Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, August 10
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»உத்தராகண்டில் பெருவெள்ளம், நிலச்சரிவு; மீட்புப்பணி தீவிரம்: கேரள பயணிகள் 28 பேரை காணவில்லை
    தேசியம்

    உத்தராகண்டில் பெருவெள்ளம், நிலச்சரிவு; மீட்புப்பணி தீவிரம்: கேரள பயணிகள் 28 பேரை காணவில்லை

    adminBy adminAugust 7, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    உத்தராகண்டில் பெருவெள்ளம், நிலச்சரிவு; மீட்புப்பணி தீவிரம்: கேரள பயணிகள் 28 பேரை காணவில்லை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கொச்சி / டேராடூன்: உத்​த​ராகண்​டில் மேகவெடிப்​பால் பெரு​வெள்​ளம் ஏற்​பட்ட பேரிடரை தொடர்ந்து இது​வரை சுமார் 150 பேர் மீட்​கப்​பட்​டுள்​ளனர். கேரளாவை சேர்ந்த சுற்​றுலாப் பயணி​கள் 28 பேரை காண​வில்​லை. உத்​த​ராகண்ட் மாநிலத்​தில் கடந்த சில வாரங்​களாக கனமழை பெய்து வரு​கிறது. இந்​நிலை​யில் உத்​தர​காசி மாவட்​டம், இமயமலைப் பகு​தி​யில் நேற்று முன்​தினம் மேகவெடிப்​பால் திடீர் பெரு​வெள்​ளம் ஏற்​பட்​டது.

    சார்​தாம் யாத்​திரை தலங்​களில் ஒன்​றான கங்​கோத்ரி அரு​கில் இந்​தப் பெரு​வெள்​ளம் ஏற்​பட்​ட​தில் இக்​கோ​யிலுக்கு செல்​லும் வழியில் உள்ள தரளி என்ற கிராமம் வெள்​ளத்​தில் அடித்​துச் செல்​லப்​பட்​டது.

    இந்த கிராமத்​தில் பல ஓட்​டல்​கள், தங்​கும் விடு​தி​கள் செயல்​பட்டு வந்​தன. மேலும் 2 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் இங்கு வசித்து வந்​தனர். இந்​நிலை​யில் பெரு​வெள்​ளத்​தில் 5 பேர் உயிரிழந்த நிலை​யில் பலர் படு​கா​யம் அடைந்​தனர். மேலும் ஏராள​மானோரை காண​வில்​லை. இதையடுத்து அங்கு மீட்​புப் பணிகள் முடுக்​கி​விடப்​பட்​டன.

    இதுகுறித்து போலீஸ் டிஐஜி மொசென் ஷாஹேதி நேற்று கூறிய​தாவது: தரளி பகு​தி​யில் ராணுவம், தேசிய, மாநில பேரிடர் மீட்பு படை​யினர் மற்​றும் இந்தோ திபெத் எல்​லைக் காவல் படை​யினர் மீட்பு பணி​யில் ஈடு​பட்​டுள்​ளனர். அவர்​கள் இது​வரை சுமார் 150 பேரை மீட்​டுள்​ளனர்.

    ரிஷிகேஷ் – உத்​தர​காசி நெடுஞ்​சாலை​யில் நிலச்​சரிவு ஏற்​பட்​டுள்​ள​தால் தரளி கிராமத்​துக்கு கூடு​தல் மீட்​புக்​குழுக்​கள் செல்​வ​தில் தாமதம் ஏற்​பட்​டுள்​ளது. தரளி கிராமத்​துக்கு அரு​கில் உள்ள ஹர்​சில் பகு​தி​யில் 11 ராணுவ வீரர்​களை காணவில்​லை. பாதிக்​கப்​பட்ட பகு​தி​களுக்கு மிக அரு​கில் தேசிய பேரிடர் மீட்பு படை​யின் 3 குழுக்​கள் உள்​ளன. பாதை சீரானவுடன் அவர்​கள் அவர்​கள் அங்கு செல்​வார்​கள். இவ்​வாறு அவர் கூறி​னார்.

    உத்​த​ராகண்​டில் கின்​னார் – கைலாஷ் யாத்​திரை பாதை​யில் 413 பக்​தர்​கள் மீட்​கப்​பட்​டுள்​ள​தாக இந்​தோ-​திபெத் எல்லை காவல் படை தெரி​வித்​துள்​ளது. இதற்​கிடை​யில் உத்​த​ராகண்ட் பெரு​வெள்​ளம் மற்​றும் கடும் நிலச்​சரிவுக்கு பிறகு கேரளாவை சேர்ந்த சுற்றுலாப் பயணி​கள் 28 பேரை காண​வில்லை என உறவினர்​கள் தெரி​வித்​தனர். இந்த 28 பேரில் 20 பேர் மகா​ராஷ்டி​ரா​வில் குடியேறிய​வர்​கள். மற்​றவர்​கள் கேரளா​வின் பல்​வேறு மாவட்​டங்​களை சேர்ந்​தவர்​கள் என கூறப்​படு​கிறது.

    இதுகுறித்து கொச்​சி​யில் உறவினர் ஒரு​வர் கூறுகை​யில், “இவர்​கள் 28 பேரும் செவ்​வாய்க்​கிழமை காலை 8.30 மணி​யள​வில் உத்தரகாசி​யில் இருந்து கங்​கோத்​ரிக்கு புறப்​பட்​டனர். அவர்​கள் செல்​லும் வழி​யில் நிலச்​சரிவு​கள் ஏற்​பட்​டுள்​ளன. பிறகு அவர்களை தொடர்பு கொள்ள முடிய​வில்​லை. 10 நாள் உத்​த​ராகண்ட் சுற்​றுலா​வுக்கு ஏற்​பாடு செய்த ஹரித்​வார் பயண நிறு​வனத்தா​லும் இவர்​களின் இருப்​பிடம் குறித்து எந்த தகவலும் அளிக்க முடிய​வில்​லை’’ என்று கூறி​னார்.

    இமாச்​சலில் நிலச்​சரிவு: இமாச்​சலில் சிம்​லா, மண்​டி, குல்​லு, தரம்​பூர் உள்​ளிட்ட பல்​வேறு மாவட்​டங்​களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்​பட்ட நிலச்​சரிவு​கள் காரண​மாக 4 தேசிய நெடுஞ்​சாலைகள் உட்பட 617 சாலைகளில் போக்​கு​வரத்து துண்டிக்கப்​பட்​டுள்​ளது.

    இவற்​றில் மண்டி மாவட்​டத்​தில் 377 சாலைகள், குல்லு மாவட்​டத்​தில் 90 சாலைகளில் போக்​கு​வரத்து தடைபட்டுள்​ளது. கனமழை நிலச்​சரிவு காரண​மாக கின்​னார் – கைலாஷ் யாத்​திரை நிறுத்தி வைக்​கப்​பட்​டுள்​ளது. பல மாவட்டங்களில்​ பள்​ளி, கல்லூரிகளுக்கு விடு​முறை அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

    மீட்புப் பணிகளை ஆய்வு செய்தார் முதல்வர் புஷ்கர் சிங் தாமி: உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று ஆய்வு செய்தார்.அப்போது அரசு சார்பில் இயன்ற அனைத்து உதவிகளும் அளிக்கப்படும் என அப்பகுதி மக்களிடம் உறுதி அளித்தார். மேலும் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தவும் இயன்ற அனைத்து முயற்சிகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலையில் முதல்வர் தாமியுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது தரளி பகுதியில் நடைபெறும் தீவிர மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து பிரதமர் மோடியிடம் முதல்வர் தாமி எடுத்துரைத்தார்.

    ‘‘அங்கு சில இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்வது மீட்புப் பணிக்கு சவாலாக உள்ளது. எனினும் பாதிக்கப்பட்ட இடங்களில் தொடர்புடைய அனைத்து அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதிய உதவி கிடைப்பதை உறுதி செய்து வருகின்றன’’ என்றும் தாமி கூறினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    5 ஆண்டுகளில் ராணுவத் தளவாட உற்பத்தி ரூ.1.51 லட்சம் கோடியை எட்டியது

    August 10, 2025
    தேசியம்

    பிஹார் துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா பெயரில் இரண்டு வாக்காளர் அட்டை: தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு

    August 10, 2025
    தேசியம்

    பெண் மருத்துவர் கொலையை கண்டித்து கொல்கத்தாவில் பெரும் ஆர்ப்பாட்டம்

    August 10, 2025
    தேசியம்

    அங்கீகரிக்கப்படாத 334 அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்தது தேர்தல் ஆணையம்

    August 10, 2025
    தேசியம்

    தீபாவளி, சாத் பண்டிகை கால சலுகை: ரயில் ரிட்டர்ன் டிக்கெட்களுக்கு 20 சதவீதம் தள்ளுபடி

    August 10, 2025
    தேசியம்

    வாக்கு திருட்டு விவகாரம்: பிரச்சாரத்தில் இணைய மக்களுக்கு காங்கிரஸ் அழைப்பு!

    August 10, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • இலங்கை  சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் தொடர் போராட்டம்
    • NJZ ரசிகர் நியூஜியன்ஸின் சட்டப் போருக்கும் சி-நாடக நட்சத்திரமான ஜாவோ லூசியின் துன்புறுத்தல் உரிமைகோரல்களுக்கும் இடையில் இணைகளை ஈர்க்கிறார்; கலப்பு எதிர்வினையைத் தூண்டுகிறது
    • 5 ஆண்டுகளில் ராணுவத் தளவாட உற்பத்தி ரூ.1.51 லட்சம் கோடியை எட்டியது
    • இரவு நேரத்தில் பழைய குற்றாலம் செல்ல வாகனங்களுக்கு அனுமதி: வனத்துறை நடவடிக்கையால் சர்ச்சை
    • ட்ரம்ப்பின் வரி விதிப்பு: ஐபோன் 17 சீரிஸ் போன்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.