சென்னை: தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பேசி வருவதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் தீர்க்கப்படாத தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் பிரச்சினையில், திமுக அரசு பொறுப்பேற்றதும் தமிழக முதல் வர் அவர்களின் கோரிக்கையை ஏற்று லைட்டர்கள் இறக்குமதிக்கு தடை விதிக்குமாறு 2022 செப்.8-ம் தேதி மத்திய வர்த்தகத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதினார். தமிழக அரசின் தொடர் அழுத்தத்தால் மத்திய அரசு 2023 ஜூன் 29-ம் தேதி ரூ.20-க்கும் குறைவான லைட்டர்கள் இறக்குமதிக்கு தடை விதித்தது.
இருப்பினும், மற்ற நாடுகளில் இருந்து லைட்டர்கள், உதிரிபாகங்களாக, இந்தியாவுக்குள் சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்டு, லைட்டர்களாக பொருத்தப்பட்டு மீண்டும் விற்பனை செய்யப்பட்டன. இதுகுறித்து மீண்டும் மத்திய அமைச்சர்களிடம் எடுத்துரைக்கப்பட்டு கடந்தாண்டு அக். 13-ம் தேதி இறக்குமதிக்கு கட்டுப் பாடு விதிக்கப்பட்டது.
ரஷ்யா, உக்ரைன் போர், அமெரிக்கா பொருளாதார கட்டுபாடு காரணமாக பொட்டாசியம் குளோரைடு இறக்குமதி தடை செய்யப்பட்டதால் தீப்பெட்டி தொழில் பாதித்தது. இதையடுத்து, சென்னை பெட்ரோ கெமிக்கல் மூலம் மொத்தமாக கொள்முதல் செய்து தீப்பெட்டி தயாரிப்பாளர்களுக்கு அரசு வழங்கியது. பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்வதையே வாடிக்கையாக கொண்ட எதிர்க்கட்சித் தலைவருக்கு திமுக அரசின் நட வடிக்கை எல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இதபோல் ரூ.6.42 கோடி அரசு மானியத்துடன், ரூ.7.13 கோடி மதிப்பீட்டில் கடலை மிட்டாய் உற்பத்திக்கான பொது வசதி மையம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் இது பயன்பாட்டுக்கு வரும். குறு சிறு நடுத்தர தொழில் துறைக்கு அதிமுக ஆட்சியில் ரூ.3,617.62 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ரூ.6,626 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆட்சி பொறுப்பேற்று 4 ஆண்டு காலத்தில் 5 சுய வேலை வாய்ப்பு திட்டங்களின்கீழ் ரூ.2,057.90 கோடி மானியத்துடன், ரூ.5,301.53 கோடி வங்கிக் கடன் வழங்கி 63,014 புதிய தொழில் முனைவோர் உருவாக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பேசி வருகிறார். இவ்வாறு கூறியுள்ளார்.