Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, December 6
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»உலகம்»இந்தியப் பொருட்களுக்கு 50% வரி: கூடுதலாக 25% விதித்த ட்ரம்ப் கூறும் காரணம் என்ன?
    உலகம்

    இந்தியப் பொருட்களுக்கு 50% வரி: கூடுதலாக 25% விதித்த ட்ரம்ப் கூறும் காரணம் என்ன?

    adminBy adminAugust 6, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    இந்தியப் பொருட்களுக்கு 50% வரி: கூடுதலாக 25% விதித்த ட்ரம்ப் கூறும் காரணம் என்ன?
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    நியூயார்க்: இந்தியப் பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். இதன்மூலம் இப்போது இந்தியாவுக்கு மொத்தம் 50 சதவீதம் வரி விதித்துள்ளது அமெரிக்கா. தனது எதிர்ப்பை மீறி ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்து வருவதாக கூறி, இந்த கூடுதல் வரியை ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

    உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான புதிய வரி விதிப்பு நடவடிக்கை ஆகஸ்ட் 7-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அமெரிக்கா அறிவித்தது. இந்நிலையில், இந்தியாவுக்கு ஏற்கெனவே அறிவித்த 25% வரியோடு கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வரி விதிப்பு காரணமாக அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீதம் வரியை இந்தியா செலுத்த வேண்டி உள்ளது. இது சீனாவை காட்டிலும் 20 சதவீதமும், பாகிஸ்தானை காட்டிலும் 21 சதவீதம் அதிகமாகும்.

    “ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருவதை நான் அறிவேன். அதனால், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீது கூடுதல் வரியை விதிப்பது அவசியம் என்று கருதுகிறேன்” என ட்ரம்ப் தற்போது தனது உத்தரவில் தெரிவித்துள்ளார். முன்னதாக, அடுத்த 24 மணி நேரத்தில் இந்தியா மீதான வரியை கணிசமாக உயர்த்தப் போவதாக ட்ரம்ப் நேற்று எச்சரித்திருந்தார். இந்நிலையில், சொன்னபடியே தற்போது கூடுதல் வரியை அவர் அறிவித்துள்ளார்.

    அமெரிக்கா​வுக்கு ஓராண்​டில் ரூ.8,650 கோடி அளவுக்கு இந்​தியா ஏற்​றுமதி செய்​கிறது. இது வர்த்தகத்தில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது. இருப்பினும் இந்த கூடுதல் விரி விதிப்பு வரும் 27-ம் தேதி முதல் அமலாகும் என தெரிகிறது. ட்ரம்ப் தனது உத்தரவில் 21 நாட்கள் அவகாசம் கொடுத்துள்ளார்.

    முன்னதாக, நேற்று தனது சமூக வலைதள பக்கத்தில், “இந்தியா ரஷ்ய எண்ணெயை பெருமளவில் வாங்குவது மட்டுமல்லாமல், வாங்கிய எண்ணெயில் பெரும்பகுதியை திறந்த சந்தையில் அதிக லாபத்திற்கு விற்கிறது. ரஷ்ய போர் இயந்திரத்தால் உக்ரைனில் எத்தனை பேர் கொல்லப்படுகிறார்கள் என்பது பற்றி அவர்களுக்கு கவலையில்லை. இதன் காரணமாக, அமெரிக்காவிற்கு இந்தியா செலுத்தும் வரியை நான் கணிசமாக உயர்த்துவேன்” என்று ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

    இதனிடையே, இந்திய வெளி​யுறவு அமைச்​சகம் அளித்த விளக்கத்தில், “ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்​ணெய் வாங்​கு​வதற்​காக அமெரிக்கா​வும் ஐரோப்​பிய ஒன்​றிய​மும் இந்​தி​யாவை தொடர்ந்து குறிவைத்து வரு​கின்​றன. இந்​தி​யா​வுக்கு கச்சா எண்​ணெய் விநி​யோகம் செய்து வந்த நாடு​கள், உக்​ரைன் போருக்கு பிறகு ஐரோப்​பிய நாடு​களுக்கு கச்சா எண்​ணெய் விநி​யோகிக்க தொடங்​கி​விட்​டன.

    அந்த இக்​கட்​டான நேரத்​தில் ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெயை இறக்​குமதி செய்​தோம். இதற்கு அமெரிக்கா​வும் ஆதரவு அளித்​தது. சர்​வ​தேச சந்​தை​யில் கச்சா எண்​ணெய் விலை உயர்வை தடுக்க இந்​தி​யா​வுக்கு ஆதரவு அளிப்​ப​தாக அமெரிக்கா கூறியது. இந்த விவ​காரத்​தில் இந்​தியா மீது குற்​றம் சுமத்​தும் நாடு​கள் ரஷ்​யா​வுடன் தொடர்ந்து வர்த்​தகத்​தில் ஈடு​பட்டு வரு​கின்றன.

    கடந்த 2023-ம் ஆண்​டில் ஐரோப்​பிய ஒன்​றி​யம், ரஷ்​யா​வுடன் 17.2 பில்​லியன் யூரோ, கடந்த 2024-ம் ஆண்​டில் 67.5 பில்​லியன் யூரோ மதிப்​பில் இருதரப்பு வர்த்தகத்​தில் ஈடு​பட்​டிருக்​கிறது. இந்த சூழலில் ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெய் இறக்​குமதி செய்​வ​தாக இந்​தியா மீது குற்​றம் சாட்​டு​வது நியாயமற்றது, ஏற்​றுக் கொள்ள முடி​யாதது. அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் இரட்டை வேடம் போடுகின்றன. நாட்​டின் நலன் மற்​றும் பொருளா​தார பாது​காப்பை உறுதி செய்ய தேவை​யான அனைத்து நடவடிக்​கைகளை​யும் இந்​தியா மேற்​கொள்​ளும்” என்று தெரிவித்திருந்தது கவனிக்கத்தக்கது.

    முன்னதாக, 69 நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியனுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய வரி விதிப்பு உத்தரவில் டிரம்ப் கடந்த 31-ம் தேதி கையெழுத்திட்டார். இதில், சிரியாவுக்கு அதிகபட்சமாக 41 சதவீதவரி விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 14 ஆண்டுகளாக உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவுக்கு இது அதிக வரி விதிப்பாகும். அடுத்ததாக, லாவோஸ், மியான்மருக்கு 40 சதவீதம், சுவிட்சர்லாந்துக்கு 39 சதவீதம், இராக், செர்பியாவுக்கு 35 சதவீத வரி அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    உலகம்

    HIRE சட்டம் விளக்கப்பட்டது: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சட்டமியற்றுபவர் H-1B விசாக்களை இரட்டிப்பாக்க முன்மொழிகிறார் – இது சாத்தியமா? – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    December 6, 2025
    உலகம்

    ‘எங்களுக்குச் சொல்ல ஒரு இந்தியர் தேவையில்லை…’: ‘அமெரிக்கன் கனவை’ பிரசங்கித்ததற்காக சமூக ஊடகங்கள் விவேக் ராமசாமியை வறுத்தெடுத்தன – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    December 6, 2025
    உலகம்

    இந்திய வம்சாவளி பெண்ணின் ‘கிக் டிரம்ப்’ என்று கூறிய வீடியோ வைரலானதை அடுத்து விவேக் ராமசாமி தொழில்நுட்ப மாநாட்டில் இருந்து விலகினார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    December 6, 2025
    உலகம்

    ‘பல உயிர்களை சேதப்படுத்தியது’: பெண்கள் மற்றும் குழந்தைகளை ரகசியமாக படம்பிடித்ததற்காக இந்திய வம்சாவளி மருத்துவர் ஓமெய்ர் ஏஜாஸ் மிச்சிகனில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்; மனைவி முதல் புகார் கொடுத்தார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    December 6, 2025
    உலகம்

    வட கொரியா, அமெரிக்கா மற்றும் ரஷ்யா மூன்றாம் உலகப் போரைத் தூண்டினால், 72 மணி நேரத்தில் 60% மனித இனம் இறக்கக்கூடும் என்று நிபுணர் எச்சரித்தார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    December 5, 2025
    உலகம்

    ‘நெட்ஃபிக்ஸ் ஒபாமா நியூஸ் நெட்வொர்க் ஆகலாம்’: வார்னர் பிரதர்ஸ் கையகப்படுத்தல் குறித்து மாகா ஆர்வலர் லாரா லூமர் எச்சரிக்கை | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    December 5, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • வாழ்க்கையின் இன்றியமையாத 8: தினசரி பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் எவ்வாறு இதய நோய் மற்றும் பக்கவாதத்தை முன்னறிவித்து தடுக்கலாம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஒவ்வொரு நாளும் உங்கள் நினைவகத்தை கூர்மையாக்கும் 10 மூளை பயிற்சிகள்
    • இந்த எளிய குஜராத்தி காலை உணவு வயிற்று உப்புசம் மற்றும் செரிமான பிரச்சனைகளை இயற்கையாக சரி செய்யும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • போலியான மணீஷ் மல்ஹோத்ரா லெஹங்காவை வாங்கி ஏமாற்றும் முன் அதை அடையாளம் காண 5 வழிகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சிறுநீர் கழிப்பதற்கான உங்கள் தொடர்ச்சியான தூண்டுதல் உண்மையில் ஒரு மறைக்கப்பட்ட குடல் பிரச்சனையாக இருக்கலாம் என்பதை சிறுநீரக மருத்துவர் வெளிப்படுத்துகிறார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.