Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, August 2
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»Bihar SIR | எதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
    தேசியம்

    Bihar SIR | எதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

    adminBy adminAugust 1, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    Bihar SIR | எதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டன.

    நாடாளுமன்றம் வழக்கம்போல் இன்று காலை 11 மணிக்குக் கூடியது. சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் மக்களவை கூடியது. கேள்வி நேரம் தொடங்கியதும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் அவையில் அமளியில் ஈடுபட்டனர். பிஹாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

    இதனை ஏற்க மறுத்த சபாநாயகர் ஓம் பிர்லா, கேள்வி நேரம் தொடரும் என்றும் உறுப்பினர்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். எனினும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்கள் கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

    இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சபாநாயகர் ஓம் பிர்லா, உங்கள் அணுகுமுறை மிகவும் தவறானது. நாடாளுமன்ற விதிமுறைகளை நீங்கள் பின்பற்ற வேண்டும். ஜனநாயகம் வலுப்பட வேண்டும் என்றால், பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும். இதுபோல் அமளியில் ஈடுபடுவதற்காக உங்களை மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை. மக்கள் தங்கள் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் நீங்கள் பேச வேண்டும் என்பதற்காகவே உங்களை தேர்ந்தெடுத்துள்ளார்கள் எனக் கூறினார்.

    சபாநாயகரின் வார்த்தைகளை ஏற்க மறுத்த உறுப்பினர்கள், அவரது இருக்கையை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து, அவையை 2 மணி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

    இதேபோல், மாநிலங்களவை அதன் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் தலைமையில் கூடியது. அப்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தினர். இதை ஹரிவன்ஷ் ஏற்க மறுத்ததை அடுத்து அவர்கள் அமளியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் அவர்களை சமாதானப்படுத்த ஹரிவன்ஷ் முயன்றார். எனினும், எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கோஷங்களை எழுப்பியபடி இருந்ததால் அவையை 12 மணிக்கு ஒத்திவைத்தார். அவை மீண்டும் அவை கூடியபோதும் அமளி நீடித்ததால், நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

    முன்னதாக, நாடாளுமன்றத்துக்கு வெளியே எதிர்க்கட்சி எம்பிக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து இரு அவைகளும் விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தினர். பிஹார் வாக்காளர் பட்டியலின் வரைவுப் பட்டியலை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    பிஹார் வரைவு வாக்காளர் பட்டியலில் எனது பெயர் இல்லை: தேஜஸ்வி யாதவ்

    August 2, 2025
    தேசியம்

    2024 மக்களவை தேர்தலில் மோசடி நடந்ததற்கான ஆதாரம் உள்ளது: ராகுல் காந்தி

    August 2, 2025
    தேசியம்

    உ.பி. அரசு நிலத்தில் ரூ.250 மாத வாடகையில் இயங்கும் சமாஜ்வாதி கட்சி அலுவலகம்: காலி செய்ய உத்தரவு

    August 2, 2025
    தேசியம்

    கடந்த ஆண்டு சைபர் குற்றங்கள் மூலமாக ரூ.23,000 கோடியை இழந்த இந்தியர்கள்

    August 2, 2025
    தேசியம்

    கர்நாடக முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி: பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு

    August 2, 2025
    தேசியம்

    பிஹார் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: செப். 1-ம் தேதி வரை ஆட்சேபனை தெரிவிக்க அவகாசம்

    August 2, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நீதிமன்ற பிடிவாரண்ட்கள் மீது குறித்த நேரத்தில் நடவடிக்கை: காவல் துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
    • 5 குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்க உதவுவதற்கான உதவிக்குறிப்புகள் அது அவர்களின் முதல் மொழியாக இல்லாவிட்டால் – இந்தியாவின் டைம்ஸ்
    • டெல்டா காக்பிட் ரெய்டு: சிறுவர் பாலியல் துஷ்பிரயோக முகங்களால் குற்றம் சாட்டப்பட்ட இந்திய மூல பைலட் 24 மோசமான எண்ணிக்கைகள்; ஜாமீன் 15 மில்லியன் டாலர் – டைம்ஸ் ஆப் இந்தியா
    • பிஹார் வரைவு வாக்காளர் பட்டியலில் எனது பெயர் இல்லை: தேஜஸ்வி யாதவ்
    • ஆண்டிபட்டி: ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம் மேடையில் திமுக எம்பி, எம்எல்ஏ வாக்குவாதம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.