Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, August 2
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»ஆன்மீகம்»காசி – ராமேசுவரம் கோயில் தீர்த்தங்களை பரிமாறிக்கொள்ள வழிபாட்டு ஒப்பந்தம்
    ஆன்மீகம்

    காசி – ராமேசுவரம் கோயில் தீர்த்தங்களை பரிமாறிக்கொள்ள வழிபாட்டு ஒப்பந்தம்

    adminBy adminAugust 2, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    காசி – ராமேசுவரம் கோயில் தீர்த்தங்களை பரிமாறிக்கொள்ள வழிபாட்டு ஒப்பந்தம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ராமேசுவரம்: உத்தர பிரதேச மாநிலத்​தில் உள்ள காசி விஸ்​வ​நாதர் கோயில், தமிழகத்​தில் உள்ள ராமேசுவரம் ராம​நாத சுவாமி கோயில் தீர்த்​தங்​களைப் பரி​மாறிக் கொள்​வதற்​கான ஆன்​மிக வழி​பாட்டு ஒப்​பந்​தம் நேற்று மேற்​கொள்​ளப்​பட்​டது.

    சாஸ்​திர மரபின்​படி, ராமேசுவரத்​தில் உள்ள ராம​நாத சுவாமிக்கு திரிவேணி சங்கம நீரால் அபிஷேகம் செய்​வதும், காசி விஸ்வநாதருக்கு ராமேசுவரம் கோடி தீர்த்த நீரால் அபிஷேகம் செய்​வதும் மிக​வும் முக்​கிய​மானவை ஆகும். அதே​போல, ராமேசுவரம் அக்னி தீர்த்​தக் கடற்​கரை​யின் மணலை​யும், பிர​யாக் சங்கம மணலுடன் கலந்து வழிபடு​வதும் சாஸ்​திரங்​களில் குறிப்​பிடப்​பட்​டுள்​ளது.

    இந்த சாஸ்​திர மரபு​களை நடை​முறைக்​குக் கொண்டு வரு​வதற்​கு, அதாவது காசி விஸ்​வ​நாதருக்கு ராமேசுவரம் கோடி தீர்த்த நீரால் அபிஷேகம் செய்​ய​வும், ராமேசுவரம் ராம​நாதசு​வாமிக்கு திரிவேணி சங்கம நீரால் அபிஷேகம் செய்​ய​வும் ஆன்​மிக வழி​பாட்டு ஒப்​பந்​தம் தேவகோட்டை சமஸ்​தானம் மூலம் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளது.

    ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் அபிஷேகம் செய்யப்பட்ட

    கோடி தீர்த்த நீருடன் தேவகோட்டை சமஸ்தான நிர்வாகிகள்.

    இதற்​காக, கடந்த ஜுலை 28-ம் தேதி உத்தர பிரதேச மாநிலம் காசி விஸ்​வ​நாதர் கோயி​லில் திரிவேணி சங்கம தீர்த்​தம் கொண்டு காசி விஸ்​வ​நாதருக்கு அபிஷேகம் செய்​யப்​பட்​டது. தொடர்ந்து இந்த தீர்த்த நீரை உத்தர பிரதேச முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத், தேவகோட்டை சமஸ்​தான குடும்​பத்​தைச் சேர்ந்த சி.ஆர்​.எம். அருணாசலம் மற்​றும் கோவிலூர் சுவாமிகள் ஆகியோரிடம் வழங்கினார்.

    தொடர்ந்து, ராமேசுவரம் கோயி​லில் ராம​நாத சுவாமி மற்​றும் பர்​வதவர்​த்தினி அம்​பாளுக்கு கோடி தீர்த்த நீரால் நேற்று சிறப்பு அபிஷேகம் செய்​யப்​பட்​டு, இந்​த தீர்த்த நீர் தேவகோட்டை சமஸ்​தான குடும்​பத்​தினரிடம் வழங்​கப்​பட்​டது.

    இதுகுறித்து தேவகோட்டை சமஸ்​தான குடும்​பத்​தைச் சேர்ந்த சி.ஆர்​.எம். அருணாசலம் கூறும்​போது, “ராமேசுவரம் ராம​நாத சுவாமி கோயிலுக்கு தேவகோட்டை சமஸ்​தானம் மூலம் பல்​வேறு திருப்​பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளன.

    அதன் ஒரு பகுதியாக காசி விஸ்​வ​நாதருக்கு ராமேசுவரம் கோடி தீர்த்த நீரால் அபிஷேகம் செய்​ய​வும், ராமேசுவரத்​தில் உள்ள ராம​நாத சுவாமிக்கு திரிவேணி சங்கம நீரால் அபிஷேகம் செய்​ய​வும் தேவகோட்டை சமஸ்​தானம் நடவடிக்​கைகளை மேற்​கொண்​டுள்​ளது. இது, வட இந்​தியா மற்​றும் தென் இந்​தி​யா​வின் காசி-​ராமேசுவரத்தை ஆன்​மிக ஒரு​மைப்​பாடு மற்​றும் தேசப்​பற்​றின் அடிப்​படை​யில் இணைக்​கும் புதிய முயற்​சி​யாகும்” என்​றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    ஆன்மீகம்

    படவேடு ரேணுகாம்பாள் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்

    August 1, 2025
    ஆன்மீகம்

    பழமையான கோயில்களில் ஆகம விதிப்படி அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும்: ஸ்ரீ வில்லிபுத்தூர் ஜீயர் கருத்து

    August 1, 2025
    ஆன்மீகம்

    குற்றாலம் குழல்வாய்மொழி அம்மன் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்

    July 31, 2025
    ஆன்மீகம்

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக நெற்கதிர் வழங்கல்

    July 31, 2025
    ஆன்மீகம்

    மேட்டுப்பாளையம் வன பத்திரகாளியம்மன் கோயிலில் குண்டம் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்

    July 29, 2025
    ஆன்மீகம்

    நிறைபுத்தரி பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறப்பு

    July 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • விழுப்புரம் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம் நெரிசலில் சிக்கித் தவித்த நோயாளிகள்!
    • “அம்மா ஆரோக்கிய திட்டத்தையே ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ என நடத்துகின்றனர்” – இபிஎஸ் தாக்கு
    • “அதிமுக ஆட்சி அமைந்ததும் போதைப் பொருள் நடமாட்டத்துக்கு முடிவு கட்டப்படும்” – பழனிசாமி உறுதி
    • நரம்பு மண்டலத்தை ஒழுங்குபடுத்துவதற்கான 9 ஆயுர்வேத பழக்கம்
    • சுங்க கட்டண நிலுவையில் 50 சதவீதத்தை ஆக.15-க்குள் செலுத்த முடிவு: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.