Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, August 4
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»Bihar SIR குறித்து நாடாளுமன்ற விவாதத்துக்கு அரசு ஒப்புக்கொள்ள வேண்டும்: பிரியங்கா காந்தி
    தேசியம்

    Bihar SIR குறித்து நாடாளுமன்ற விவாதத்துக்கு அரசு ஒப்புக்கொள்ள வேண்டும்: பிரியங்கா காந்தி

    adminBy adminAugust 4, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    Bihar SIR குறித்து நாடாளுமன்ற விவாதத்துக்கு அரசு ஒப்புக்கொள்ள வேண்டும்: பிரியங்கா காந்தி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை ஏற்கப்படாததால் மக்களவை இன்று காலை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இந்த விவகாரத்தை அரசு விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள முன்னேற வேண்டும் என்று பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் 11-வது நாளான இன்று மக்களவை காலை 11 மணிக்குக் கூடியதும் முதல் நிகழ்வாக கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர். சபாநாயகர் ஓம் பிர்லா இதனை ஏற்க மறுத்துவிட்டார். இதனால், அவையில் அமளி நீடித்ததை அடுத்து அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    இதையடுத்து, நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி வத்ரா, “இது (Bihar SIR) மிகவும் தீவிரமான பிரச்சினை. இது வாக்காளர் பட்டியல் தொடர்பானது எனும்போது நாங்கள் ஏன் இந்தப் பிரச்சினையை எழுப்பக்கூடாது? அரசாங்கம் விவாதத்துக்கு ஒப்புக்கொண்டு அடுத்த கட்டத்துக்கு நகர வேண்டும்” என தெரிவித்தார்.

    முன்னதாக, Bihar SIR விவகாரம் குறித்து நாடாளுமன்ற மக்களவையில் விவாதிக்க வலியுறுத்தி காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாக்கூர் ஒத்திவைப்பு தீர்மானத்தை சமர்ப்பித்திருந்தார். அவர் அந்த தீர்மானத்தில், “SIR விவகாரம் ஏழை எளிய மக்களை பாதித்துள்ளது. பலர் வாக்குரிமையை இழந்துள்ளனர். இதுபோன்ற இலக்கு வைக்கப்பட்ட வாக்குரிமை இழப்பு அடுத்ததாக அஸ்ஸாம், மேற்கு வங்கம் போன்ற பிற மாநிலங்களுக்கும் பரவக்கூடும்.

    இந்த நடைமுறையின் சட்டப்பூர்வ தன்மை குறித்தும் விளைவுகள் குறித்தும் விரிவான வெளிப்படையான விவாதம் அவையில் நடத்தப்பட வேண்டும். வாக்களிப்பதற்கான அரசியலமைப்பு உரிமைக்கு இது அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தல் நடத்தப்படுவதை இது பாதிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    பிலிப்பைன்ஸ் அதிபர் மார்கோஸ் 5 நாள் பயணமாக இந்தியா வருகை: பிரதமர் மோடியுடன் நாளை சந்திப்பு

    August 4, 2025
    தேசியம்

    பிஹார் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளி: மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

    August 4, 2025
    தேசியம்

    ஷிபு சோரன் மறைவு: குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் அஞ்சலி

    August 4, 2025
    தேசியம்

    ‘டெல்லியில் என்னிடம் தங்கச் சங்கிலி பறிப்பு’ – அமித் ஷாவுக்கு சுதா எம்.பி. கடிதம்

    August 4, 2025
    தேசியம்

    ‘உண்மையான இந்தியராக இருந்தால் இப்படி பேச மாட்டீர்கள்’ – ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

    August 4, 2025
    தேசியம்

    ஷிபு சோரன் மறைவுக்கு அஞ்சலி – மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

    August 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • வரி விதிப்பு எதிரொலியால் அமெரிக்காவுக்கு முட்டை ஏற்றுமதி நிறுத்தம்: ஏற்றுமதியாளர்கள் கவலை
    • வீட்டில் குங்குமப்பூவை வளர்ப்பது எப்படி: உலகின் மிக அருமையான மசாலாவை சிறிய இடைவெளிகளில் வளர்ப்பதற்கான வழிகாட்டி | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பிலிப்பைன்ஸ் அதிபர் மார்கோஸ் 5 நாள் பயணமாக இந்தியா வருகை: பிரதமர் மோடியுடன் நாளை சந்திப்பு
    • சிராஜ் அபாரம்: ஓவல் டெஸ்ட்டில் த்ரில் வெற்றியுடன் தொடரை சமன் செய்தது இந்தியா!
    • அணு ஆயுதம் குறித்து பேசும்போது மிகுந்த எச்சரிக்கைத் தேவை: ரஷ்யா வலியுறுத்தல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.