Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, August 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»முன்னாள் எம்.பி. ஞானதிரவியம் மீதான வழக்கு விசாரணையை 6 மாதங்களில் முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
    மாநிலம்

    முன்னாள் எம்.பி. ஞானதிரவியம் மீதான வழக்கு விசாரணையை 6 மாதங்களில் முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

    adminBy adminJuly 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    முன்னாள் எம்.பி. ஞானதிரவியம் மீதான வழக்கு விசாரணையை 6 மாதங்களில் முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: திமுக முன்னாள் எம்.பி. ஞானதிரவியம் மீதான வழக்கின் விசாரணையை ஆறு மாதங்களில் முடிக்க வேண்டும் என, திருநெல்வேலி நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    திருநெல்வேலி மாவட்டம், இட்டேரி பகுதியைச் சேர்ந்த மதபோதகர் காட்ஃப்ரே நோபிள் என்பவரை, கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் 26-ம் தேதி, பாளையங்கோட்டை சிஎஸ்ஐ திருமண்டல அலுவலகத்தில் தாக்கியதாக, திருநெல்வேலி மக்களவை தொகுதி திமுக முன்னாள் எம்.பி. ஞானதிரவியம் உள்பட 33 பேர் மீது பாளையங்கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

    இந்த வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க திருநெல்வேலி நீதிமன்றத்திற்கு உத்தரவிட வேண்டும் என, புகார்தாரான காட்ஃப்ரே நோபிள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், முன்னாள் எம்பி ஞான திரவியத்திற்கு நீதிமன்றம் அனுப்பிய சம்மனை ஆறு மாதங்களாக வழங்காத பாளையம்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர்களை நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, இரு ஆய்வாளர்கள் நேரில் ஆஜராகியிருந்தனர். அப்போது, வழக்கின் விசாரணைக்கு கடந்த மார்ச் மாதம் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், நீதிமன்றம் பிறப்பித்த சம்மன் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்படவில்லை என, காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதி, 2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் பிறப்பிக்கப்பட்ட சம்மனை, மார்ச் வரை வழங்காதது குறித்து கேள்வி எழுப்பினார். புகார்தாரர் நோபிள், தனக்கு குற்றம் சாட்டப்பட்டவர்கள் மிரட்டல் விடுப்பதாகத் தெரிவித்தார். இதையடுத்து, நீதிமன்ற சம்மனை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்காத பாளையங்கோட்டை காவல்நிலையத்தின் அப்போதைய காவல் ஆய்வாளர் தில்லை நாகராஜனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டார்.

    மேலும், வழக்குப்பதிவு செய்வதில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில், சம்மன் அனுப்புவதில், சாட்சிகள் பதிவு செய்வதில் தாமதம் செய்யக் கூடாது என அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல்களை வழங்க டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டார்.

    திருநெல்வேலி நீதிமன்றத்தில் செப்டம்பர் 9-ம் தேதி குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் எம்.பி. உள்ளிட்ட அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் எனவும், இல்லாவிட்டால் அவர்களுக்கு எதிராக திருநெல்வேலி நீதிமன்றம் வாரன்ட் பிறப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

    இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு குற்றப் பத்திரிகை நகல்களை வழங்கி, ஒரு மாதத்தில் குற்றச்சாட்டுக்களை பதிவு செய்து, ஆறு மாதங்களில் வழக்கின் விசாரணையை முடிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி வேல்முருகன், வழக்கை விரைந்து முடிக்க காவல்துறையினர் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

    அதேபோல, புகார்தாரர் நோபிளுக்கு வழக்கு முடியும் வரை பாதுகாப்பு வழங்கும்படி திருநெல்வேலி காவல் ஆணையருக்கு உத்தரவிடும்படி, தமிழக டி.ஜி.பி.க்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், நீதிபதி தனது உத்தரவில், பெரும்பாலான வழக்குகள் விசாரணை தாமதத்துக்கு காவல்துறையினர் தான் காரணம். மெத்தனப்போக்கால் காவல்துறையினர் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர் என கண்டனம் தெரிவித்துள்ளார்



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    உங்களுடன் ஸ்டாலின்… எங்களுடன் எடப்பாடியார்..! – ஏட்டிக்குப் போட்டி செய்கிறதா அதிமுக?

    August 1, 2025
    மாநிலம்

    பாதுகாப்பு, வாழ்வாதார மேம்பாட்டுக்கான திருநங்கையர் நல கொள்கை வெளியீடு

    August 1, 2025
    மாநிலம்

    பாஜக கூட்டணியில் இருந்து விலகியதாக அறிவித்த பிறகு முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார் ஓபிஎஸ்

    August 1, 2025
    மாநிலம்

    ரிதன்யாவின் செல்போன் தடயவியல் சோதனை அறிக்கையை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

    August 1, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    August 1, 2025
    மாநிலம்

    ஓசூரில் கடந்த 3 மாதங்களில் தெரு நாய்கள் கடித்து 446 பேர் பாதிப்பு!

    August 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பக்கவாதம்: ஒரு புதிய மருந்து பக்கவாதத்திலிருந்து மூளை சேதத்தை 60% குறைக்கலாம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பிரக்யா தாக்குர் உட்பட 7 பேரும் விடுதலை
    • உங்களுடன் ஸ்டாலின்… எங்களுடன் எடப்பாடியார்..! – ஏட்டிக்குப் போட்டி செய்கிறதா அதிமுக?
    • பாதுகாப்பு, வாழ்வாதார மேம்பாட்டுக்கான திருநங்கையர் நல கொள்கை வெளியீடு
    • பாஜக கூட்டணியில் இருந்து விலகியதாக அறிவித்த பிறகு முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார் ஓபிஎஸ்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.