Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, August 7
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»தென்கிழக்கு ஆசிய நாடுகளை இணைக்கும் பாலம் ராமாயணம்: சிங்கப்பூர் கலை இயக்குநர் நெகிழ்ச்சி | சிங்கா 60
    மாநிலம்

    தென்கிழக்கு ஆசிய நாடுகளை இணைக்கும் பாலம் ராமாயணம்: சிங்கப்பூர் கலை இயக்குநர் நெகிழ்ச்சி | சிங்கா 60

    adminBy adminAugust 7, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தென்கிழக்கு ஆசிய நாடுகளை இணைக்கும் பாலம் ராமாயணம்: சிங்கப்பூர் கலை இயக்குநர் நெகிழ்ச்சி | சிங்கா 60
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: “தென்​கிழக்கு ஆசிய நாடு​களை இணைக்​கும் பால​மாக ராமாயணம் திகழ்​கிறது” என்று ‘சிங்கா 60’ கலைத் திரு​விழா நிகழ்ச்​சி​யில் சிங்​கப்​பூர் கலை இயக்​குநர் அரவிந்த் குமார​சாமி நெகிழ்ச்​சி​யுடன் குறிப்​பிட்​டார்.

    சிங்​கப்​பூரின் 60-வது தேசிய தின கொண்​டாட்​டத்தை முன்​னிட்டு ‘இந்து தமிழ் திசை’, ‘தி இந்​து’ மற்​றும் ‘தி இந்து பிசினஸ் லைன்’ இணைந்து சென்​னை​யில் ‘சிங்கா 60’ என்ற 10 நாள் கலைத் திரு​விழாவை ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் கோலாகல​மாக நடத்தி வரு​கின்​றன. ​விழா​வின் 6-ம் நாளான நேற்று அடை​யாறு பத்​ம​நாபா நகரில் உள்ள ஃபோரம் ஆர்ட் கேலரி​யில்‘ஆசிய கலாச்​சா​ரங்​களில் ராமாயணம்’ என்ற தலைப்​பில் சிறப்பு கலை சொற்​பொழிவு நிகழ்ச்சி நடந்​தது.

    இதில் சிங்​கப்​பூரைச் சேர்ந்த அப்​சரா நடனப் பள்ளி கலை இயக்​குந​ரான இசை, நடனக் கலைஞர் அரவிந்த் குமார​சாமி உரை​யாற்​றி​னார். அப்​போது அவர் பேசி​ய​தாவது: ராமாயணம் ஒரு அழியா காவி​யம். அது தர்​மம், விசு​வாசம், தியாகம், நேர்மை ஆகிய பண்​பு​களை வலி​யுறுத்​துகிறது. தீமையை நன்மை வெற்றி கொள்​ளும், நேர்மை வெல்​லும், அர்ப்​பணிப்பு போன்​றவை அதன் முக்​கிய கருப்​பொருள்​கள் ஆகும். உலகில் மலைகள் இருக்​கும் வரை, ஆறுகள் ஓடும் வரை ராமாயணம் மக்​களிடையே மீண்​டும் மீண்​டும் சொல்​லப்​பட்​டுக்கொண்டே இருக்​கும். ராமா யணத்தை எழுத்​து, நாடகம், நடனம், இசை, சிற்​பம் என பல்​வேறு வடிவங்​களில் காணலாம். உலகிலேயே அதிக முஸ்​லிம் மக்​கள்​தொகை கொண்ட நாடு இந்​தோ​னேசி​யா. அந்​நாட்டு மக்​கள் ராமாயணத்தை கொண்​டாடு​கிறார்​கள். அது​தான் ராமாயணத்​தின் ஆற்​றல்.

    தென்​கிழக்கு ஆசிய நாடு​களான தாய்​லாந்​து, கம்​போடி​யா,லாவோஸ், இந்​தோ​னேசி​யா, மலேசியா உள்​ளிட்ட நாடு​களில் ராமாயணம் வெவ்​வேறு பெயர்​களில் வழங்​கப்​படு​கிறது. அந்​நாடு​களில் நடனம், பொம்​மலாட்​டம், கோயில் சிற்​பங்​கள், ஓவி​யங்​கள் போன்​றவற்​றில் ராமாயண காட்சி நிகழ்​வு​கள் இடம்​பெற்​றுள்​ளன. உதா​ரணத்​துக்​கு, இந்​தோ​னேசி​யா​வின் பிராந்​திய மொழி​யான ஜாவனிய மொழிப்​பாடல்​கள், பொம்​மலாட்​டம் உள்​ளிட்ட பாரம்​பரிய கலை வடிவங்​களில் ராமாயணத்தை பார்க்​கலாம். அதே​போல் கம்​போடியா நாட்​டின் பாரம்​பரிய நடனங்​களில் ராமாயணக் கதைகள் இடம்​பெற்​றுள்​ளன. அந்​நாட்​டில் உள்ள அங்​கோர்​வாட் கோயில் சிற்​பங்​களில் ராமாயண காட்​சிகள் தத்​ரூப​மாக வடிக்​கப்​பட்​டுள்​ளன. மேலும் அங்​குள்ள பாண்டே ப்ரீ கோயில், புரோம்​பானம் கோயில் சிற்​பங்​களி​லும் ராமாயண கதை காட்​சிகளைக் காணலாம். தாய்​லாந்து நாட்​டின் தேசிய புராண​மாக இருப்​பது ராமாயணம். அது ராமகியன் என்ற பெயரில் அங்கு அழைக்​கப்​படு​கிறது.

    இந்​தியா மற்​றும் தென்​கிழக்கு ஆசிய நாடு​கள் இடையி​லான கூட்டு கலாச்​சார பரி​மாற்​றங்​களில் ராமாயணம் தொடர்​பான நடனங்​களுக்​கும் நாடகங்​களுக்​கும் முக்​கிய இடம் உண்​டு. ராமாயணம் என்​பது ஒரு கதை என்​ப​தைத் தாண்டி அது ஓர் உயிருள்ள பாரம்​பரி​யம் ஆகும். அது நமது கலாச்​சாரவேர்​களை​யும், மதிப்​பீடு​களை​யும் கொண்​டாடு​கிறது. நாடு​களைத் தாண்​டிய கலாச்​சார கதைகளின் ஆற்​றலுக்கு உதா​ரண​மாக திகழ்​கிறது. அது தென்​கிழக்கு ஆசிய நாடு​களை இணைக்​கும் பால​மாக விளங்​கு​கிறது.இவ்​வாறு அவர் பேசி​னார்.

    அரவிந்த் குமார​சாமிக்கு ‘இந்து தமிழ் திசை’ இயக்​குநர் லட்​சுமி ஸ்ரீநாத் நினை​வுப் பரிசு வழங்​கி​னார். முன்​ன​தாக, ஃபோரம் ஆர்ட் கேலரி இயக்​குநர் ஷாலினி பிஸ்​வஜித் வரவேற்​றார். நிறை​வாக ‘இந்து தமிழ் திசை’ இயக்​குநர் அகிலா விஜய் ஐயங்​கார் நன்றி கூறி​னார். அவர் பேசும் போது, “சிங்கா 60 விழா​வில், ஓவியக்கண்​காட்​சி, கலை, கலாச்​சா​ரம், நாடகம், உணவு, குழு விவாதம் என பலதரப்​பட்ட நிகழ்​வு​கள் உள்​ளன. சிங்​கப்​பூர்​-இந்திய கலைஞர்​களின் படைப்​பு​கள் அடங்​கிய ஓவியக் கண்​காட்சி ஃபோரம் ஆர்ட் கேலரி​யில் ஆகஸ்ட் 30 வரை ஒரு மாதம் நடை​பெறுகிறது. சிங்கா60 நிகழ்ச்சி வாயி​லாக சிங்​கப்​பூரை சென்னை நகருக்கு கொண்​டு​வந்​துள்​ளோம். இந்​நிகழ்ச்​சியை சென்​னை​வாசிகள் மகிழ்ச்​சி​யுடன் கண்டு களிக்​கட்​டும்” என்​றார். இந்​நிகழ்ச்​சி​யில், சிங்​கப்​பூர் துணை தூதர் வைஷ்ணவி வாசுதேவன் ‘இந்து தமிழ் திசை’ இயக்​குநர் விஜயா அருண் மற்​றும் கல்​வி​யாளர்​கள், கலை ஆர்​வலர்​கள் கலந்​து​கொண்​டனர்.

    ‘சிங்கா 60’ நிகழ்ச்​சிக்​கான பங்​கு​தா​ரர்​களாக சிங்​கப்​பூர் தூதரகம், டிபிஎஸ் வங்​கி​யும் துணை பங்​கு​தா​ரர்​களாக டிவிஎஸ், லார்​சன் அண்ட் டூப்​ரோ, ஓலம் அக்​ரி, டிரான்​ஸ்​வோர்ல்​டு, நிப்​பான் பெயின்ட் அண்ட் எச்​ஒய்​சி, ராம்​ராஜ் காட்​டன், லலிதா ஜுவல்​லரி, ரெசிடென்சி டவர்​ஸ், ஃபோரம் ஆர்ட் கேலரி, மிஸ்​டர் ஓங், நாசி அண்ட் மீ,பம்​கின் டேல்​ஸ், மேவெண்​டோயர், சிங்​கப்​பூர் தமிழ் முரசு நாளிதழ் ஆகிய​வை​யும் உள்​ளன.

    ‘சிங்கா 60’ திரு​விழா​வின் 7-வதுநாளான இன்று பிற்​பகல் 3 மணிக்கு கிண்​டி​யில் உள்ள ஹோட்​டல் ஐடிசி கிராண்ட் சோழா​வில் ‘இண்​டியா கனெக்ட் சிங்​கப்​பூர் எடிஷன்’ என்ற தலைப்​பில்சிறப்பு விவாத நிகழ்ச்சி நடை​பெறு கிறது. இதில், இந்​தி​யா-சிங்​கப்​பூர் இடையி​லான ராஜ்ஜிய, பொருளா​தார, தொழில்​நுட்ப உறவு​கள் குறித்து விரி​வாக விவா​திக்​கப்​படு​கிறது. இந்​நிகழ்ச்​சி​யில், மத்​திய அரசின் தலைமை பொருளா​தார ஆலோ​சகர் அனந்த நாகேஸ்​வரன், மத்​திய அரசின் மின்​னணு மற்​றும் தகவல் தொழில்​நுட்​பத்​துறை செயலர் எஸ்​.கிருஷ்ணன், சிங்​கப்​பூர், பிரான்ஸ் நாடு​களுக்​கான முன்​னாள் இந்​திய தூதர் ஜாவத் அஷ்ரப் ஆசிய ஆராய்ச்​சிக் கழகத்​தைச் சேர்ந்த கிஷோர் மது​பானி உள்​ளிட்​டோர் பங்​கேற்​கின்​றனர். ஆகஸ்ட் 8-ம் தேதி (நாளை) காலை 11 மணிக்கு ஃபோரம் ஆர்ட் கேலரி​யில் சிங்​கப்​பூர் கலைஞர் குமாரி நாகப்​பன்​ பங்​கேற்​கும்​ கலை சொற்​பொழி​வு நிகழ்ச்​சிநடை​பெறுகிறது. ‘கலைப்​ படைப்​புகளின்​ உரு​வாக்​கம்​’ என்​ற தலைப்​பில்​ அவர்​ உரை​யாற்​றுகிறார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    திமுக மாநகர போக்குவரத்து கழக ஊழியர் முன்னேற்ற சங்க தேர்தலுக்கு இடைக்காலத் தடை

    August 7, 2025
    மாநிலம்

    திமுக ஆட்சியை விமர்சிக்க திருமாவளவன் தயக்கம்: தமிழிசை கருத்து

    August 7, 2025
    மாநிலம்

    இரட்டை இலக்க வளர்ச்சி பெற்ற ஒரே மாநிலம் தமிழகம் என்பது மாயை: இபிஸ் அடுக்கும் காரணங்கள்

    August 7, 2025
    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: தி.மலை, வேலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

    August 7, 2025
    மாநிலம்

    பிரதமர் மோடியுடன் கமல்ஹாசன் சந்திப்பு: கீழடி குறித்து கோரிக்கை

    August 7, 2025
    மாநிலம்

    உடுமலை சிறப்பு எஸ்ஐ கொலை வழக்கில் தந்தை, மகன் கைது: நீதிமன்றத்தில் ஆஜர்

    August 7, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • டிராகன் பழம் Vs பேஷன் பழம்: எது ஆரோக்கியமானது மற்றும் உங்களுக்கு சிறந்தது? | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • எலோன் மஸ்க் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்: ‘அடுத்த ஆண்டு நவம்பர்/டிசம்பரில் ஆப்டிமஸால் செவ்வாய் கிரகத்திற்கு ஸ்டார்ஷிப் விமானம்’ | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘அன்று ட்ரம்ப்புக்காக டெக்சாஸில் மோடி பிரச்சாரம்… இன்று 50% வரி!” – திரிணமூல் காங். விமர்சனம்
    • சர்வதேச வானியல் – வானியற்பியல் ஒலிம்பியாட்: மும்பையில் 64 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்பு
    • Ballon d’Or 2025 விருது: பரிந்துரை பட்டியலில் மெஸ்ஸி, ரொனால்டோ இல்லை!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.