Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, July 30
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»நிமிஷா மரண தண்டனை ரத்தா? – வெளியுறவு அமைச்சக வட்டாரம் மறுப்பு!
    தேசியம்

    நிமிஷா மரண தண்டனை ரத்தா? – வெளியுறவு அமைச்சக வட்டாரம் மறுப்பு!

    adminBy adminJuly 29, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    நிமிஷா மரண தண்டனை ரத்தா? – வெளியுறவு அமைச்சக வட்டாரம் மறுப்பு!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: ஏமன் நாட்டில் கேரள மாநில செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவலை இந்திய வெளியுறவு அமைச்சக வட்டாரம் மறுத்துள்ளது. கேரளா​வின் இஸ்​லாமிய மதத் தலை​வர் அபுபக்​கர் முஸ்​லி​யாரின் ‘கிராண்ட் முப்தி’ அலுவலகம் உறுதிப்படுத்திய நிலையில் வெளியுறவு அமைச்சகம் மறுத்துள்ளது.

    இது குறித்து வெளியுறவு அமைச்சக வட்டாரம், “நிமிஷா பிரியா வழக்கில் சில தனி நபர்கள் பகிரும் தகவல் துல்லியமானது அல்ல.” என்று தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதனை உறுதி செய்வது போல், நிமிஷாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதாக வெளியான செய்தியினை தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்த மதத் தலைவர் அபுபக்​கர் முஸ்​லி​யார், அந்தப் பதிவை நீக்கியுள்ளார்.

    குற்றப் பின்னணி என்ன? – கேரளா​வின் பாலக்​காட்டை சேர்ந்​தவர் நிமிஷா பிரியா (38). இவர் கடந்த 2008-ம் ஆண்டு ஏமன் தலைநகர் சனா​வில் உள்ள அரசு மருத்​து​வ​மனை​யில் செவிலிய​ராக பணி​யில் சேர்ந்​தார். கடந்த 2015-ல் அரசு செவிலியர் பணியை ராஜி​னாமா செய்த நிமிஷா, ஏமனைச் சேர்ந்த ஜவுளி வியா​பாரி தலால் அய்டோ மெஹ்​தி​யுடன் இணைந்து அங்கு புதிய மருத்​து​வ​மனையை தொடங்​கி​னார்.

    கருத்து வேறு​பாடு காரண​மாக கடந்த 2017-ம் ஆண்டு மெஹ்​திக்​கு, நிமிஷா மயக்க ஊசி மருந்தை செலுத்​தி​னார். இதில் அவர் உயிரிழந்​தார். இந்த வழக்கை விசா​ரித்த சனா நகர நீதி​மன்​றம் கடந்த 2020-ல் நிமிஷாவுக்கு மரண தண்​டனை விதித்​தது. இதை ஏமன் உச்ச நீதி​மன்​றம் உறுதி செய்​தது. இதையடுத்​து, ஜூலை 16-ம் தேதி நிமிஷாவுக்கு மரண தண்​டனை நிறைவேற்​றப்​படும் என்று ஏமன் அரசு அறி​வித்​திருந்​தது.

    சட்​டரீ​தி​யான முயற்​சிகள் தோல்வி அடைந்த நிலை​யில், மெஹ்தி குடும்​பத்​தினருக்கு ரூ.8.6 கோடி குரு​திப் பணம் அளித்து நிமிஷாவை மீட்க அவரது குடும்​பத்​தினர் தீவிர முயற்​சிகளை மேற்​கொண்டு வருகின்றனர். இதற்கு தேவை​யான உதவி​களை மத்​திய அரசு வழங்கி வரு​கிறது. இதனிடையே, நிமிஷா​வின் மரண தண்​டனையை தள்​ளிவைக்​கு​மாறு மத்​திய அரசு சார்​பில் ஏமன் அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்​டது.

    இந்த விவ​காரத்​தில் ஏமனின் நட்பு நாடான ஈரான் மூல​மாக​வும் மத்​திய அரசு அழுத்​தம் கொடுத்​தது. கேரளாவை சேர்ந்த முஸ்​லிம் மத தலை​வர் கிராண்ட் முப்தி ஏ.பி.அபுபக்​கர் முஸ்​லி​யாரும் மத்தியஸ்தத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது. இந்தப் பின்னணியில் நிமிஷா பிரி​யா​வின் மரண தண்​டனை தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதாக கேரளா​வின் இஸ்​லாமிய மதத் தலை​வர் அபுபக்​கர் முஸ்​லி​யாரின் ‘கிராண்ட் முப்தி’ அலுவலகம் தெரிவித்தது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    மேகாலயாவின் ஒற்றை காங்கிரஸ் எம்எல்ஏவும் ஆளும் என்பிபி கட்சியில் இணைந்தார்!

    July 30, 2025
    தேசியம்

    இஸ்ரோ – நாசா உருவாக்கிய ‘நிசார்’ செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம்

    July 30, 2025
    தேசியம்

    நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் உரிமை கோரப்படாத தொகை ரூ.67 ஆயிரம் கோடி: நாடாளுமன்றத்தில் அமைச்சர் தகவல்

    July 30, 2025
    தேசியம்

    பஹல்காம் தாக்குதலில் இறந்தவர்களின் குடும்பத்தினர் மத்திய அரசுக்கு பாராட்டு

    July 30, 2025
    தேசியம்

    லாலு மீதான வழக்கு விசாரணையை ஒத்திவைக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

    July 30, 2025
    தேசியம்

    பிரதமர் நரேந்திர மோடியின் பெருந்தன்மை: தேசியவாத காங். எம்.பி. சுப்ரியா சுலே புகழாரம்

    July 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் சிவகார்த்திகேயன்: முதற்கட்டப் பணிகள் தொடக்கம்
    • இழப்பீடு வழங்காததால் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் ஜப்தி நடவடிக்கை
    • ஆப்டிகல் மாயை: இந்த பயமுறுத்தும் முகம் அது போல் இல்லை. எப்படி என்று கண்டுபிடிக்க முடியுமா? | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஆக.1 முதல் இந்தியப் பொருட்களுக்கு 25% இறக்குமதி வரி: ட்ரம்ப் அறிவிப்பு
    • தமிழகத்தில் ஆக.2 முதல் 5-ம் தேதி வரை டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.