Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, September 23
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»மதுரை: சொத்துவரி விவகாரத்தில் பதவி விலகக் கோரி மேயரை முற்றுகையிட்ட அதிமுக கவுன்சிலர்கள்
    மாநிலம்

    மதுரை: சொத்துவரி விவகாரத்தில் பதவி விலகக் கோரி மேயரை முற்றுகையிட்ட அதிமுக கவுன்சிலர்கள்

    adminBy adminJuly 29, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மதுரை: சொத்துவரி விவகாரத்தில் பதவி விலகக் கோரி மேயரை முற்றுகையிட்ட அதிமுக கவுன்சிலர்கள்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை; சொத்துவரி விவகாரத்தில் மேயர் இந்திராணி பதவி விலகக்கோரி, மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் கருப்புச் சட்டை அணிந்து வந்து அவரை முற்றுகையிட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.

    மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் 5 மண்டலத் தலைவர்கள், 2 நிலைக்குழு தலைவர்கள் ராஜினமா செய்த பிறகு முதல் முறையாக மாநகராட்சி கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் இன்று நடந்தது. ஆணையாளர் சித்ரா விஜயன், துணை மேயர் நாகராஜன் முன்னிலை வகித்தனர். பதவி விலகிய முன்னாள் மண்டலத் தலைவர்கள் வாசுகி, சரவண புவனேஷ்வரி, பாண்டிச்செல்வி, முகேஷ்சர்மா, சுவிதா ஆகியோர் மாமன்ற கூட்டத்திற்கு வராமல் புறக்கணித்தனர்.

    அவர்களுக்கு பின்வரிசையில் கவுன்சிலர்களுக்கான இடத்தில் ‘சீட்’ ஒதுக்கப்பட்டிருந்தது. அவர்கள் அமர்ந்த முன் வரிசையில் குழுத் தலைவர்கள் 2 பேருக்கும், மற்ற கவுன்சிலர்களுக்கும் ‘சீட்’ ஒதுக்கப்பட்டிருந்தது. மாநகராட்சி எதிர்க்கட்சித்தலைவர் சோலைராஜா தலைமையில் அதிமுக கவுன்சிலர்கள், மாநகராட்சி சொத்துவரி முறைகேட்டை கண்டித்து, கூட்டத்திற்கு கருப்புச் சட்டை அணிந்து வந்திருந்தனர்.

    மேயர் தீர்மானங்களை வாசிக்கத் தொடங்கியதும், மாநகராட்சி அதிமுக எதிர்கட்சித்தலைவர் சோலைராஜா மற்றும் அக்கட்சி கவுன்சிலர்கள் எழுந்து, ‘“சொத்துவரி முறைகேடுக்கு பொறுப்பேற்றும், விசாரணை நியாயமாக நடப்பதற்கும் மேயர் இந்திராணி பதவி விலக வேண்டும்.” என்று கூறி கோஷமிட்டனர்.

    தொடர்ந்து சோலைராஜா பேசுகையில், “சொத்துவரி முறைகேடுக்கு மூளையாக இருந்த ரவி, மேயரின் நேர்முக உதவியாளராக இருந்த பொன்மேணியின் கணவர். அதனால், மேயரையும் இந்த விவகாரத்தில் விசாரிக்க வேண்டும்,” என்றார். அதற்கு திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து, “உங்கள் ஆட்சியில்தான் மாநகராட்சியில் அதிகம் முறைகேடு நடந்துள்ளது, உங்கள் முன்னாள் அமைச்சரையும், முன்னாள் மேயரையும் விசாரிக்க வேண்டும்.” என எதிர்ப்பு கோஷமிட்டனர்.

    தொடர்ந்து அதிமுக கவுன்சிலர்கள், மேயரை நோக்கிச் சென்றனர். அவர்களை திமுக கவுன்சிலர்கள் தடுத்து வாக்குவாதம் செய்ததால், இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேயர் இந்திராணி, “இந்த மாமன்றம் அரசியல் செய்வதற்கான இடமில்லை. உங்கள் அரசியலை வெளியே போய் வைத்துக் கொள்ளுங்கள். மக்கள் பிரச்சினைகளை பேசுவதாக இருந்தால் மட்டும் இருங்கள், இல்லையென்றால் வெளியே செல்லுங்கள்.” என்று கூறி சபை காவலர்களையும், போலீஸாரையும் அழைத்து அவர்களை வெளியே அனுப்பும்படி உத்தரவிட்டார்.

    போலீஸார் உள்ளே வந்ததுக்கு அதிமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவும், திமுக கவுன்சிலர்கள் பதிலுக்கு கோஷமிடவும் மாநகராட்சி கூட்டத்தில் சிறிது நேரம் பெரும் கூச்சலும், குழப்பமும் நீடித்தது.

    அப்போது மேயர் இந்திராணி, “சொத்துவரி குறைப்பு குற்றச்சாட்டு வந்தவுடனேயே எங்கள் முதல்வர் நடவடிக்கை எடுத்து நியாயமான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். உங்கள் ஆட்சியில் நடந்த ஸ்மார்ட் சிட்டி ஊழல், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வீட்டில் திருடுபோன ரூ.200 கோடியை பற்றிச் சொல்லுங்கள். அதை விசாரித்தால் பல உண்மைகள் வெளிவரும். அதற்கு முதலில் பதில் சொல்லுங்கள்.” என்றார்.

    மேயரிடமும் சிறிதுநேரம் வாக்குவாதம் செய்த அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்கிறோம் என்றனர். அதற்கு மேயர் இந்திராணி, “ரொம்ப நன்றி, போய் வாருங்கள்.” என்றார்.

    திமுக கவுன்சிலர் ஜெயராஜ் இது குறித்து, “சொத்துவரி முறைகேடு குற்றச்சாட்டு உண்மையா, பொய்யா? என்பது இன்னும் தெரியவில்லை. ஆனால், குற்றச்சாட்டு இல்லை என்பதை நிரூபித்துவிட்டு வாங்கள் என்று மண்டலத் தலைவர்களை முதல்வர் பதவி விலகச் சொல்லிவிட்டார். தற்போது ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையிலான சிறப்புக் குழு விசாரிக்கிறது. முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வீட்டில் ரூ.200 கோடி திருடு போனது உண்மையென்றால், சொத்துவரி முறைகேடும் உண்மை. அது பொய்யென்றால் இதுவும் பொய்தான்.” என்றார்.

    காங்கிரஸ் கவுன்சிலர் கார்த்திகேயன், “மாமன்றத்தில் மக்கள் பிரச்சினைகளைப் பற்றி பேச வந்தால் அதற்குள் ஏதோதோ மனதிற்கு சங்கடமாக நடந்துவிட்டது. மாநகராட்சி வளாகத்திலேயே உள்ள சுற்றுச்சூழல் பூங்கா சரியான பராமரிப்பு இல்லாமல் உள்ளது. தன்னார்வலர்கள் வைத்த செடிகள், கருகிக் கிடக்கிறது. மாநகராட்சி வளாகத்திலேயே இந்த நிலைமை என்றால் மற்ற பூங்காக்களைப் பற்றி சொல்லவேண்டியதில்லை.” என தெரிவித்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    தங்கம் மீண்டும் வரலாறு காணாத விலை உயர்வு: வியாபாரிகள் கூறுவது என்ன?

    September 23, 2025
    மாநிலம்

    ‘சென்னை ஒன்’ செயலி – பஸ், ரயில், மெட்ரோ, கார், ஆட்டோவில் ஒரே பயணச்சீட்டில் பயணிக்கலாம்!

    September 22, 2025
    மாநிலம்

    தூத்துக்குடியில் ரூ.30,000 கோடி முதலீடு விவகாரம்: முதல்வர் ஸ்டாலின் மீது தமிழக பாஜக விமர்சனம்

    September 22, 2025
    மாநிலம்

    மும்மொழிக் கொள்கை மீது குறுகிய அரசியல் பார்வை: திமுக மீது தர்மேந்திர பிரதான் குற்றச்சாட்டு

    September 22, 2025
    மாநிலம்

    ஆவின் பால் விலையை குறைக்காதது மோசடி: ஜிஎஸ்டி அமல் விவகாரத்தில் தமிழக பாஜக சாடல்

    September 22, 2025
    மாநிலம்

    செப்.25-ல் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ சிறப்பு நிகழ்வு – தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பங்கேற்பு

    September 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • எச்1பி விசா: அமெரிக்க அரசின் அறிவிப்பால் விமானத்தில் இருந்து அவசரமாக இறங்கிய இந்தியர்கள்
    • தங்கம் மீண்டும் வரலாறு காணாத விலை உயர்வு: வியாபாரிகள் கூறுவது என்ன?
    • உங்கள் கிரீன் டீயில் இந்த மசாலாப் பொருட்களைச் சேர்ப்பதன் மூலம் இயற்கையாகவே எடை இழக்க: இலவங்கப்பட்டை, மஞ்சள் மற்றும் பல | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘காந்தாரா 2’ பார்க்கும் முன் மது, அசைவம் சாப்பிடக் கூடாதா? – வைரல் போஸ்டரின் பின்னணி!
    • பித்தப்பை அறுவை சிகிச்சைக்குப் பிறகு பின்பற்ற வேண்டிய உணவு: எளிதான செரிமானம் மற்றும் மீட்புக்கு என்ன சாப்பிட வேண்டும் மற்றும் தவிர்க்க | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.