Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, August 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பிரதமர் மோடியும், அதிபர் ட்ரம்பும் தொலைபேசியில் பேசவில்லை: ஜெய்சங்கர் தகவல்
    தேசியம்

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பிரதமர் மோடியும், அதிபர் ட்ரம்பும் தொலைபேசியில் பேசவில்லை: ஜெய்சங்கர் தகவல்

    adminBy adminJuly 31, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பிரதமர் மோடியும், அதிபர் ட்ரம்பும் தொலைபேசியில் பேசவில்லை: ஜெய்சங்கர் தகவல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் ட்ரம்பும் தொலைபேசியில் பேசவே இல்லை என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

    நாடாளுமன்ற மாநிலங்களவை யில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக நேற்று சிறப்பு விவாதம் நடைபெற்றது. இதில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:

    பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடங்கியதும் பல நாடுகளின் பிரதிநிதிகள் எங்களை தொடர்பு​கொண்டு பேசினர். அப்​போது, நிலைமை எவ்​வளவு தீவிர​மானது, சண்டை எவ்​வளவு காலம் நீடிக்​கும் என்பன உள்​ளிட்ட தகவலை அவர்​கள் கேட்​டறிந்​தனர்.

    மேலும் சமரசம் செய்ய தயா​ராக இருப்​ப​தாக​வும் தெரி​வித்​தனர். ஆனால், மூன்​றாம் தரப்​பின் எந்​த​வித சமரசத்​துக்​கும் இடம் இல்லை என அனைத்து நாடு​களிட​மும் நாங்​கள் திட்​ட​வட்​ட​மாக தெரி​வித்​தோம்.

    ‘‘இந்​தி​யா, பாகிஸ்​தான் இடையி​லான எந்த ஒரு பிரச்​சினைக்​கும் இருதரப்பு பேச்​சு​வார்த்தை மூலம் மட்​டுமே தீர்வு காணப்​படும். பாகிஸ்​தானின் தாக்​குதலுக்கு நாங்​கள் பதிலடி கொடுத்து வரு​கிறோம். சண்டை நிறுத்​தப்பட வேண்​டு​மா​னால், ராணுவ நடவடிக்​கைகளுக்​கான இயக்​குநரகம் (டிஜிஎம்ஓ) மூலம் மட்​டுமே பாகிஸ்​தான் கோரிக்கை வைக்க வேண்​டும்’’ என உலக நாடு​களிடம் தெரி​வித்​தோம். அத்​தகைய கோரிக்கை வந்த பிறகு​தான் போர் நிறுத்​தப்​பட்​டது.

    அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்​பின் உத்​தர​வால்​தான் பாகிஸ்​தான் உடனான போர் நிறுத்​தப்​பட்​ட​தாக எதிர்க்​கட்​சி​யினர் குற்​றம்​சாட்​டு​கின்​றனர். இதில் உண்மை இல்​லை. பஹல்​காம் தாக்​குதல் நடை​பெற்ற ஏப்​ரல் 22-ம் தேதி முதல் ஜூன் 16-ம் தேதி வரை​யில் பிரதமர் மோடி​யும் ட்ரம்​பும் தொலைபேசி​யில் பேசவே இல்​லை.

    சிந்து நதி நீர் ஒப்​பந்​தம் மிக​வும் தனித்​து​வ​மானது. உலகில் எந்த ஒரு நாடும், தங்​கள் நதி நீரின் பெரும் பகு​தியை பக்​கத்து நாட்​டுக்கு வழங்​கும் வகை​யில் ஒப்​பந்​தம் செய்​து​கொண்​ட​தாக வரலாறு இல்​லை.

    ஆனால், நம் நாட்டு நதி நீரின் பெரும்​பகு​தியை பாகிஸ்​தானுக்கு வழங்​கும் வகை​யில் காங்​கிரஸ் ஆட்​சிக் காலத்​தில் சிந்து நதி நீர் ஒப்​பந்​தம் போடப்​பட்​டது. இந்த வரலாற்றை காங்​கிரஸார்​ மறைக்​கின்​றனர்​. இவ்​வாறு அவர்​ தெரிவித்​தார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    அமெரிக்க உறவு முதல் நிமிஷா பிரியா வழக்கு நிலை வரை: இந்திய வெளியுறவுத் துறை விளக்கம்

    August 1, 2025
    தேசியம்

    பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என தீர்ப்பு

    August 1, 2025
    தேசியம்

    கன்னியாஸ்திரிகள் கைது | நீதிமன்றத்துக்கு அழுத்தம் தர காங். முயற்சி? – சத்தீஸ்கர் துணை முதல்வர் கேள்வி

    August 1, 2025
    தேசியம்

    பிஹார் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை இடம்பெறவில்லை

    August 1, 2025
    தேசியம்

    செப்.9-ல் குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஆணையம் அறிவிப்பு

    August 1, 2025
    தேசியம்

    நாட்டின் தொடர்பு மொழியாக சமஸ்கிருதத்தை மாற்ற வேண்டும்: ஆர்எஸ்எஸ் தலைவர் கருத்து

    August 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “மக்கள் ஏற்க மாட்டார்கள்…” – ஓபிஎஸ் ‘நகர்வு’க்கு ஹெச்.ராஜா ரியாக்‌ஷன்
    • வகை 2 நீரிழிவு நோயாளிகளுக்கு அமைதியான மாரடைப்பு; இங்கே நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பிரபல கல்வியாளர் வசந்தி தேவி காலமானார்!
    • ஆப்டிகல் மாயை: பூனை பாதங்களில் மறைக்கப்பட்ட இதயத்தை 7 வினாடிகளுக்குள் கண்டுபிடிக்கவும்! | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஓபிஎஸ் விலக இபிஎஸ் கொடுத்த அழுத்தம்தான் காரணமா? – நயினார் நாகேந்திரன் விளக்கம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.