சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, எழும்பூரிலிருந்து இயக்கப்பட்டு வந்த 6 விரைவு ரயில்கள் தாம்பரத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. இதனால், சார்மினார் விரைவு ரயில், கடற்கரை ரயில் நிலையத்துக்கு மாற்றப்பட்டு, அங்கிருந்து இயக்கப்படுகிறது. இந்த ரயில் ஆக.18-ம் தேதி வரை கடற்கரையிலிருந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த ரயில் இந்த ஆண்டு டிசம்பர் இறுதி வரை கடற்கரையிலிருந்து இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சார்மினார் விரைவு ரயில் கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து மாலை 6.20 மணிக்கும் புறப்படும். ஐதராபாத்தில் இருந்து புறப்படும் சார்மினார் விரைவு ரயில் சென்னை கடற்கரைக்கு காலை 7.15 மணிக்கு வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.