Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, July 31
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»மதுரை பிரச்சினைகளை டெல்லியில் அவர் என்றாவது பேசியுள்ளாரா? – சு.வெங்கடேசனுக்கு எதிராக கொந்தளித்த மேயர், கவுன்சிலர்கள்
    மாநிலம்

    மதுரை பிரச்சினைகளை டெல்லியில் அவர் என்றாவது பேசியுள்ளாரா? – சு.வெங்கடேசனுக்கு எதிராக கொந்தளித்த மேயர், கவுன்சிலர்கள்

    adminBy adminJuly 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மதுரை பிரச்சினைகளை டெல்லியில் அவர் என்றாவது பேசியுள்ளாரா? – சு.வெங்கடேசனுக்கு எதிராக கொந்தளித்த மேயர், கவுன்சிலர்கள்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: ​‘தி​முக தொண்​டர்​கள் ரத்​த​மும், வியர்​வை​யும் சிந்தி உழைத்​த​தாலேயே சு.வெங்​கடேசன் எம்​.பி.​யாகி​யுள்​ளார்’ என்று மாநக​ராட்சி கூட்​டத்​தில் திமுக மேயரும், அக்​கட்சியின் கவுன்​சிலர்​களும் கொந்​தளித்​தனர்.

    இந்​தி​யா​வின் தூய்மை நகரங்​களின் பட்​டியலில் மதுரை கடைசி இடம் பிடித்​தது குறித்து சு.வெங்​கடேசன் எம்​.பி. விமர்​சித்​திருந்​தார். மதுரை நகரின் தூய்மை மோச​மாக உள்​ளது, மாநக​ராட்சி சுய பரிசோதனை செய்​து​கொள்ள வேண்​டும். தூய்​மை​யைப் பாது​காக்க முதல்​வர் தலை​யிட வேண்​டும் என்று அவர் தெரி​வித்​திருந்​தார்.

    இந்​நிலை​யில், நேற்று நடை​பெற்ற மாநக​ராட்சி கூட்​டத்​தில் திமுக கவுன்​சிலர்​கள் குழுத் தலை​வர் மா.ஜெய​ராமன் பேசும்​போது, “தூய்மை நகரங்​கள் பட்​டியலில் பல்​வேறு குறை​பாடு​கள், முரண்​பாடு​கள் உள்​ளன. கீழடி ஆய்வை மதிக்​காத மத்​திய அரசின் அறிக்​கையை நாம் ஏன் மதிக்க வேண்​டும்? பல லட்​சம் பேர் பங்​கேற்ற சித்​திரை திரு​விழா, திருப்​பரங்குன் ​றம் கும்​பாபிஷேக நிகழ்ச்​சிகளில் மாநக​ராட்சி சிறப்​பான ஏற்​பாடு​ செய்​திருந்​தது. நாடு முழு​வதும் இருந்து வந்த கம்​யூனிஸ்ட் தலை​வர்​கள் பங்​கேற்ற மார்க்சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநாட்​டுக்கு மாநக​ராட்சி சார்​பில் சிறப்பான ஒத்துழைப்பு வழங்​கப்​பட்​டது. இதை அறியாமல், திமுக கூட்​ட​ணி​யில் இருந்​து​ கொண்டே எம்​.பி. சு.வெங்கடேசன் மதுரையை குப்பை மாநக​ராட்சி என்று இழி​வாகப் பேசி​யது மிகுந்த மனவருத்​தத்தை ஏற்​படுத்தி உள்ளது.

    திமுக தொண்​டர்​கள் ரத்​த​மும், வியர்வை​யும் சிந்தி உழைத்​த​தால்​தான் அவர் இன்று எம்​.பி.​யாக டெல்லி சென்று வரு​கிறார். மக்​களவை​யில் பாஜக எதிர்ப்பு தவிர, மதுரை மக்​கள் பிரச்​சினை​களை அவர் என்​றாவது பேசி​யுள்​ளா​ரா?” என்​றார். அதற்கு மார்​க்சிஸ்ட் கம்​யூனிஸ்​டைச் சேர்ந்த துணை மேயர் நாக​ராஜன், “தவறாக திரித்து சொல்ல வேண்​டாம். தனிப்​பட்ட முறை​யில் எம்​.பி. மீது விமர்​சனமோ, விரோதமோ கொள்ள வேண்​டாம். அவரது நிதி​யில் ஒவ்​வொரு வார்டிலும் வேலை நடந்​துள்​ளது” என்​றார்.

    மேயர் இந்​தி​ராணி “எம்​.பி. சு.வெங்​கடேசன் மீது எங்​களுக்கு மரி​யாதை உண்​டு. ஒட்​டுமொத்த தமிழக நகரங்​களை​யும், மத்​திய அரசு தூய்மை நகரங்​கள் பட்​டியலில் பின்​னுக்​குத் தள்​ளிய நிலை​யில், மதுரை மாநக​ராட்​சியை பற்றிமட்​டும் அவர் விமர்​சனம் செய்​ததை ஏற்​றுக்​கொள்ள முடி​யாது. தூய்​மைப் பணி​யாளர்​கள், அதி​காரி​களின் உழைப்பு மக்​களுக்கு தெரி​யும். அவருக்​குத் தெரி​யாமல் போனது​தான் வருத்​தம்” என்​றார். மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கவுன்​சிலர் விஜ​யா, “பட்​டிமன்​றம் மாதிரி பதி​லுக்கு பதில் பேசக்​கூ​டாது. எம்​.பி. சொன்ன தகவலை முழு​மை​யாக புரிந்​து​கொள்​ளாமல் பேசக்​கூ​டாது” என்​றார்.

    மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கவுன்​சிலர் குமர​வேல், “நாங்​கள் அதி​முக​வுக்கு எதி​ராக குரல் எழுப்​பவே வந்​தோம். ஆனால் திசை மாறி, கடைசி​யில் உங்​களுக்கு எதி​ராக​வும் எங்​களை பேச வைத்​து​விட்​டீர்​கள். எம்​.பி. டெல்லி செல்வதற்கு வியர்வை சிந்தி உழைத்​ததாக திமுக கவுன்​சிலர் ஜெய​ராமன் கூறி​னார். நீங்​கள் கொடுத்த 2 சீட்​டுக்​காக மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட்கட்​சித் தொண்​டர்​களும், தமிழகம் முழு​வதும் உங்​கள் வெற்​றிக்​காக உழைத்​துள்​ளனர். கம்யூனிஸ்ட், விசிக, காங்​கிரஸ் கூட்​டணி இருந்​தால்​தான் அடுத்து ஆட்சியைப் பிடிக்க முடி​யும், நினை​வில் வைத்​துக் கொள்​ளுங்​கள்” என்​றார். இதையடுத்​து, மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கவுன்​சிலர்​கள் இருக்கை அருகே சென்​று, அவர்​களுக்​கு எதி​ராக தி​முக​வினர்​ கோஷமிட்​ட​தால்​ பரபரப்​பு ஏற்​பட்​டது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    கனக சபை தரிசனம்: தீட்சிதர்கள் நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்க அறநிலையத் துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

    July 31, 2025
    மாநிலம்

    “நாங்கள் காதலித்தோம்; கொலையில் என் பெற்றோருக்கு தொடர்பு இல்லை” – கவினின் தோழி விவரிப்பு

    July 31, 2025
    மாநிலம்

    ராமநாதபுரத்தில் மீனவர்கள், நெசவாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடல்

    July 31, 2025
    மாநிலம்

    உடுமலை: வனத்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் மர்ம மரணம்: போலீஸ் விசாரணை

    July 31, 2025
    மாநிலம்

    ‘பாஜகவுடனான உறவு முறிந்தது’ – ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் ஓபிஎஸ் தரப்பு அறிவிப்பு

    July 31, 2025
    மாநிலம்

    ரூ.40,000 வரை மாற்றுத் திறனாளிகள், திருநங்கையருக்கு தனிநபர் கடன்: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஏற்பாடு

    July 31, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • இந்திய பொருளாதாரம் உயிரற்றது என்பது பிரதமர், நிதியமைச்சர் தவிர அனைவருக்கும் தெரியும்: ராகுல் காந்தி
    • கனக சபை தரிசனம்: தீட்சிதர்கள் நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்க அறநிலையத் துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
    • முக்கோண நரம்பியல் ஏன் தற்கொலை நோய் என்று அழைக்கப்படுகிறது, அதன் வலி எவ்வாறு தாங்கமுடியாது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • “தேச நலனை காக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” – அமெரிக்க வரி விதிப்பு பற்றி பியூஷ் கோயல் கருத்து
    • “நாங்கள் காதலித்தோம்; கொலையில் என் பெற்றோருக்கு தொடர்பு இல்லை” – கவினின் தோழி விவரிப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.