறு, கூட்டணி வேறு: பழனிசாமி திட்டவட்டம்

    August 8, 2025
    மாநிலம்

    திருச்சி எஸ்ஆர்எம் ஓட்டல் வழக்கில் தனி நீதிபதி உத்தரவு ரத்து: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தீர்ப்பு

    August 8, 2025
    மாநிலம்

    பாமகவை கைப்பற்றத் துடிக்கிறார் அன்புமணி: ராமதாஸ் பகிரங்க குற்றச்சாட்டு

    August 8, 2025
    மாநிலம்

    எய்ம்ஸ் கட்டுமானம் ஜனவரியில் நிறைவடையும்: உயர் நீதிமன்றத்தில் தகவல்

    August 8, 2025
    மாநிலம்

    முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவுதினம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி

    August 8, 2025
    மாநிலம்

    டெல்லியில் மத்திய அமைச்சர் கட்கரியுடன் அண்ணாமலை சந்திப்பு: பாஜக மூத்த தலைவர்களுடனும் ஆலோசனை

    August 8, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அதிமுக கொள்கை வேறு, கூட்டணி வேறு: பழனிசாமி திட்டவட்டம்
    • நீண்ட காலம் வாழ இந்த வழியில் நடந்து செல்லுங்கள், நீண்ட ஆயுள் நிபுணர்களின் கூற்றுப்படி | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • செப்டம்பர் 9-ம் தேதி குடியரசு துணை தலை​வர் தேர்​தல் வாக்கெடுப்பு
    • ரிஷப் பந்த்திடம் மன்னிப்பு கேட்டேன்: மனம் திறக்கும் கிறிஸ் வோக்ஸ்
    • இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்: பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தகவல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.