Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, July 31
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»ஆபரேஷன் சிவசக்தி: ஜம்மு காஷ்மீரின் பூஞ்சில் நடந்த என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
    தேசியம்

    ஆபரேஷன் சிவசக்தி: ஜம்மு காஷ்மீரின் பூஞ்சில் நடந்த என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

    adminBy adminJuly 30, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஆபரேஷன் சிவசக்தி: ஜம்மு காஷ்மீரின் பூஞ்சில் நடந்த என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைப்பகுதியில் இன்று பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு பூஞ்ச் மாவட்டத்தின் தேக்வார் செக்டாரின் கல்சியன்-குல்பூர் பகுதியில், இரண்டு முதல் மூன்று பயங்கரவாதிகள் ஊடுருவ முயல்வதாக பாதுகாப்புப் படைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையை தொடங்கிய நிலையில், இரு தரப்புக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது.

    இது குறித்து இந்திய ராணுவத்தின் 16-வது படைப்பிரிவு வெளியிட்ட அறிக்கையில், “தீவிரவாதிகளின் ஊடுருவல் தடுப்பு நடவடிக்கையான ஆபரேஷன் சிவசக்தி மூலமாக, இந்திய ராணுவத்தின் படைகள் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே ஊடுருவ முயன்ற இரண்டு பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றனர்.” என்று கூறப்பட்டுள்ளது.

    இந்த நடவடிக்கையின் வெற்றிக்கு ஜம்மு காஷ்மீர் காவல்துறையினரும் பங்களித்ததாகவும், தீவிரவாதிகள் எதிர்ப்பு நடவடிக்கையின்போது அவர்களிடமிருந்து மூன்று ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன என்றும் பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர். பூஞ்ச் மாவட்டத்தில் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    முன்னதாக, கடந்த ஜூலை 28ஆம் தேதி ஜம்மு – காஷ்மீரில் இந்​திய ராணுவம், சிஆர்​பிஎஃப் மற்​றும் மாநில போலீஸார் இணைந்து நடத்​திய `ஆபரேஷன் மகாதேவ்’ நடவடிக்​கை​யில் 3 தீவிர​வா​தி​கள் சுட்​டுக் கொல்​லப்​பட்டனர். கொல்​லப்​பட்ட 3 தீவிர​வா​தி​கள் சுலை​மான் என்​கிற ஃபைசல், ஹம்சா அப்​ஹான், ஜிப்​ரான் என அடையாளம் காணப்​பட்​டுள்​ளனர்.

    இதில், பஹல்​காம் தாக்​குதலுக்கு மூளை​யாகச் செயல்​பட்ட லஷ்கர்​-இ-தொய்​பா​வின் கமாண்​டர் சுலை​மான் என்பது குறிப்​பிடத்​தக்​கது. ஜிப்​ரான், ஹம்சா அப்​ஹான் இருவரும் பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மேலும், கடந்த ஆண்டு சோன​மார்க் சுரங்​கப்​பாதை தாக்​குதலில் ஈடு​பட்​ட​வர்​கள் ஜிப்​ரான் மற்றும் ஹம்சா அப்​ஹான் என்று அடை​யாளம் காணப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    காங்கிரஸின் ‘இந்து பயங்கரவாதம்’ சதி முறியடிக்கப்பட்டுள்ளது: மாலேகான் தீர்ப்பு குறித்து பாஜக கருத்து

    July 31, 2025
    தேசியம்

    Bihar SIR | தேர்தல் ஆணைய தலைமையகம் நோக்கி பேரணி செல்ல இண்டியா கூட்டணி திட்டம்!

    July 31, 2025
    தேசியம்

    பிஹார் வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு: தலைமை தேர்தல் ஆணையர்

    July 31, 2025
    தேசியம்

    இந்திய பொருளாதாரம் உயிரற்றது என்பது பிரதமர், நிதியமைச்சர் தவிர அனைவருக்கும் தெரியும்: ராகுல் காந்தி

    July 31, 2025
    தேசியம்

    “தேச நலனை காக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” – அமெரிக்க வரி விதிப்பு பற்றி பியூஷ் கோயல் கருத்து

    July 31, 2025
    தேசியம்

    சீனாவுக்கு எதிராக இந்தியாவை திருப்புவதற்கான அமெரிக்காவின் முயற்சியே 25% வரி விதிப்பு – ராம் மாதவ்

    July 31, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “சுர்ஜித்தின் தாயையும் கைது செய்வதில் போலீஸாருக்கு என்ன தயக்கம்?” – திருமாவளவன்
    • முசோரியுக்கு ஒரு பயணத்தைத் திட்டமிடுகிறீர்களா? இந்த புதிய சுற்றுலா விதிகள் ஒவ்வொரு பயணியும் தெரிந்து கொள்ள வேண்டும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • “அதிமுக சாதி, மதம் இல்லாத கட்சி” – எடப்பாடி பழனிசாமி
    • அமெரிக்காவின் 25% வரியால் இந்திய ஜவுளி, ஆடை ஏற்றுமதிக்கு எத்தகைய பாதிப்பு? – ‘சைமா’ விவரிப்பு
    • குளிர் மற்றும் இருமல் நிவாரணத்திற்காக இஞ்சி மற்றும் தேனை இணைப்பதன் சக்திவாய்ந்த நன்மைகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.