Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, July 31
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»மீனவர்கள், படகுகளை விடுவிக்க தூதரக நடவடிக்கை தேவை: ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
    மாநிலம்

    மீனவர்கள், படகுகளை விடுவிக்க தூதரக நடவடிக்கை தேவை: ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

    adminBy adminJuly 29, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மீனவர்கள், படகுகளை விடுவிக்க தூதரக நடவடிக்கை தேவை: ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள், படகுகளை விடுவிக்க தூதரக நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    இது குறித்து முதல்வர் அனுப்பியுள்ள கடிதத்தின் விவரம்: “இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தொடர்ந்து தடையின்றி கைது செய்யப்படுவது வேதனையளிக்கிறது. இன்று காலை ஜூலை 29-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் இயந்திரமயமாக்கப்பட்ட தங்களது மீன்பிடிப் படகுடன் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். மற்றொரு சம்பவத்தில் ஒன்பது மீனவர்கள் மோட்டார் பொருத்தப்பட்ட தங்களது நாட்டுப் படகுடன் இலங்கைக் கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.

    இச்சம்பவங்கள் ஒரு வாரத்துக்கு முன் நடந்த மற்றொரு சம்பவத்தின் தொடர்ச்சியாக நடைபெற்றுள்ளது. அச்சம்பவத்தில் நான்கு மீனவர்கள் தங்களது இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுடன் இதேபோன்று கைது செய்யப்பட்டனர். இந்த மாதத்தில் மட்டும் இது நான்காவது சம்பவமாகும். தொடர்ச்சியாக கைது நடவடிக்கைகலால், மீனவர்களின் குடும்பத்தினர் மனரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.

    மேலும், அவர்களின் வாழ்வில் நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போது, 235 மீன்பிடிப் படகுகளும், 68 மீனவர்களும் இலங்கை காவலில் உள்ளனர். நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, இலங்கை அதிகாரிகளின் பிடியில் உள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிக்க உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று முதல்வர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு: திருவேற்காடு நகராட்சி ஆணையர் ஆய்வு செய்ய ஐகோர்ட் உத்தரவு

    July 31, 2025
    மாநிலம்

    ஐடி ஊழியர் கொலைக்கு விசிக கண்டனம்: சாதிய கொலைகளை தடுக்க சட்டம் நிறைவேற்ற வலியுறுத்தல்

    July 31, 2025
    மாநிலம்

    “தான் ஏற்றிய மின்கட்டண உயர்வு குறித்து தானே பேசிவருகிறார் பழனிசாமி” – அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விமர்சனம்

    July 31, 2025
    மாநிலம்

    மு.க.ஸ்டாலின் மக்கள் நலன்களை பலி கொடுத்து செந்தில் பாலாஜியை பாதுகாக்க முயல்கிறார்: அன்புமணி

    July 30, 2025
    மாநிலம்

    திமுகவில் உறுப்பினராகி விட்டால் கொலை செய்ய உரிமம் வழங்கப்பட்டு  விடுமா? – அன்புமணி கண்டனம்

    July 30, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் 1.50 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவப்படும்: இந்து முன்னணி மாநிலத் தலைவர் தகவல்

    July 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு: திருவேற்காடு நகராட்சி ஆணையர் ஆய்வு செய்ய ஐகோர்ட் உத்தரவு
    • ஒளிரும் தோலுக்கான ஜாவிட்ரி: உங்கள் அதிக விலை கொண்ட சீரம் விட முகப்பருவை எதிர்த்துப் போராடும் சமையலறை மசாலா | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மோட்டோ ஜி86 பவர் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
    • இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீதம் வரி: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பால் உச்சகட்ட குழப்பம்
    • ஐடி ஊழியர் கொலைக்கு விசிக கண்டனம்: சாதிய கொலைகளை தடுக்க சட்டம் நிறைவேற்ற வலியுறுத்தல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.