Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, August 2
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»சென்னையில் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்: மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்
    மாநிலம்

    சென்னையில் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்: மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்

    adminBy adminJuly 31, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சென்னையில் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்: மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: சென்​னை​யில் தெரு​நாய்​கள் தொல்​லையை கட்​டுப்​படுத்த வேண்​டும் என்று மாநக​ராட்சி மன்ற கூட்​டத்​தில் கவுன்சிலர்​கள் புகார் தெரி​வித்​துள்​ளனர். சென்னை மாநக​ராட்சி மாமன்​றக் கூட்​டம் மேயர் ஆர்​.பிரியா தலை​மை​யில், துணை மேயர் மு.மகேஷ்கு​மார், ஆணை​யர் ஜெ.குமரகுருபரன் ஆகியோர் முன்​னிலை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் பங்​கேற்ற திமுக கவுன்​சிலர்​கள் `ஓரணி​யில் தமிழ்​நாடு’ என்ற பேட்ஜ் அணிந்து வந்​திருந்​தனர்.

    கூட்​டத்​தில் பேசிய கவுன்​சிலர்​கள் பலர், “சென்னை மாநக​ராட்​சி​யில் உள்ள சாலைகளில் தெரு​நாய்​களின் தொல்லை அதி​கரித்து வரு​கிறது. ரிப்​பன் மாளிகை வளாகத்​திலேயே ஏராள​மான நாய்​கள் உள்​ளன. இவை பொது​மக்​களுக்கு பெரிய அச்​சுறுத்​தலாக உள்​ளன.

    அவற்​றைக் கட்​டுப்​படுத்த நடவடிக்கை எடுக்க வேண்​டும்” என்று தெரி​வித்​தனர். இதற்கு பதில் அளித்த மேயர், “சென்னை சாலைகளில் சுற்​றும் தெரு நாய்​களை பிடித்​து, இனக்​கட்​டுப்​பாடு செய்து வரு​கிறோம். ஒரு நாளில் 85 நாய்​களுக்​கு​தான் இனக்​கட்​டுப்​பாடு செய்ய முடி​யும்.

    அவற்​றுக்கு வெறி நோய் தடுப்​பூசி​யும் போடப்​படு​கிறது. இனக்​கட்​டுப்​பாடு செய்த பிறகு, அவற்​றுக்கு மைக்ரோ சிப் பொருத்தி கண்​காணிக்க நடவடிக்கை எடுத்து வரு​கிறோம்” என்​றார். தொடர்ந்து பேசிய கவுன்​சிலர்​கள், “தெரு நாய்​களைப் பிடித்து இனக்​கட்​டுப்​பாடு செய்​வது மட்​டும் தீர்​வா​காது” என்​றனர்.

    பின்​னர் இக்​கூட்​டத்​தில் நிறைவேற்​றப்​பட்ட தீர்​மானங்​கள்: மாநக​ராட்சி கவுன்​சிலர்​கள் 200 பேர் ரூ.4 லட்​சம் செல​வில் முழு உடல் பரிசோதனை செய்​து​கொள்ள மாநக​ராட்சி மேயர் ஆர்​.பிரியா நிர்​வாக அனு​மதி அளித்​ததற்கு மாமன்​றக் கூட்​டத்​தில் ஒப்​புதல் அளித்து தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது.

    எதிர்​வரும் வடகிழக்கு பரு​வ​மழையை முன்​னிட்​டு, பெரு​மழை​யால் தாழ்​வான பகு​தி​களில் ஏற்​படும் வெள்ள பாதிப்பை சீர்​செய்ய அனைத்து மண்​டலங்​களி​லும் பயன்​படுத்த 150 ராட்சத மோட்​டார் பம்​பு​கள், டிராக்​டர் மூலம் இயங்​கும் 477 நீர் இறைக்​கும் இயந்​திரங்​களை வாடகை அடிப்​படை​யில் பயன்​படுத்​த​வும், மணலி மண்​டலம், 17-வது வார்​டு, கொசப்​பூர்பகு​தி, தியாகி விசுவ​நாத​தாஸ் நகரில் அமைந்​துள்ள பூங்கா​வுக்கு `முத்​தமிழ் அறிஞர் கலைஞர் பூங்​கா’ என பெயர் சூட்​ட​வும் மாமன்​றத்​தில் அனு​மதி அளிக்​கப்​பட்​டுள்​ளது.

    மறைந்த நடிகர் ஜெய்​சங்​கர் வசித்துவந்த, தேனாம்​பேட்டை மண்​டலம், 111-வது வார்​டு, கல்​லூரி பாதையை, `ஜெய்​சங்​கர் சாலை’ எனப் பெயர் மாற்​றம் செய்ய அரசின் ஒப்​புதலைப் பெற அனு​மதி அளித்​தும், டாக்​டர் ராதாகிருஷ்ணன் சாலை மற்​றும் காம​ராஜ் சாலை​யில் ஏற்​படும் போக்​கு​வரத்து நெரிசலைத் தவிர்க்க, அச்​சாலைகளை ரூ.19 கோடி​யில் அகலப்​படுத்​த​வும், தனி வழிச் சாலை அமைக்​க​வும் அனு​மதி அளிக்​கப்​பட்​டுள்​ளது.

    பேசின் பாலம் சாலை, வேப்​பேரி நெடுஞ்​சாலை, அண்​ணாநகர் 6-வது நிழற்​சாலை, சி.​வி.​ராமன் சாலை, ஜி.என்.செட்டி சாலை, பி.எஸ்​.கு​மாரசு​வாமி ராஜா சாலை, வேளச்​சேரி பிர​தானசாலை உள்​ளிட்ட 23 பேருந்து தட சாலை​யில் ரூ.28.80 கோடி​யில் நடை​பாதைகள் அமைக்​க​வும், ரிப்​பன் மாளி​கை​யில் ரூ.1 கோடி​யில் 15 பேர் செல்​லக்​கூடிய பெரிய மின்​தூக்கி அமைக்​க​வும், வானிலை நில​வரங்​களை கண்​காணிக்க 75 இடங்​களில் சுற்​றுச்​சூழல் சென்​சார்​களை நிறு​வ​வும் அனு​மதி அளிக்​கப்​பட்​டுள்​ளது. நேற்​றைய கூட்​டத்​தில்​ மொத்​தம்​ 117 தீர்​மானங்​கள்​ நிறைவேற்​றப்​பட்​டன.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    கவின் குடும்பத்தினரை சந்தித்து கனிமொழி, திருமாவளவன், நயினார் நாகேந்திரன் ஆறுதல்

    August 2, 2025
    மாநிலம்

    சென்னையில் ‘சிங்கா 60’ கலைத் திருவிழா தொடங்கியது: பார்வையாளர்களை வியக்க வைத்த ஓவியக் கண்காட்சி

    August 2, 2025
    மாநிலம்

    ‘வேர்களைத் தேடி’ திட்டத்தின்கீழ் தமிழகத்தில் 99 அயலகத் தமிழ் இளைஞர்கள் பண்பாட்டு பயணம்: முதல்வர் தொடங்கி வைத்தார்

    August 2, 2025
    மாநிலம்

    துவாக்குடி அரசு மாதிரி பள்ளியில் மாணவர் தற்கொலை – உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

    August 2, 2025
    மாநிலம்

    கவினின் உடலை ஐந்து நாட்களுக்குப் பிறகு பெற்றுக் கொண்ட உறவினர்கள்

    August 2, 2025
    மாநிலம்

    அதிமுக பொதுச் செயலாளர் தேர்வு விவகாரம்: இபிஎஸ் மனு தள்ளுபடி

    August 2, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கவின் குடும்பத்தினரை சந்தித்து கனிமொழி, திருமாவளவன், நயினார் நாகேந்திரன் ஆறுதல்
    • சென்னையில் ‘சிங்கா 60’ கலைத் திருவிழா தொடங்கியது: பார்வையாளர்களை வியக்க வைத்த ஓவியக் கண்காட்சி
    • ‘வேர்களைத் தேடி’ திட்டத்தின்கீழ் தமிழகத்தில் 99 அயலகத் தமிழ் இளைஞர்கள் பண்பாட்டு பயணம்: முதல்வர் தொடங்கி வைத்தார்
    • கவனிக்கப்படாமல் போகும் 15 கால்சியம் குறைபாடு அறிகுறிகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • துவாக்குடி அரசு மாதிரி பள்ளியில் மாணவர் தற்கொலை – உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.