Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, August 7
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»சொகுசு கார் ஏற்றி கல்லூரி மாணவர் கொல்லப்பட்ட வழக்கு: திமுக பிரமுகர் பேரனின் ஜாமீன் மனு தள்ளுபடி
    மாநிலம்

    சொகுசு கார் ஏற்றி கல்லூரி மாணவர் கொல்லப்பட்ட வழக்கு: திமுக பிரமுகர் பேரனின் ஜாமீன் மனு தள்ளுபடி

    adminBy adminAugust 6, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சொகுசு கார் ஏற்றி கல்லூரி மாணவர் கொல்லப்பட்ட வழக்கு: திமுக பிரமுகர் பேரனின் ஜாமீன் மனு தள்ளுபடி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: சொகுசு கார் ஏற்றி கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக பிரமுகரின் பேரனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சென்னை அயனாவரம் முத்தம்மன் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் நிதின்சாய் (19) மைலாப்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இதேபோல் அயனாவரம் பி.வி கோயில் தெருவைச் சேர்ந்த அபிஷேக் (20) என்ற இளைஞர் அதே கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த மாதம் 29 ஆம் தேதி நிதின்சாய் மற்றும் அபிஷேக் ஆகிய இருவரும், மேலும் சில கல்லூரி நண்பர்களுடன் அண்ணா நகரில் உள்ள பிரியாணி கடை ஒன்றில் பிரியாணி சாப்பிட சென்றுள்ளனர்‌.

    நிதின் சாயின் பள்ளிகால ஜூனியர் நண்பரான வெங்கடேஷ் ஒரு பெண்ணை விரும்பியுள்ளார். அதே பெண்ணுக்காக பிரணவ் என்ற இளைஞரும் வெங்கடேஷிடம் சண்டையிட்டுள்ளார். இது தொடர்பான பிரச்சினையில் தலையிட்ட நிதின் சாயையும் அவரது நண்பர்களையும், பிரணவுக்கு ஆதரவாக வந்த வேறொரு கல்லூரி மாணவர் சந்துரு ( திமுக பிரமுகர் பேரன்) தனது ரேஞ்ச் ரோவர் சொகுசு காரை கொண்டு மோதுவது போல் மிரட்டியுள்ளார். இதனால் நிதின் சாய் நண்பர்கள் ஆத்திரமடைந்து கார் கண்ணாடியை உடைத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து நிதின் சாய், அபிஷேக் சென்ற இருசக்கர வாகனத்தை விரட்டிச் சென்று காரைக் கொண்டு மோதி நிதின் சாயை கொலை செய்ததும் தெரியவந்தது.

    இதனையடுத்து சந்துரு காவல்துறையில் சரணடைந்தார். பிரணவ் உள்ளிட்ட மேலும் 3 பேரை திருமங்கலம் காவல்துறையினர் கைது செய்தனர். வழக்கில் முதல் குற்றவாளியான சந்துரு ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

    இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான மாநகர குற்றவியல் வழக்கறிஞர் ஜி தேவராஜன், முதலில் விபத்து வழக்காக பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு பின்னர் கொலை வழக்காக மாற்றப்பட்டது. மனுதாரர் வழக்கில் முக்கிய குற்றஞ்சாட்டப்பட்ட நபர், எனவே ஜாமீன் வழங்கக் கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

    மேலும் விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது. இன்னும் ஒரு மாணவன் அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார். இன்னும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டி உள்ளது. கொலை செய்யப்பட்ட மாணவருக்கும், மனுதாரருக்கும் முன் விரோதம் உள்ளது. மேலும் கொலை வழக்கில் இன்னும் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என தெரிவித்தார். அரசு வழக்கறிஞரின் வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    மாணவர் கொலை வழக்கில் திமுக கவுன்சிலர் பேரனின் ஜாமீன் மனு தள்ளுபடி

    August 7, 2025
    மாநிலம்

    கருணாநிதியின் 7-ம் ஆண்டு நினைவு தினம்: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி

    August 7, 2025
    மாநிலம்

    ஒருங்கிணைந்த போக்குவரத்து வளாகம் அமைப்பதற்காக பிராட்வேயில் ‘குறளகம்’ கட்டிடம் இடிக்கும் பணி தீவிரம்

    August 7, 2025
    மாநிலம்

    மாற்று இடங்களில் வீடுகளை ஒதுக்கி தரக் கோரி: மெரினாவில் திருநங்கைகள் திடீர் சாலை மறியல்

    August 7, 2025
    மாநிலம்

    இதர போக்குவரத்துக் கழகங்களில் வழங்கப்பட்ட பயண அட்டையை பயன்படுத்தி தமிழறிஞர்கள் கட்டணமின்றி பயணிக்கலாம்: எம்டிசி தகவல்

    August 7, 2025
    மாநிலம்

    சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் 7-வது நாளாக போராட்டம்: ராயபுரம், திரு.வி.க. நகரில் குப்பை தேக்கம்

    August 7, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மாணவர் கொலை வழக்கில் திமுக கவுன்சிலர் பேரனின் ஜாமீன் மனு தள்ளுபடி
    • புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை: பவுன் ரூ.75,200-க்கு விற்பனை!
    • பன்னீர் தூய்மை சோதனை உதவிக்குறிப்புகள்: 196 தரமற்ற மற்றும் 59 பாதுகாப்பற்ற பன்னீர் மாதிரிகள் சண்டிகரில் பறிமுதல் செய்யப்பட்டன: வீட்டில் தூய்மையை சோதிக்க 5 வழிகள்
    • ரூ.15 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்ட நக்சலைட் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை
    • ஜூலை மாத சிறந்த வீரர் விருது – ஷுப்மன் கில் பெயர் பரிந்துரை!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.